Tuesday, January 12, 2016

ஓரியன் விண்தொகுப்பும் மாயன்களும் .

ஓரியன் விண்தொகுப்பும் மாயன்களும் .


ரேடியோ மற்றும் ரேடார் வானியல் குறித்தெல்லாம் கி. பி. 1945 க்குப் பிறகுதான் விஞ்ஞான உலகம் தெரிந்துகொண்டது. அதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், மாயர்கள் எப்படிப் பால்வழி விண்கூட்டம் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள்?  விடை தெரியாத ஆச்சரியம் இது!

ஓரியன் விண்தொகுப்பு (Orion Constellation) என்பது மிகப் பிரகாசமான நட்சத்திர மண்டலங்களுள் ஒன்று. தமிழில் ஓரியனைப் பிரஜாபதி என்று சொல்கிறார்கள். இது வேடன் வடிவம் கொண்டதாக வர்ணிக்கப்படுகிறது. அவன் கையில்  வாள்போல் ஒரு பகுதி தெரியும். இந்தப் பகுதியின் பெயர் ஓரியன் நெபுலா.


பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான், ஓரியன் நெபுலா வானியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் புகைப்படமே 1880ல் தான் முதன் முதலாக எடுக்கப்பட்டது.

ஆனால், மாய நாகரிகப் பழங்கதைகளில் ஓரியன் விண்தொகுப்பு, நெபுலா ஆகியவற்றின் வர்ணனைகள் காணப்படுகின்றன. இவை புகைப்படம் காட்டும் தோற்றங்களோடு ஒத்தும் போகின்றன. விடை இல்லாத இன்னொரு ஆச்சரியம்!


மாயர்கள் நாகரிக வரளாற்றின் மைல்கற்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் இவைதாம்:

