Friday, June 27, 2014

ஷூவில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க சில எளிய வழிகள்!!!

ஷூவில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க சில எளிய வழிகள்!!!


அன்றாடம் அலுவலகம் செல்லும் போது அணிந்து செல்லும் ஷூவை வீட்டிற்கு வந்ததும் கழற்றும் போது வாந்தி வரும் அளவில் துர்நாற்றம் வீசுகிறதா? இந்த துர்நாற்றம் வீசுவதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லையா? அப்படியானால் தொடர்ந்து படித்து வாருங்கள். பொதுவாக பெரும்பாலானோர் ஷூவை துவைக்கவேமாட்டார்கள். மழை வந்தால் மட்டும் தான், ஷூவிற்கு பலர் தண்ணீரிலேயே நனைப்பார்கள். முக்கியமாக பேச்சுலர்கள் ஷூவை கண்டு கொள்ளவேமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்காக

இங்கு அன்றாடம் அணியும் ஷூவில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை எப்படி எளிமையாக போக்குவதற்கு ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முயற்சித்து வந்தால், ஷூவில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்கலாம்.

பேக்கிங் சோடா 

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும், ஷூவில் சிறிது பேக்கிங் சோடாவை தூவி இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு, காலையில் அதனை அணியும் போது தட்டிவிட்டு பின் அணிந்து வந்தால், ஷூவில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்கலாம்.

டால்கம் பவுடர் 

தினமும் ஷூ போடும் முன், கால்களில் டால்கம் பவுடரை தடவி, பின் ஷூ போட்டு வந்தால், பவுடரானது வியர்வை சுரப்பியை அடைத்துவிடும். இதனால் வியர்வை வெளியேறாமல் இருப்பதுடன், துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

உப்பு

ஷூவில் உள்ள துர்நாற்றத்தைப் போக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு இரவில் படுக்கும் போது உப்பை ஒரு கவரில் போட்டு கட்டி, அதனை இரவில் படுக்கும் போது ஷூவில் வைத்து வந்தால், துர்நாற்றம் நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் 

ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு காட்டனில் நனைத்து, அதனைக் கொண்டு ஷூவை துடைத்து, பின் சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடம் வைத்து எடுத்தால், ஷூவில் இருந்து வெளிவரும் நாற்றம் போய்விடும்.

சூரிய வெளிச்சம்

நாற்றம் வீசும் ஷூவை சூரிய வெளிச்சத்தில் வைத்து எடுத்தால், நாற்றமானது நீங்கிவிடும். ஆனால் ஷூவை சூரிய வெளிச்சத்தில் அதிக நேரம் வைத்தால், ஷூ பாழாகிவிடும். எனவே கவனமாக இருங்கள்.

நாப்தலின் பந்துகள் 

பூச்சிகளை விரட்ட உதவும் நாப்தலின் பந்துகளை ஷூவில் போட்டு வைத்தால், துர்நாற்றம் வீசாமல் இருக்கும்.

கரித்துண்டு 

கரித்துண்டுகளும் துர்நாற்றத்தைப் போக்க உதவும். அதற்கு கரித்துண்டுகளை ஒரு பையில் போட்டு, அதில் ஒரு ஓட்டை போட்டு, ஷூவின் உள்ளே 1 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.

உறைய வையுங்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் ஷூவைப் போட்டு,

அதில் ஊசி வைத்து ஒரு துளையிட்டு, பின் அதனை ஃப்ரீசரில் இரவில் படுக்கும் போது வைத்து எடுங்கள். இதனால் ஷூவில் நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் அதிகப்படியான குளிர்ச்சியினால் அழிந்துவிடும்.

Monday, June 23, 2014

மர்மக் காடு!

மர்மக் காடு!


