Friday, January 25, 2013

நாம் மறந்த இந்திய விடுதலைக்கா பாடுபட்ட போராளிகள் பற்றிய தகவல்!!!

நாம் மறந்த இந்திய விடுதலைக்கா பாடுபட்ட போராளிகள் பற்றிய தகவல்!!!

 

rahmanfayed : "ஆங்கிலயர்களிடம் இருந்து இந்தியாவிற்கு விடுதலை யார் வாங்கிதந்தார்கள்?" என்று நம் மக்களிடம் கேட்டால், உடனே கூறுவார்கள், "மகாத்மா காந்தி" என்று....

ஆம்!. அவர் தான், விடுதலை போரில், கடைசி காலத்தில் ஆங்கிலயர்கள் எதிராக அகிம்சை வழியில் தலைமை தாக்கி போர் செய்து வெற்றி வாகை சூடினர்...


மகாத்மா காந்தியை அறிந்த நாம், இந்திய விடுதலைக்கா பாடுபட்ட பலரை, நாம் அறியாமல் இருக்கிறோம், எனது தளத்தில், பல விடுதலை போராளிகளை வரலாற்றை வெளியிட்டு இருந்தேன். அதை தொகுத்து ஒரு முழு பதிவாக, இந்த பதிவை பதிவு செய்கிறேன்...


"வங்கம் தந்த சிங்கம்" சிராஜ்-உத்-தௌலாவின்வங்கம் தந்த சிங்கம்

சிராஜ்-உத்-தௌலா

இன்று முதல் சுதந்திர போராட்டம் 1857 என் கூறுகின்றனர் ஆனால் உண்மையில் 1757 லில் வங்கத்தில் ஆங்கிலேயர் களுக்கு எதிராக நடைபெற்ற போரே முதல் சுதந்திர போர் ஆகும் ஆம் வங்காளத்தில் சிராஜ்-உத்-தௌலா சிந்திய ரத்தத்தின் மீதுதான் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் தன் முதல் கால் கோளை இந்திய மண்ணில் ஊன்றியது. ஆமாம் இந்தியாவில் பிரிட்டீஷாரின் ஆட்சி முதலில் வங்காளத்தில்தான் ஏற்பட்டது. 
சிராஜ்-உத்-தௌலாபற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்..


அதே காலகட்டத்தில் தான், தென் இந்தியாவில் ஆங்கிலயர்கள் உள்ள நுழைய ஆரம்பித்தனர், அதை எதிர்தவர்களில் தமிழர்கள் பங்கு மகத்தானது...


மாவீரன் புலிதேவன்

புலிதேவன்..

இயற்கை வளம் மிகுந்த நெல்லை சீமையை ஆண்டு வந்த புலிதேவன் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினான் புலிதேவன்
அவனின் வீர வரலாற்றை அறிந்து கொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்..
சாதி, மதம், இனம், என்ற பாகுபாடு பார்காத புலிதேவன். தனது படையில் தாழ்ந்த சாதியை சோர்ந்த ஒருவனை, தளபதியாக நியாமித்தார், யார் தெரியுமா??
அவர் தான் ஒண்டி வீரன்..

ஓண்டி வீரன்

புலிதேவனின் தளபதிகளின் ஒருவனாக இருந்த ஒன்டி வீரன் தன் திறமைகளை நீருபித்து தன் திறமைகளால் புலிதேவனை மட்டும் அல்ல ஆங்கிலேயர்களை அதிர வைத்தார் அவரை பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்.
ஒண்டி வீரன்..

புலிதேவன் எளிதில் ஆங்கிலேயர்களால் வீழத்த முடியவில்லை அவரை வீழத்தியது ஒருவன் அவன் வேற யாரும் இல்லை வேளாளர் இனத்தை சோர்ந்த மாவீரன் மருதநாயகம்..