*    கி. மு. 11000
மாயப் பகுதிகளில் மக்கள் முதன் முதலாகக் குடியேறத் தொடங்கினார்கள். இவர்கள் அக்கம் பக்க நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். இவர்கள் தங்கள் உணவுகளான காய்கறிகள், பழங்கள், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றை வேட்டையாடி, அவற்றைச் சமைக்காமல், பச்சையாகச் சாப்பிட்டு  வாழ்ந்தார்கள்.
*    கி. மு. 2000
மாய நாகரிகம் தொடங்குகிறது. மக்கள் வேட்டையை மட்டும் நம்பியிருக்காமல், விவசாயத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.
*    கி. மு. 700
மாயர்களின் எழுத்துக்கள் தொடங்குகின்றன. இவை சித்திர எழுத்து வகையைச் சேர்ந்தவை. அதாவது வாசிக்கும் முறையில் இல்லாமல், பட அமைப்புடைய எழுதுதல் முறை.
*    கி. மு. 400
கி. மு. 400- ன் கல்வெட்டுகளில் மாயர்கள் கண்டுபிடித்த நாள்காட்டிகள் பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்தக் காலகட்டத்திலோ அல்லது இதற்கு முன்பாகவோ, காலண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்.
* கி. மு. 300
மன்னர்கள், பிரபுக்கள், பூசாரிகள் என ஆட்சிமுறை சீராக அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிகளுக்குமான பொறுப்புகள், அதிகாரங்கள் ஆகியவை வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
*    கி. மு. 100
டேயோட்டிவாக்கான் (Teotihuacan) என்ற நகரம் மாயர்களால் உருவாக்கப்படுகிறது.
இந்த நகரம் இன்றும் இருக்கிறது. கலை, மதம், வாணிபம் ஆகிய செயல்பாடுகள் இங்கே செழித்து வளர்ந்தன. பிரமிட்டுகள், கோயில்கள், அரண்மனைகள், பொதுச் சதுக்கங்கள் பிரம்மாண்டமாக இருந்த ஊர் இது.
*    கி. மு. 50
ஸெர்ரோஸ் (Cerros) என்ற நகரம் உருவாகிறது. கோயில்கள், மண்டபங்கள் ஆகியவை நிறைந்த நகரம் இது.
* கி. பி. 100
பல உள் நாட்டுக் கலவரங்கள் தொடங்குகின்றன. மாய நாகரிகம் சரிவுப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது.
*    கி. பி. 900
மேற்குப் பகுதிகளில் நகரங்கள் மெள்ள மெள்ள மறைகின்றன. அழிவின் ஆரம்பம்!
* கி. பி. 1511
கோன்ஸலோ குரேரோ (Gonzalo Guerrero) என்ற ஸ்பெயின் நாட்டுக்காரரின் கப்பல் புயலில் சிக்கி மாயர் பகுதியில் கரை தட்டுகிறது. அவர் அங்கு வாழும் உள்ளூர்ப் பெண்ணைத்  திருமணம் செய்துகொள்கிறார்.
*    கி. பி. 1517
ஸ்பெயின் நாடு மாயர்கள்மேல் போர் தொடுக்கிறது. 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட மாயர்கள் ஸ்பெயின் வீரர்களால் கொல்லப்படுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல,  மாயர்களின் கலாசாரமும் மறைகிறது.
கி. மு. 11000 தொடங்கி, கி. பி. 1517- இல் மறைந்த இந்த வரலாற்றில்
கி. மு. 2600 – கி. பி. 900 வரையான காலம் மாயன் நாகரிக காலம் என்று வரையறைக்கப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் இந்தக் காலகட்டங்களை எப்படி முடிவு செய்தார்கள்? அவர்கள் முடிவுகள் எடுக்க எந்த ஆதாரங்கள் உதவின? எங்கிருந்து இவற்றைக் கண்டு பிடித்தார்கள்?
மாய நாகரிகத்தின் பெருமைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் கண்டறியப்பட்டன.   கண்டுபிடித்த பெருமை ஃப்ரெடெரிக் காதெர்வுட் (Frederick Catherwood), ஜான் லாய்ட் ஸ்டீஃபென்ஸ் (John Lloyd Stephens) என்ற இருவருக்குமே உரியது.
காதெர்வுட்  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஓவியர், கட்டடக் கலைஞர். பழங்கால  நாகரிகங்களை ஓவியங்களாக வரைவதில் அவருக்கு ஆர்வம் அதிகம். எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து தான் பார்த்த காட்சிகளை, சிதிலமான கட்டடங்களை, பிரமிட்களை வரைந்து தள்ளினார். இவை புத்தகங்களாக வெளியாகின.