ப்ரோசல்யான்டே காட்டை மன ரம்மியத்தோடு சுற்றிப் பார்த்து களித்திருக்க விரும்பி வருவோர் அனைவரும் காட்டுக்குள் நுழைந்ததுமே ஒருவித திகில் அனுபவத்தைத்தான் பெறுகின்றனர்.
யாரோ அவர்களையே விடாமல் பார்த்துக் கொண்டே இருப்பது போலவும், அவர்கள் பின்னால் யாரோ தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதைப் போலவும் ஒரு பய உணர்வு தோன்றுகிறது.
இக்காட்டின் வடக்குப் புறத்தில் ஒரு சுனை உள்ளது. இந்தச் சுனையும் ஒரு வரலாற்றைத் தன்னுள் பொதித்து வைத்துள்ளது.
மந்திரவாதி மெர்லினின் அழகில் ஒரு தேவதை தன் மனதைப் பறிகொடுத்தது. மெர்லினை வேறு யாரும் தட்டிச் சென்று விடாமல் தனக்கு மட்டுமே உரியவனாக வைத்திருக்க நினைத்தது அந்த தேவதை. அந்த மந்திரவாதியை சுனைக்குள் கண்ணுக்குத் தெரியாத, தண்ணீரால் நிரப்பப்பட்ட சிறையில் அடைத்து வைத்திருந்தது.
இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்தச் சுனையில் எதையாவது நினைத்து சீட்டு எழுதிப்போட்டால் உடனே நடக்கும் என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது.
இந்த அடர்ந்த பெரிய காட்டில் ஒரு குட்டை உள்ளது. அதில் எப்போதும் நீர்க்குமிழிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், அந்தத் தண்ணீர் நம் ஊரில் இருப்பதைப் போல சூடாக இல்லாமல் ஜில்லென்று குளிர்ச்சியாகவே இருக்கிறது.
இவ்வாறான நீர்க்குமிழிகள் குட்டையில் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள சதுப்பு நிலக் காட்டில் வருவதுதான் வியப்பளிக்கிறது.

மேலும், இக் குட்டையைச் சுற்றி சில பாறாங் கற்களும் கிடக்கின்றன. அதில் குறிப் பிட்ட பாறாங்கல் ஒன்றை மட்டும் மிகவும் விசேஷ மாகக் கூறு கின்றனர். காரணம், குட்டையின் நீரை அள்ளிச் சென்று இந்தப் பாறாங்கல்லின் மீது சிறிதாகத் தெளித்தால் நம்பவே முடியாத அற்புதம் ஒன்றும் நிகழ்வதாகக் கூறுகின்றனர்.
அது என்ன அற்புதம்?
தண்ணீர் தெளித்த மாத்திரத்திலேயே அந்தப் பகுதியில் மட்டும் வானம் உடனடியாகக் கருத்து விடுகிறதாம். காற்று வேகமாக வீசுமாம். கருப்புக் குதிரையில் கருப்பு நிற ஆடை அணிந்த சில துர் தேவதைகள் அங்கே உடனடியாக வருகிறதாம்.
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிய வில்லை. ஆனால். இதனைச் சோதனை செய்து மிரண்டு போனதாகச் சிலர் சொல் கின்றனர்.
இப்படிப்பட்ட திகில் நிறைந்த காட்டிற்கு டுசெல்டிக்ட் என்ற அந்தப் பழங்குடியின மக்கள் இப்போதும் எந்தப் பயமும் இல்லாமல் சென்று வரத்தான் செய்கின்றனர். மந்திரங்களை ஜெபிக்கின்றனர். அதனைப் பரிசோதித்துப் பார்க்கவும் செய்கின்றனர்.
மேலும், ஆண்டுதோறும் ஜுன் மாதம் 21ம் தேதி அன்று இந்த மக்கள் சுனைக்கு வருகின்றனர். பிறந்த குழந்தைகளை சுனை நீரில் நீராட்டும் தங்கள் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சடங்குகளை இன்றும் தவறாமல் செய்து வருகின்றனர். இதனைப் பெரிய சடங்காகவே அவர்கள் செய்கின்றனர். என்றாலும் இந்த விழாவில் வெளியாட்கள் யாரையும் அவர்கள் அனுமதிப்பதே கிடையாது.
இக்காட்டில் திடீர் திடீரென்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிவதும் உண்டு. ஆனால், சாதாரணமாக காற்றில் மரங்கள் ஒன்றோ டொன்று உரசி தீப்பற்றிக் கொள்வதைப் போல இங்கே நடப்பதில்லை. ஆனால், தீப்பற்றி எரிகிறது.
என்ன காரணத்தினால் இவ்வாறு நெருப்பு பற்றி எரிகிறது என்பது தெரியவில்லை. ஆனால், நகரசபை ஊழியர்கள் மட்டும் நெருப்பை அணைக்க ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ப்ரோசல்யான்டே காடு இருப்பது வளர்ந்த நாடாகக் கருதப்படும் ஐரோப்பாவின் பிரான்சில். படித்தவர்களும், அறிவாற்றல் நிறைந்தவர்களும் மிகுந்துள்ள ஒரு நாட்டில் தான் இக்காடு உள்ளது. இப்படிப்பட்ட மர்மங் களும், திகிலும் நிறைந்த ஒரு பயங்கரமான காட்டைப் பற்றிய அச்சம் காரணமாக இன்றளவும் இந்தக்காடு ஆய்வுகளுக்கு அப்பாற்பட்டே இருந்து வருகிறது.