மருதநாயகம்

கமலஹாசன் கனவு படமான, "மருதநாயகம்" படத்தை அனைவரும் அறிந்து இருப்பிர்கள்..
ஆங்கிலேயர்களின் கை கூலியாக இருந்து, தமிழகத்தின் பல பகுதிகளை, ஆங்கிலேயர்களுக்கா கைபற்றிய, மருதநாயகம் என்ற முகம்மது யூசுப்கான் சாகிப் தான்... ஆங்கிலேயர்களின் மதுரை மாகணத்தின், முதல் தமிழர் கவர்னராக நியாமிக்பட்டர், பின்னர் ஆங்கிலேயர்கள், மற்றும் நவாப்பின், சுயரூபம் தெரிந்து பின்னர். ஆங்கிலேயர் அதிர வைத்தார், தக்க பதில் அடி கொடுத்தர்,

ஏன் மருதநாயகம் இறந்தபின்பும், மருதநாயகத்தை கண்டு அலறினர், என் என்பதை அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்...

மருதநாயகம் ஒரு முழு வரலாறு.

 ஆங்கிலேயரிடம் இருந்து, இந்தியா விடுதலைக்கா போராடிய பொழுது மருதநாயகத்திற்கு, ஒரு மாமன்னர் உதவினர், யார் தெரியுமா??
மைசூர் சிங்கம் ஹைதர் அலி தான் அவர்...

மைசூர் சிங்கம் ஹைதர் அலி

அன்றைய லண்டன் பத்திரிக்கை, மைசூர் ஆரசாங்கத்தை வைத்த பெயர் "ஆங்கிலேயர்களின் குலை நடுக்கம"
ஆங்கிலேய அரசாங்கத்தை ஆதிர வைத்தது இரண்டு இந்தியர்கள் ஒருவர், அகிம்சை வழியில் மிரள வைத்த மகாத்மா காந்தீ, இன்னேறுவர் மாமன்னர் ஹைதர் அலி..
ஆங்கிலேயர்களை விட பல நவின ஆயதங்களை பயன்படுத்தி, வெள்ளையர்களை, கடைசி போர் வரை வெற்றிவாகை சூடினர் இந்த மைசூர் சிங்கம்..
ஹைதர் அலி...
 

இவரது ஆட்சியில் தளபதிகள் இருந்து குடியவன் வரை, அன்றைய காலத்தில் நவின ஆயுதமான, தூப்பாக்கியை பயன்படுத்தும் முறையை அறிந்து இருந்தனர்...
அவரின் வரலாற்றை அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்
இவரது காலகட்டத்தில் பல தமிழ் போரளிகளுக்கு பயிற்சி அளித்தது மட்டும் அல்லாமல், பல தமிழ் அரசர்கள், மட்டும் அரசிகளுக்கு, உதவினர். அவர்களில் ஒருவர் வேலூ நாச்சியார்...



இராமநாதபுரத்தின் வீர மங்கை வேலு நாச்சியார்

 
இந்தியா விடுதலைக்கா போராடிய, பெண் என்றால் ஜான்சி ராணியை தான் கூறுவோம், அவருக்கு முந்தைய நூற்றாண்டில் பிறந்து, ஆங்கிலேயர்களை ஆச்ச வைத்த பெண் தான், வீரமங்கை வேலூ நாச்சியார்,
கணவனையும் நாட்டையும் இழந்து காட்டில் தஞ்சம் அடைந்த போது, அவருக்கு பக்கபலமாக இருந்தது, இரு தளபதிகள் மருதுபாண்டியர்கள் அவருக்கு அடைகலம் அளித்து அதிரவு கொடுத்த ஹைதர் அலி, அயுதங்கள், படை அளிக்க ஆங்கிலேயர்களை மீண்டும் வென்ற காளையர் கோயில் கைபற்றி, சிவகங்கை ராணியாக முடிசூட்டி கொண்டவர் தான், வேலு நாச்சியார், அவரது வரலாற்றை அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்..




வேலு நாச்சியாருக்கு பிறகு சிவகங்கையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து தற்காத்தது யார் தெரியுமா??
மருது சகோதரர்கள்..