ஸ்டீஃபென்ஸ் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர். தொழிலால் வழக்கறிஞர். அவருக்கு உடல் நலத்தில் பிரச்னை ஏற்பட்டது. அவருடைய வேலைப் பளுவைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் ஆலோசனை சொன்னார்கள்.
“ஒய்வு வேண்டாம், உலகின் பல பாகங்களுக்கு சுற்றுப் பயணம் போய் வரலாம்” என அவர் முடிவெடுத்தார். இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ரஷ்யா, போலந்து, பிரான்ஸ் ஆகிய பல நாடுகளுக்கு இந்த உலகம் சுற்றும் வாலிபர் போனார். தன் அனுபவங்களைப் புத்தகமாக எழுதினார்.
இங்கிலாந்தில் ஸ்டீஃபென்ஸ், காதெர்வுட் இருவரும் தற்செயலாகச் சந்தித்தார்கள். தம் சுற்றுப் பயண அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டார்கள். எழுத்துத் திறமை கொண்ட ஸ்டீஃபென்ஸும், ஓவியக் கலைஞர் காதெர்வுட்டும் தகுந்த வாய்ப்பு வரும்போது தங்கள் திறமைகளை ஒருங்கிணைத்து பணியாற்ற முடிவு செய்தார்கள்.
அந்த வாய்ப்பு விரைவில் வந்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஸ்டீஃபென்ஸை மத்திய அமெரிக்க நாடுகளுக்குத் தூதுவராக நியமித்தார். ஸ்டீஃபென்ஸ் அந்த நாட்டின் பல பகுதிகளைச் சுற்றிப் பார்த்தார். மாய நாகரிகம் பற்றி அப்போது உலகம் அதிகமாக அறிந்திருக்கவில்லை. அப்படி ஒரு நாகரிகம் இருந்தது என்று தெரியுமே தவிர ஆதாரங்களோ, சிதிலமான கட்டங்களோ யார் கண்களிலும் படவில்லை. ஆதாரங்களைத் தேடி அலைந்தார் ஸ்டீஃபென்ஸ்.
மாயன்கள் பல புத்தகங்கள் எழுதினார்கள் என்று அவர் கண்டுபிடித்தார். ஆழமான மத நம்பிக்கை கொண்ட மாயன்களின் புத்தகங்கள் அவர்களுடைய நூற்றுக்கணக்கான கடவுள்களை மையமாக வைத்து எழுதப்பட்டவை என்பது சில குறிப்புகளிலிருந்து அவருக்குத் தெரிந்தது. அந்தப் புத்தகங்கள் கிடைத்தால் தன் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்று உணர்ந்தார்.
முயற்சியைத் தொடர்ந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டில் மாயப் பகுதிகளை ஸ்பெயின் நாடு ஆக்கிரமித்தது. அவர்களுடைய கிறிஸ்தவ மத நம்பிக்கைகளோடு மாய மதக் கதைகள் ஒத்துப் போகவில்லை. சில ஸ்பெயின் மத வெறியர்கள் மாயர்களின் புத்தகங்களைத் தீயிட்டு எரித்தார்கள். எரிந்தவை புத்தகங்கள் மட்டுமில்லை, அளவிட முடியாத மதிப்புக் கொண்ட நாகரிக வரலாற்று ஆதாரங்களும்தான்.
அடுக்கடுக்காகத் தோல்விகளை சந்தித்தபோதும், மனம் தளராமல் ஸ்டீஃபென்ஸ் ஆதாரங்களைத் தேடினார். இந்த உழைப்பும் நம்பிக்கையும் பலன் கொடுத்தன.  போப்பல் வூ (Popol Vuh) என்ற பழங்காலக் கதைகளின் தொகுப்புப் புத்தகம் ஸ்டீஃபென்ஸ் கையில் கிடைத்தது.
மாய நாகரிகத்தின் மாஜிக் அவரை மயக்கத் தொடங்கியது. தான் போகும் இடங்களில் எல்லாம் பழங்கால மாய நாகரிக அடையாளைங்களை அவர் தேடத் தொடங்கினார்.
பழைய நாகரிகங்கள் பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்க அகழ்வு ஆராய்ச்சி பயன்படுகிறது. எந்த இடங்களைத் தோண்டினால்,. பழங்கால நாகரிகம் பற்றிய “புதையல்கள்” கிடைக்கலாம் என்று முதலில் அனுமானம் செய்யவேண்டும். அங்கே ஆழமாக, ஆழமாகத் தோண்ட வேண்டும்.
இது லாட்டரி மாதிரி. பல இடங்களில் தேட வேண்டும், தேடிக் கொண்டேயிருக்க வேண்டும். பழங்காலச் சான்றுகள் கிடைத்தால் உங்கள் முயற்சி வெற்றி. பணம், புகழ், தேடி வரும். சான்றுகள் கிடைக்காவிட்டால் உங்கள் வாழ்க்கையும் செலவிடும் பணமும்   வீண்.
எங்கே “புதையல்” கிடைக்கும் என்று அனுமானிப்பதுதான் முயற்சியின் முதல் படி.
எப்படி அனுமானிப்பார்கள்? புத்தகங்கள். ஓவியங்கள் ஆகியவை வழி காட்டும். இவற்றைவிட முக்கியமானவை சிதிலமான கட்டடங்கள், ஓவியங்கள் சிற்பங்கள் ஆகியவை.