இது போன்ற வரலாற்றுத் மர்மங்கள தலங்கள்  சில காண்போம்...

பார்த்தவுடனே பிரமிப்பை ஏற்படுத்தும் "மச்சு பிச்சு"!!


பெர்முடா முக்கோணம் - I..

Thursday, June 12, 2014

காசி அகோரிகள்.



சிவனின் மைந்தர்கள் என கூறி கொண்டு கங்கை நதியின் இடுகாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் .. இவர்களை பற்றி இவர்கள் தான்தோன்றி தனமாக சுற்றி கொண்டு இருப்பதாய் “நான் கடவுள் “படத்தை பார்த்தவர்கள் அறிந்து இருப்பார் . 

அகோரிகள் என்கிற சாமியார்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுவதை நாம் பல தொலைக்காட்சி ஒலிபரப்புகளில் பார்த்திருக்கிறோம். அது நம் உயிரை உறையவைக்கும் காட்சியாக இருக்கும். இவர்கள் எப்போதும் சிவா பானம் தான் புகைத்து கொண்டு இருப்பார்கள் அதாவது (கஞ்சா ) வை தான் இவர்களுக்கு சிவா பானம்அவர்களை அடுத்து இப்போது சீனாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை உயிரோடு வெட்டி சமைத்து சாப்பிடும் காட்சி இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மனித மிருகங்கள் ஒருபெண்ணை உயிரோடு ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கண்டம்துண்டமாக வெட்டி சமைத்து சாப்பிடுகிறார்கள். இவர்களின் முன்னோடிகள் வேறு யாரும் அல்ல நமது இந்திய அகோரிகளே.
இவர்கள் மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம். இந்த அகோரி சாமியார்களை பற்றி சிலர் கூறுகின்றனர் இவர்கள் ஹிந்துமதஆன்மீகவாதிகள்என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்க்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை சொல்லி அகோரிகள் குறித்து சப்பை கட்டு கட்டுகிறார்கள் .இவர்களுடைய காட்டுமிரண்டிதானமான செயல்களுக்கு சில ஹிந்து அமைப்பின் ஆதரவு எப்போதும் உண்டு
மனிதன் நாகரிகத்தின் உச்சியில் இருக்கிறான் என்றே சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு உலகம் பல நவீன விஞ்கான கண்டுபிடிப்புகளின் உச்சத்துக்கே சென்று விட்டது என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த அகோரிகள் மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டு நிர்வாணமாக நரமாமிசம் தின்று திரிவதை பார்க்கும் போது இவர்களை காட்டு மிராண்டிகள் அல்லது அவர்களை விட கேவலமானவர்கள் என்றே சொல்ல வேண்டும்.