மருதுபாண்டியர் பற்றிய வரலாற்று தகவல் !!!

மருதுபாண்டியர்

 
சிவகங்கையில் நல்லாட்சி அமைத்து மதநல்லிக்கணத்து எடுகாட்டாக விளங்கிய இந்த சகோதரர்களை படை எடுத்து விழ்த்திய ஆங்கிலேயர்கள் கடைசியில் தூக்கிலிட்டு கொன்றனர் சின்ன மருதுவின் கடைசி மகனையும் அவர்களின் படை தளபதி சேக் உசனேனையும் நாடு கடத்தி அவர்கள் நேர்ந்த கொடுமை பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்..

நாசா விண்வேளி ஆராய்சி கூடத்தில் வரவேற்ப்பு அறையில் ஒரு இந்தியரின் படம் இருக்கும் யார் தெரியுமா??
அவர் தான் திப்பு சுல்தான்..



 திப்பு சுல்தான்..


 மைசூர் சிங்கம் ஹைதர் அலியீன் ஒரே மகன் திப்பு தான் உலேக ராக்கெட்களின் தந்தை நவின அயுதங்களை கையாண்டு ஆங்கிலேயர்களை மிரள வைத்த மைசூர் புலியை பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்


திப்பு சுல்தான்-ஒரு முழு வரலாறு..

 

தீரன் சின்னமலை

ஆங்கிலெயர்களிடன் ஏதிரான போர் களத்ததிரல் திப்புக்கு உதவுதற்காக நொப்பொலியன் தூது செல்ல சென்றவர் தான் தீரன் சின்னமலை திப்புவிக்கு பிறகு தன்னால் முடிந்த வரை ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த இந்த மாவீரன் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்...


பிரிட்டீஷாரின் அதிகாரம் இந்தியா முழுவதும் பரவியிருந்த காலகட்டம். தங்களது ஆட்சி விரிவாக்கத்திற்காகராஜாக்கள நவாப்கள் மட்டுமல்லாமல் டில்லி முகலாய மன்னர்களின் ஆட்சியிலும் தலையிட்டனர். மன்னர்களுக்குபிறந்த நாள் பரிசளிக்கும் வழக்கத்தை நிறுத்தினர்.

இந்தச் சூழலில் தான் 1837 –இல் பகதுர்ஷா ஜஃபர் டில்லி அரியணையில் யார் தெரியுமா ஏரினார்தெரியுமா
பகதுர்ஷா ஜஃபர் ,

"பகதூர்ஷா ஜாஃபர்"

"பகதூர்ஷா ஜாஃபர்" முதல் இந்திய சுதந்திரப் போரின் தலைவர், முகலாயப் பேரரசின் கடைசி மன்னன் பகதூர் ஷா என்று படித்ததைத் தவிர வேறு எதுவும் நினைவில்இல்லை. ஆனால் பகதூர் ஷா ஒரு கவித்துவ உள்ளம் கொண்ட கவிஞனாகவும் மதசார்பற்றவனாகவும் சூஃபி ஞானியாகவும் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவனாகவும் தன் நம்பிக்கைகளைப் பேரரசன் என்ற அதிகாரத்தின் முலம்செயல்படுத்த முடியாதவனாகவும். ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியைக் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருத்தவனாகவும்...

இந்துக்களைக் காப்பாற்றுபவனாகவும், தீவிரவாத இஸ்லாமியர்களின் கோரிக்கைகளுக்கும் உணர்வுளுக்கும் பலியாக விரும்பாமல் அவர்களிடம் மத்தியஸ்தனாகவே தன்னுடைய பங்கு அமையவேண்டும் என்று பிரக்ஞைபூர்வமாகவே ஜாபர் கருதினார்.