இந்தச் சிதிலங்கள் பெரும்பாலான நாகரிகங்களில் தரைக்கு மேல் இருக்கும். அல்லது  சிதிலங்களின் அடையாளங்கள் தரைக்கு மேல் தெரியும். மாய நாகரிகத்தின் அகழ்வாராய்ச்சியில் புதிய பிரச்னை வந்தது. மாய நாகரிகம் நிலவிய இடம் மழை அதிகமாகப் பெய்யும் இடம், அடர்த்தியான காடுகள் நிறைந்த இடம். ஸ்பெயின் நாட்டவரின் ஆதிக்கத்தால், மாயன்கள் தங்கள் உறைவிடங்களை விட்டுப் புதிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த பழைய இடங்களில்தானே நாகரிக அடையாளங்கள் கிடைக்கும்? ஆட்கள் வாழாத அந்த இடங்களை, கட்டடங்களை மரங்கள், காடுகள் மூடின.
மரங்கள் மூடிய இந்தப் புதையல் உலகத்துக்குத் தெரியாமலே போயிருக்கும்.  காடுகளுக்குள் போகும்போது, சில அடையாளங்களைப் பார்க்கும்போது, இங்கே ஒரு வரலாறு ஒளிந்திருக்கிறது என்று ஸ்டீஃபென்ஸூக்குப் பொறி தட்டியது. தன் கையில் கிடைத்த புத்தகங்களை எல்லாம் படித்தார். பொறி ஆர்வ நெருப்பானது.
ஸ்டீஃபென்ஸின் ஆரம்ப ஆராய்ச்சிகள் நாகரிகப் புதையல் கிடக்கும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக ஆரூடம் கூறின. தானும் ஓவியர் காதெர்வுட்டும் சேர்ந்து பணியாற்ற இது நல்ல வாய்ப்பு என்று ஸ்டீஃபென்ஸ் நினைத்தார். காதெர்வுட்டை இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, தான் வாழும் மத்திய அமெரிக்கப் பகுதிக்கு வரச் சொன்னார்.
1839 – இல் இருவரும் சேர்ந்து தங்கள் அகழ்வாராய்ச்சிகளைத் தொடங்கினார்கள். தோண்டத் தோண்ட வியப்பான கட்டடங்கள், கோயில்கள், கல்லறைகள், பிரமிட்கள், ஓவியங்கள், சிற்பங்கள், புத்தகங்கள் ஆகியவை கிடைத்தன.
இருவர் திறமைக்கும் இவை அபாரத் தீனி போட்டன. 1841 ல் தங்கள் கண்டுபிடிப்புகளைப் புத்தகமாக இவர்கள் வெளியிட்டார்கள்.
“கணிதம், வானியல் போன்ற துறைகளில் மாயர்கள் இத்தனை சாதித்திருக்கிறார்களா?” என்று உலகம் வியந்தது.
இந்த வியப்பு உலகின் இன்னும் பல ஆராய்ச்சியாளர்களைத் தூண்டியது. இவர்கள் மத்திய அமெரிக்காவில் பல இடங்களைத் தோண்டினார்கள், விலை மதிப்பற்ற ஆதாரங்களைக்கண்டு பிடித்தார்கள்.
இவர்களுள் மிக முக்கியமானவர்கள் எரிக் தாம்ஸன் (Eric Thompson) ஸில்வானஸ் மோர்லி (Sylvanus Morley) என்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். மாய விவசாயம், ஆட்சி முறை போன்ற துறைகள் பற்றிய இவர்களின் கண்டுபிடிப்புகள் மிக முக்கியமானவை.
மாயன் நாகரிகம் 2000 ஆண்டுகள் செழித்து ஓங்கியது. கி. பி. 1517 வரை, அதாவது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் வரை இருந்த நாகரிகம். இன்றும் சுமார் அறுபது லட்சம் மாயன்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெரு நாட்டில் வசிக்கிறார்கள். மற்றவர்கள் மெக்ஸிகொ, கவுதமாலா, பெலிஸே ஆகிய நாடுகளிலும் வசிக்கிறார்கள். இந்த “ஒரிஜினல்” மாயர்கள் அனைவரும் பண்டைய விவசாய, கலை நுணுக்க வேலைப்பாடுகள் ஆகியவற்றை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள்.
இத்தனை சிறப்புகள் கொண்ட மாய நாகரிகம் ஏன் மறைந்தது?
ஆராய்ச்சியாளர்கள் பல காரணங்கள் சொல்கிறார்கள்.
மாயன்கள் தங்கள் இயற்கைச் சூழ்நிலையைக் காப்பாற்றுவதில் அதிக கவனம் காட்டவில்லை. காடுகள் நிறைந்த தங்கள் பகுதிகளின் மரங்களை வெட்டிச் சாய்த்தார்கள். மரங்கள் விழுந்தன, மழை குறைந்தது. பஞ்சம், பசி, பட்டினி, நோய்கள் பெருகின. மாய சமுதாயம் இவற்றுக்கு பலியானது.
இன்னொரு முக்கிய காரணம் ஸ்பெயின் நாடு. பதினைந்தாம் நூற்றாண்டில் படையெடுத்த ஸ்பெயின் சுமார் 90% மாயன் மக்களைக் கொன்று குவித்தது. மீதம் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பெரு போன்ற நாடுகளுக்கு ஓடிப் போனார்கள்.
இன்று ஏகதேசம் மறைந்து போனாலும், தங்கள் பொற்காலத்தில் மாயர்கள் செய்த சாதனைகள், தொட்ட சிகரங்கள் மிக மிக முக்கியமானவை. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்,