காசி நகரத்தில் இவர்கள் வலம்வருவது உண்டு. காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம். சிந்தனையார்களுக்கு புரியும் கடவுள் பக்தி இவர்கள் வேறு என்று தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது இதை புண்ணியஸ்தலம் என்றும் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது .இதுவே வேறு ஒருவர் செய்தால் கலாச்சார சீர்கேடு என்று அமைப்பு கோசம் போடா ஆரம்பித்து இருப்பார்கள் .இறந்த மனிதனை இன்று தின்பவர்கள் நாளை உயிருடன் இருக்கும் ஒருவரை திங்க மாட்டார்களா ?அதுவும் நடக்கும்
images 1 நிமிடத்திற்கு ஒரு பிணம் உண்ணும் அகோரிகள்.!!(திகில் வீடியோ)
இந்தியாவை நாறடிக்கும் அகோரிகளை தொடர்ந்து இப்போது சீனாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை உயிரோடு வெட்டி சமைத்து சாப்பிடும் கொடுமையை நடத்தி இருக்கின்றனர். இதை பார்க்கும்போது உள்ளம் நடு நடுங்குகிறது. மனித நேயம் செத்து விட்டதோ என்று என்ன தோன்றுகிறது. இதுபோல் உள்ள கொடியவர்களை பிடித்து உடனே தண்டித்தால்தான் உலகம் நிம்மதி அடையும். நமது இந்திய அகோரிகளுக்கு ஹிந்துத்துவா வக்கலாத்து வாங்குவதும், அவர்கள் கும்பமேளாவில் நிர்வாணமாக வளம்வருவதும் போன்ற செயல்கள் உடனே கடும் சட்டம் கொண்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்த அகோரிகள் இடுகாடுகளில் எரியும் பிணத்தை எடுத்து அதன் மாமிசத்தை உண்பவர்கள் .. காசியில் எரித்தால் நேரடி மோட்சம் என்பதும் அதுவும் அந்த சடலம் எரியும் பொது இது போன்ற அகோரி சாமியார் தேர்ந்தெடுத்து பிணத்தை உண்டல் அது மேலும் சிறப்பு எனவும் ஒரு மூட நம்பிக்கை மக்களிடையே உள்ளது ...

இந்த அகோரி சாமியார்கள் கஞ்சா அடிப்பது , சாராயம் குடிப்பது என்று எல்லா தீயபழக்க வழக்கங்களை சிவனின் பெயரை சொல்லி செய்கிறார்கள் .. அது சரி இவர்கள் இப்படி ஆடை களைந்து எதன் மீதும் பிடிப்பு அற்று திரிவதால் இவர்களை முற்றும் துறந்தவர்கள் என ஒரு சாரார் நம்பி வணகுவதை காண்கிறோம் .

அது சரி இந்த அகோரி சாதுகளுக்கு உணர்ச்சிகள் இருக்காதா ?

கஞ்சாவையும்,மதுவையும் சில சமயம் பிணத்தையும் உண்ணும் இவர்களுக்கு சராசரி மனிதனை போல காமத்தின் உணர்வகளும் கொப்பளிகாதா ?

அவர்கள் காம வேட்கையை தனிபதற்கும் படிபறிவில்லாத ஒரு சிலர் ஒரு வித படையலை செய்கின்றனர் ..

அதாவது இந்த அகோரிகள் சுத்தம் அசுத்தம் என எதனையும் பிரித்து பார்ப்பதில்லை நான் இந்த விஷயத்தை பற்றி துலாவிய பொது சில அடித்தட்டு மக்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் மாதவிடாய் காலங்களில் கழிவுகள் வெளியேறும் பொது இந்த அகோரி சாதுக்களிடம் உடல்உறவு கொள்கிறார்களாம் .. இப்படி உறவு கொள்வதனால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம் .. என்ன ஒரு மோசமான நம்பிக்கை !!