 

"பகதூர்ஷா ஜாஃபர்" பற்றி அறிய இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்

1858 மார்ச் 6 � ஆம் தேதி 30 ஆயிரம் துருப்புகளுடன் வந்த மேஜர் காலின் படையோடு ஐந்துநாட்கள் தொடர்யுத்தம் நடத்தினார். இப்போரில் மாமன்னர் இளவல்களின் தலைகளைக் கொய்த மேஜர் ஹட்ஸன், வீரமங்கையர் பேகம் ஹஜ்ரத் மஹல் வீரர்களால் கொல்லப்பட்டான்.  

 

வீரமங்கையர் பேகம் ஹஜ்ரத் மஹல்

 1857 - இல் மாமன்னர் பகதுர்ஷா ஜஃபர் தலைமையில் இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஒருங்கிணைந்த போது, அதில் அரசாண்ட இரண்டு வீரமங்கையர் இருந்தனர். ஒருவர் ஜான்சிராணி லக்குமிபாய், மற்றொருவர் உத்திரப்பிரதேசத்தில் ஒளத் (Outh) என்ற குறுநிலப்பகுதியை ஆண்ட பேகம் ஹஜ்ரத் மஹல் ஆவார்.

பேகம் ஒளத் (Begum of Outh / Oudh / Awadh) என்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு சில வரிகளில் எழுதிச் செல்லும் ஹஜ்ரத் மஹலின் வீரம் - தேசாபிமானம் - தியாக அர்ப்பணிப்பு ஆகியன ஒரு வீர வரலாற்றுக்கும் விரிவாகப் பேசப்பட வேண்டிய வரலாற்றுக்கும் உரியதாகும்.
 அவரை பற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>>
செய்யுங்கள்

 பகதுர்ஷா சமாதியில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து தமக்கு மக்கள் அன்புடன் அளித்த தங்க வாளின் பிடியில் அடைத்து, அவ்வாளினை ஓங்கிப் பிடித்தவராக,

“நம் வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், இம்மஹானிடம் இருந்தது போல் தேசபக்தியும் அணுவளவாவது இருக்கும் வரையில், இந்துஸ்தான் வாள் மிகக் கூர்மையாக இருப்பதுடன், ஒரு நாள் லண்டனின் வாசற்படியையும் தட்டும்!” - என்று சபதமேற்றார்.

யார் தெரியும்மா??

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

 

இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், இந்திய வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். வங்காளத்தில் புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்த ஜானகி நாத்போஸ் பிரபாவதி தேவி தம்பதிகளின் 9வது குழந்தையாக 23/1/1897 ல் பிறந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். (நேருவைவிட எட்டு வயது இளையவர்). 

 

அவரை பற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்

தியாகி சுப்ரமணிய சிவா..

 செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கும், மகாகவி பாரதியாருக்கும் நெருங்கிய தோழனாக விளங்கிய சுப்பிரமணிய சிவாவின் சொந்த ஊர்,

தியாகி சந்திரசேகர ஆசாத்

ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட மாவீரர் தான் சுதந்திரத்துக்காக தன்னை தானே அழித்து கொண்ட சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர ஆசாத் !!!

 அவரை பற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்


தியாகி கான் அப்துல் கப்பார் கான் (பாரத ரத்னா) 

கான் அப்துல் கப்பார் கான் (Khan Abdul Ghaffar Khan, 1890 - 20 ஜனவரி 1988)பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவர். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்.
மறைக்க பட்ட வரலாற்றின் வரிசையில் சுதந்திர போராட்ட தியாகி கான் அப்துல் கப்பார் கான் (பாரத ரத்னா) பற்றி தெரிந்து கொள்வோம் !!!

 அவரை பற்றி அறிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்

 

இன்னும் பல விடுதலை போராட்ட வீரர்களின் பதிவை இந்த rahmanfayed தளத்தில் வெளியிடப்படும்,
நாம் பெற்ற சுதந்திரத்தை நினைவு கூறுவோம், நாட்டை வளப்படுத்தவோம்..


உங்கள் சகோதரன் 
ரஹ்மான்./....

No comments:

Post a Comment

welcome ur comment,