Friday, January 8, 2016

சித்தர்கள் கண்ணாடி..

சித்தர்கள் கண்ணாடி..



நூலினைக் கொண்டு கண்ணாடியை அறுக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்தத் தகவல் போகர் அருளிய "போகர் ஜாலவித்தை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல். அந்தப் பாடல் பின்வருமாறு...

கனத்தநல்ல கண்ணாடி யறுப்பதற்கு
கண்மணியே ரவையுமல்ல கல்லுமல்ல
வனத்தினிலே இருக்குமுடுக் கிலைதானப்பா
வண்மையா யதினுடைய ரசத்தைவாங்கி
இனத்துடனே வெள்ளை வுண்டை நூலைவாங்கி
இண்டான ரசத்தினிலே தோய்த்துர்த்தி
கனத்துடனே சனங்களுக்கு காட்டி நூலாம்
கண்ணாடி தனையறுக்கத் துண்டாய்ப்போமே.

முடுக்கி இலையின் சாற்றினை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதில் வெள்ளை உண்டை நூலை நன்கு ஊறவைத்து, நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த நூலைக் கொண்டு கண்ணாடி அல்லது கண்ணாடி புட்டியை அறுத்தால் இரண்டு துண்டுகளாகி விடும் என்கிறார் போகர்.
 

திருமூலர் கூறுகிறார்.

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வார் இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே”.

எட்டாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தாலும், ஜோதியாக இருப்பவனைக் கண்ணால் காண முடியாது. அதே சமயம் நம்மை நாம் அறிந்து கொண்டால் மட்டுமே நம்முள் ஜோதி வடிவமாக இருக்கும் பரம்பொருளைக் காண முடியும். எப்படிக் கண்ணாடியில் தோன்றும் பிம்பத்தைக் கண்ணாடி வேறு, பிம்பம் வேறு என்று பிரிக்க முடியாதோ, அதுபோன்று நம்முள்ளே இரண்டறக் கலந்திருக்கும் ஒளி வடிவான பரம்பொருளை நம்மிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்று திருமூலர் கூறுகிறார்.


சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை.. 


காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். 
*எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. 
*மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், 
*முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய், 
*எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். 
*எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும். 
*எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது. 

பாலாவின் பார்வையில் கண்ணாடிப் பயிற்சி

ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த தவ முறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை

இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில்பல்வேறு தரப்பட்ட மக்களால்பல்வேறுவடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறதுவருகிறது.

கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச்  சிறந்த தவமுறைகண்ணாடிப் பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்துவந்தால் 

அவருக்கு கீழ்க்கண்ட நிலைகள் ஏற்படுகிறது.,............

1.ஆன்மா விழித்துக் கொள்கிறது

2.ஆன்மா உடலிலிருந்து தனியாகப் பிரிந்து தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது

3.ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான திறவுகோலைப் பெறுகிறது

மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான  ஒரு பாலமாக கண்ணாடிப் பயிற்சி முறை இருக்கிறது

கண்ணாடிப் பயிற்சி முறையை சுருக்கமாக ஞானத்திற்கான திறவுகோல் என்று சொல்லலாம்.

சூட்சுமமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மா ஒளி சூட்சும சரிரத்தில் ஏற்றி வைக்கப் படுகிறது

இதனை இன்னும் சூட்சுமமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்சூக்கும உடல் விழிப்புற்றுகரண உடல் ஜோதிமயமாகிறது

கடவுளை உண்மையாக அடைவதற்கான வாயில்களின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ,அதனை திறக்கும் திறவுகோலாக கண்ணாடிப் பயிற்சி முறை பயன்படுத்தப் பட்டு வருகிறது என்ற என்றஉண்மை பல பேருக்கு தெரிவதில்லை 
கண்ணாடிப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்
  
கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

1.கண்ணாடிப் பயிற்சி செய்ய எடுத்துக் கொள்ளும் கண்ணாடி  ஒன்றே கால் அடி அகலம் இரண்டே கால் அடிஉயரம் இருக்க வேண்டும்

2.கண்ணாடியிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தள்ளி அமர வேண்டும்

3.முழு உருவமும் தெரியும் படி அமர வேண்டும்

4.கண்ணாடிப் பயிற்சிக்கு பயன்படுத்தும் கண்ணாடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது மறைவாக ஒருதுணியால் மூடி மறைத்து வைத்து விட வேண்டும்