இந்த காணொளி காட்சியில் ஒரு அகோரி தன் வாழ்கையை பற்றி விளக்கி கடைசியில் பிணத்தின் மாமிசத்தை சுட சுட சிதையில் இருந்து எடுத்து சுவைக்கிறார் 

http://www.youtube.com/watch?v=44r6McYybvI

இது மிக மோசமானது

http://www.hotklix.com/?ref=link%2F390418

கங்கை நதியில் மிதக்கும் பிணத்தை இழுத்து வந்து ஆசிரமத்தில் வைத்து பூஜித்து அதனை வெட்டி ஒரு சடங்காக உண்ணுகிறார்.

இவர்களைத்தான் கடவுள் இஸ்தானத்தில் வைத்துள்ளார்கள் காவிகள்.



எச்சரிக்கை நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?


அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…

Friday, June 6, 2014

குமுதம் ரிப்போட்டர் பா. ராகவன் "நிலமெல்லாம் ரத்தம்"

 "நிலமெல்லாம் ரத்தம்"



பா.ராகவனின் குமுதம் ரிப்போர்ட்டர் தொடர் (பாலஸ்தீனம் பிரச்சினை சம்பந்தமான யூத, கிருஸ்துவ, முஸ்லிமல்லாத ஒருவரின் ஆய்வு)
The End] நிலமெல்லாம் ரத்தம் - நிறைவுரை`
101] பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே
100] பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?
99] இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா?
98] காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு
97] ஏரியல் ஷரோன் அஞ்சிய ஓரே மனிதர்
96] சுதந்திரத்துக்காகப் போராடிவரும் ஓர் இனம்
95] யாசின் மற்றும் ரண்டிஸியை கொன்றார்கள்
94] பாலஸ்தீன் அத்தாரிட்டியாக அகமது குரே
93] ஜார்ஜ் புஷ் வரைந்த 'ரோட் மேப்'
92] புஷ்ஷின் சாய்ஸ், மம்மூத் அப்பாஸ்
91] கேம்ப் டேவிட் அமைதிப் பேச்சுவார்த்தை
90] அராஃபத்தை உயிருடன் விட்டுவைக்க மாட்டார்கள்
89] கோஃபி அன்னனின் சாமர்த்தியமான அறிக்கை
88] பாலஸ்தீனின் தந்தை யாசர் அராஃபத்
87] யுத்தம்தான் என்று தீர்மானமாகிவிட்டது
86] ஏரியல் ஷரோன் நடத்திய ஓரங்க நாடகம்
85] அக்ஸா மசூதியை இடிக்க நடக்கும் சதிகள்
84] அல் அக்ஸா மசூதியின் பின்னணி

83] ஓஸ்லோ ஒப்பந்தத்தின் லட்சணம்?
82] அன்றைக்கு யாசர் விதைத்ததுதான்..
81] பாலஸ்தீனியன் அத்தாரிடி யாசர் அராஃபத்
80] ஓஸ்லோ ஒப்பந்தம்
79] இண்டிஃபதாவின் எழுச்சிப் பேரணிகள்
78] யாசர் அராஃபத்தின் இண்டிஃபதா (Intifada)
77] ராணுவத்தலைவர் ஷேக் அகமது யாசின்
76] ஹமாஸின் ஊழல் ஒழிப்புப் பிரிவு