5.காப்பு மந்திரம் தெரிந்தவர்கள் காப்பு போடலாம் அல்லது உடல் கட்டு திக்கு கட்டு போன்ற கட்டுமந்திரங்களைச் சொல்லி விட்டு கண்ணாடிப் பயிற்சி செய்யலாம்

6.இதை அதிகாலை 03. 00 மணிமுதல் 08.00 மணி வரை செய்யலாம் அதிகாலை 03.00 முதல் 05.00 வரைசெய்வது உத்தமம்

கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில் பலவித நிலைகளில் செய்யப்பட்டு வருகிறது அதில்ஒரு சில  கண்ணாடிப் பயிற்சி முறைகளைப் பார்ப்போம்

கண்ணாடிப் பயிற்சி முறை 1
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் 
செய்ய வேண்டும்

2.பிறகு இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்

3.பிறகு நம் முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்

4.பிறகு கண்களை  மூடி உள்ளே பார்க்க வேண்டும்

5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்


கண்ணாடிப் பயிற்சி முறை 2


1.முதலில் இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்

2.பிறகு நெற்றிக் கண்ணைப் பார்க்க வேண்டும்

3.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்

4.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்

கண்ணாடிப் பயிற்சி முறை 3

1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப்  பார்த்துச் செய்ய வேண்டும்

2.பிறகு தொண்டையைப் பார்க்க வேண்டும்

3.பிறகு முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்

4.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்

5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்

இவற்றில் எந்த முறை சரி என்று உணர்ந்து அதை பயன்படுத்தி வந்தால் ஞானத்தின் திறவுகோல் நமக்குகிடைக்கும்.

கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்

கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும்  இது கண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானேதவிர அதுவே முழு பலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்து எதை வசியப்படுத்த வேண்டும் என்றுநினைக்கிறோமோ அதற்குரிய வசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்

கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்து செய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும்ஜக வசியம் முக வசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெற வேண்டுமானால் சர்வ சித்திதனாஉறர்ஸன சங்கல்பம் என்ற ஒரு மந்திரம் இருக்கிறது அந்த மந்திரத்தை உச்சாடணம் செய்து கண்ணாடிப்பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும் வசியமாகும்


இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ,

சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்பது மந்திரம் ;

கண்ணாடி என்பது யந்திரம் ;

தந்திரம் என்ன என்பது தெரியவரும்போது தான் கண்ணாடிப் பயிற்சியின் சூட்சும வியம் நமக்குத் தெரிந்துவிடும்.

கண்ணாடிப் பயிற்சியுடன் போட்டோ

கண்ணாடிப் பயிற்சியுடன் கீழ்க்கண்ட முறையையும் செய்து வந்தால் பலன் தெரியும்

நம் போட்டோ ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் அது தெளிவாகவும் முகம் முழுவதும் தெரியும்படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்

கண்ணாடிப் பயிற்சியை முடித்தவுடன் எடுத்துக் கொண்ட நம் போட்டோவின் வலது கண்ணை சிறிது நேரம்பார்த்து விட்டு வைத்து விட வேண்டும்

தொடர்ச்சியாக இதை செய்து வர வேண்டும் இந்த போட்டோவை வேறு யாரும் பார்க்காதவாறு மறைவாகவைத்திருக்க வேண்டும் 

எந்த செயல் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த செயலை வலது கண்ணைப் பார்த்து சொல்லிவிட்டு போட்டோவை வைத்து விட வேண்டும் 

இதே முறையில் தொடர்ந்து செய்து வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும் எண்ணிய காரியம்முடிந்தவுடன் அடுத்து நடக்க வேண்டிய செயலை நினைத்துக் கொண்டு போட்டோவைப் பார்க்க வேண்டும்

கண்ணாடிப் பயிற்சி செய்வதின் மூலம் பெறப்படும் பலன்கள் எல்லாம் குறைவேகண்ணாடிப் பயிற்சிஎளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாத கணக்கிலடங்காத அரிய பொக்கிங்களை தன்னுள் அடக்கிவைத்திருக்கிறது அதன் திறவுகோல் மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது திறவுகோலை கண்டுபிடியுங்கள்அரிய பொக்கிங்கள் உங்களுக்கு கிடைக்கும்