75] ஹமாஸ் (Harakat Al Muqawamah AlIslamiyah)
74] அமெரிக்கா தொடங்கி வைத்த வழக்கம்
73] இஸ்ரேலின் உளவு அமைப்பு (Mossad)
72] அரேபியர்களின் அந்த மௌன ஓலம்
71] சினாயும் காஸாவும் இஸ்ரேல் வசம்
70] ஆறு நாள் யுத்தத்தின் பின்னணியில்
69] பாலஸ்தீன் விடுதலை இயக்கம்
68] என்ன அழகான திட்டம்!
67] அந்த மூன்று காரணங்கள்
66] சூயஸ் கால்வாயின் சரித்திரம்
65] எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும்
64] அராஃபத் என்கிற புரட்சியாளர்
63] யூதர்களை ஆதரிக்கும் காரணங்கள்
62] யாசர் அராஃபத்தின் மறக்க முடியாத..
61] அரபுக்களின் ஒற்றுமையின்மை
60] பாலஸ்தீன் அகதி
59] ஐக்கிய நாடுகள் சபையின் நெருக்கடி
58] யுத்தம்
57] இஸ்ரேல் உதயம்
55] யூதர்களின் நம்பிக்கை துரோகம்
54] பிரிட்டனின் திட்டம்
53] ஹிட்லரின் தற்கொலை
52] இரண்டாவது மிகப்பெரிய தவறு
51] ஹிட்லரின் விஷவாயு கொலைக்கூடங்கள்
50] ஹிட்லரால் அழிக்கப்பட்ட யூதர்கள்
49] ஹிட்லரின் யூத வெறுப்பு

48] சிக்கலின் பெயர் ஹிட்லர்
47] இத்தனை அறியாமையிலா ஒரு கூட்டம்?
46] பால்ஃபர் பிரகடனத்தின் முக்கியப் பகுதி
45] முதல் உலகப்போரில் யூதர்களின் பங்களிப்பு
44] ஐரோப்பிய தேசங்களுக்கிடையே யுத்தங்கள்
43] யூதர்களை ஒருங்கிணைத்த ஹெஸில்
41] யூதர்களின் நில வங்கி தந்திரம்
40] ஜியோனிஸ வளர்ச்சியின் ஆரம்பம்
39] ஜியோனிஸ திட்டம்
38] ஐரோப்பியர்களின் யூத வெறுப்பு
37] ரஷ்யாவில் கொல்லப்பட்ட யூதர்கள்
36] நெப்போலியனும் யூதர்களும்
35] பாலஸ்தீன அரபிகளும் யூதர்களும்
34] இஜ்வி
33] ஹீப்ருவுக்குப் புத்துயிர் அளித்த யூதர்கள்
32] யூதர்களும் ஒட்டோமான் அரசும்
31] ஸ்பெயினில் வெளியேற்றப்பட்ட யூதர்கள்
30] சலாஹுத்தீனின் மரணமும் கிருஸ்துவர்களும்
29] மன்னர் ரிச்சர்டும் சலாஹுத்தீனும்
28] கிருஸ்தவர்களிடம் கரிசனம்

27] சுல்தான் சலாஹுத்தீன்
26] நீண்டு போன சிலுவை யுத்தங்கள்
25] முழங்கால் ஆழத்துக்கு ரத்தக் குளம்!
24] சிலுவைப்போர் தொடக்கம்

23] பாலஸ்தீன் நிலப்பரப்பின் பொற்காலம்
22] கலீஃபா உமர்
21] இஸ்லாத்தின் வானளாவிய வளர்ச்சியின் அஸ்திவாரம்
20] இஸ்லாம் வாள்முனையில் பரவியதா?
19] யூதர்களுடன் ஓப்பந்தம்
18] முகம்மது சொன்னது சரியே
17] உமரின் மனமாற்றம்
15] அபிசீனிய மன்னன் நஜ்ஜாஷி
15] அந்த மூன்று வினாக்கள்
14] ஒட்டகத்தின் தாடை எலும்பு
13] நபியாக நியமிக்கப்படல்
12] இறைதூதர் முகம்மது
11] கிருஸ்துவத்தின் வளர்ச்சி
10] கான்ஸ்டன்டைன்
9] யூதர்கள் இல்லாத ஜெருசலேம்
8] யூதப்புரட்சி
7] புத்தியால் வெல்வது
6] பிரித்து ஆளும் சூழ்ச்சி
5] கிருஸ்துவமும் யூதர்களும்
4] கி.பி.
3] யூதர்கள்
2] ஆப்ரஹாம் முதல்

1] அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்
சேமித்தவனின் முன்னுரை

Sunday, June 1, 2014

இந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்!!!

இந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்!!!


உலகத்தில் உள்ள நாடுகளில் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி பேசுகையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இங்கே பல இடங்கள் பேய்களுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பல இடங்களில் ஆவி நடமாட்டம் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அதற்கு காரணம் அந்த இடத்தின் வரலாறு மற்றும் அங்கே நடந்தேறிய நிகழ்வுகள். இதுவே அந்த இடங்களை ஆவி நடமாடும் இடமாக மாற்றிவிட்டது.

இந்தியாவில் சில இடங்கள் ஆவி நடமாடும் இடங்களாக திகழ்கிறது என சில அமானுஷ்ய வல்லுனர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். உதாரணத்திற்கு, இந்தியாவில் ஆவி நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் ஒன்றாக திகழ்கிறது பனார்க் என்ற இடம். ராஜஸ்தானில் உள்ள இந்த இடத்தைச் சுற்றி பல கதைகள் பிண்ணப்பட்டிருக்கிறது. மிகவும் அழகிய இடமாக இருந்த பனார்க் இன்று பாழடைந்து, அழிந்த பகுதியாக உள்ளது.

இப்படி ஆவி நடமாடும் இடங்களானது, கிராமங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தான் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. காரணம் இந்தியாவில் முக்கியமான சில நகரங்களிலும் கூட ஆவி நடமாடும் இடங்கள் இருக்கத் தான் செய்கிறது. மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கட்டா, உத்தர பிரதேசம் போன்ற நகரங்களில் ஆவி நடமாடும் இடங்கள் உள்ளது. அங்கே வசிக்கும் மக்கள் சிலர், உறைய வைக்கும் சில அமானுஷ்ய நிகழ்வுகளைப் பற்றி புகார் எழுப்பியுள்ளனர்.


வேறு: பெரும்பாலான மக்கள் உண்மை என நினைக்கும் சில பொய்யான விஷயங்கள்!!! சில இடங்கள் மிகவும் ஆபத்தாக இருந்தாலும் கூட, பல பேய்களும் தீய ஆத்மாக்களும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு மும்பையில் உள்ள பிரிஜ்ராஜ் பவன் அரண்மனை அல்லது டிசோசா சாவல் ஆஃப் மாஹிம் போன்ற இடங்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த இடங்களை பார்க்கும் போது உங்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அங்கே இருக்கும் தீய சக்திகள் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை என மக்கள் கூறுகின்றனர். சரி அப்படிப்பட்ட இடங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம் வாங்க!

பன்கர்ஹ் கோட்டை, 


ராஜஸ்தான் ஆவி நடமாடும் இடங்களின் மீது நாட்டம் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக பன்கர்ஹ் கோட்டையைப் பற்றி தெரிந்திருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள பன்கர்ஹ் என்ற புகழ்பெற்ற நகரம், இந்தியாவில் உள்ள ஆவி நடமாடும் இடங்களில் ஒன்றாகும். 

இந்த இடத்தைப் பற்றி பல கதைகள் உள்ளது. இங்கே தொலைந்து போனவர்களைப் பற்றி பல புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பிரச்சனைகளை தவிர்க்க, அந்த மாநிலத்தின் அரசாங்கம் ஒரு எச்சரிக்கை பலகையை அதன் நுழைவாயிலில் மாட்டியுள்ளது.

ராமோஜி ஃபிலிம் சிட்டி, 


ஹைதராபாத் இந்தியாவில் ஆவி நடமாடும் முதன்மையான இடங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. காரணம் வீரர்கள் செத்து மடிந்த போர்க்களத்தில் தான் இந்த பிலிம் சிட்டி கட்டப்பட்டுள்ளது என நம்பப்படுகிறது. அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் உணவகங்கள் கூட அங்கே நிலவும் அமானுஷ்யத்தைப் பற்றி கூறியுள்ளார்கள்.

டுமாஸ் கடற்கரை, 


குஜராத் இந்த புகழ்பெற்ற சுற்றுலாத்தளமும் ஆவி திரிகின்ற இடமாக கருதப்படுகிறது. இரவு நேரத்தில் இந்த கடற்கரைக்கு செல்வதை தவிர்க்கவும். காரணம், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, பலர் இங்கே தொலைந்து போயுள்ளனர். இந்த கடற்கரையை முன்பொரு காலத்தில் மனித சடலங்களை எரிக்க இந்துக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

டவ் மலை, மேற்கு வங்காளம் 


குர்சியாங் என்ற இடத்தில் உள்ள இந்த மலையில் உள்ள பள்ளியிலும், காட்டிலும் பேய் நடமாட்டம் இருக்கிறது என நம்பப்படுகிறது. இங்கே நடந்துள்ள பல கொலைகளும் அமானுஷ்யங்களும், இங்கே உள்ள மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளது.

செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள பேய் வீடு, 


பெங்களூரு இந்தியாவில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே மர்மமான முறையில் கொலை செய்யப்பட சின்னப்பெண் மற்றும் அங்கே நடக்கும் அமானுஷ்ய செயல்கள் இந்த இடத்தைப் பற்றி பல கதைகளை கிளப்பியுள்ளன.

டெல்லி கண்டோன்மென்ட், டெல்லி 


டெல்லியில் ஆவி நடமாடும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கே உள்ள அடர்ந்த பச்சை பசுமையான காட்டில் பேய் நடமாட்டம் உள்ளதென்று நம்பப்படுகிறது. காரணம், அங்கே வெள்ளை நிற சேலையில் ஒரு பெண் உடன் பயணிக்க உதவி கோருவதை பலர் கண்டுள்ளனர். அப்பெண் உங்கள் பின்னாலேயே ஓடி வந்து உங்களை முந்தியும் செல்வாளாம்.

ஷனிவார்வாடா கோட்டை, 


பூனே இங்கே இரவு நேரத்தில் ஒரு பையனின் அலறல் சத்தம் கேட்குமாம். இங்கே நிலவும் கதைகளின் படி, தன் உறவினர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட 13 வயது இளவரசனால், இக்கோட்டையில் பேய் நடமாட்டம் உள்ளதாம். பௌர்ணமி அன்று இங்கே பேய் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் 


விமான நிலையம் போன்ற சுறுசுறுப்பான இடத்தில் ஆவி நடமாட்டம் இருக்கும் என்றால் யாராவது நம்புவார்களா? பயணிகளும். பணியாளர்களும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சில அமானுஷ்ய செயல்களை கண்டுள்ளனர்.

சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம் 


தமிழ் நாட்டின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயம் மற்றும் மாநிலத்தின் நான்காவது பெரிய புலிகள் சரணாலயமான இங்கேயும் ஆவி நடமாட்டம் இருக்கிறது என கூறப்படுகிறது. 2004-ல் வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு, அங்கே சில அமானுஷ்ய செயல்களும், நிகழ்வுகளும் மக்களை அச்சுறுத்தியுள்ளது. தானாக கண்ணாடி விளக்கு காற்றில் பறப்பதும், நெடுஞ்சாலையில் ஆவிகள் நடமாடுவதும், இந்த சரணாலயத்தை ஆவி நடமாடும் இடமாக மாற்றியுள்ளது.

thanks to
one india.