Friday, May 31, 2019

தர்மம் தலை காக்கும், தலைக்கவசம் உயிர்காக்கும்

தர்மம் தலை காக்கும், தலைக்கவசம் உயிர்காக்கும்


தர்மம் தலை காக்கும் என்பது பழமொழி... இன்று தலைக்கவசம் உயிர்காக்கும் என்பது புதுமொழியாகிவிட்டது. கட்டுமானத் துறை, உற்பத்தி துறைகளில் மட்டுமின்றி, இன்று இருசக்கர வாகன ஓட்டிகளின் அதி அவசியமான உயிர்காக்கும் கவசமாக மாறியுள்ளது ஹெல்மெட் எனும் தலைக்கவசம். 

ஆனால், முதல்முறையாக ஹெல்மெட் பயன்படுத்தப்பட்டது எப்போது, எப்படி இந்த ஐடியா வந்தது, வடிவமைத்தது எப்படி போன்ற விஷயங்கள் நம் மனதில் எழுகிறதல்லவா? அதுபற்றிய ஒரு சுவாரஸ்ய அதே சமயம் ஒரு பயனுள்ள செய்தித் தொகுப்பாக இது அமைகிறது.

01. ஹெல்மெட் 

விபத்தில் சிக்கும்போது தலையில் ஏற்படும் காயங்கள்தான் உயிரை எடுக்கும் விஷயமாக அமைகிறது. அதில், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும்போது தலையில் அதிகம் காயம் ஏற்படும் ஆபத்தை இந்த ஹெல்மெட் குறைக்கிறது அல்லது போக்குகிறது. இதுபற்றி நடத்தப்பட்ட ஆய்வில் தலையில் ஏற்படும் பெரிய அளவிலான காயங்களை 69 சதவீதமும், மரணத்தை 42 சதவீதமும் குறைப்பதாக தெரிவிக்கிறது.

02. ஹெல்மெட் பிறந்த கதை 

ஹெல்மெட் வரலாறு சரியாக ஒரு நூற்றாண்டை கடந்து விட்டது. கடந்த 1914ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் வேகமாக செல்லும்போது வீரர்கள் பலர் கீழே விழுந்து அடிபடுவது தொடர்கதையாக இருந்தது. அப்படி அடிபடும் வீரர்களில் பலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிக மோசமான பாதிப்புகளை ஏற்பட்டுள்ளது. இதனை டாக்டர் எரிக் கார்னர் என்ற மருத்துவர் கவனித்து வந்ததுடன், இதற்கு தீர்வு காண்பதற்காக, தலைக்கவசம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, மோஸ் என்ற டிசைனரை அணுகி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, அந்த கவசமானது தலையில் அடிபடாதவாறு உறுதியாக இருக்க வேண்டும்; அதேநேரத்தில் தலைக்கு அதிக உறுத்தல் இல்லாமல் இலகு எடை கொண்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினர்.

03 புறந்தள்ளிய வீரர்கள் 

எந்த கண்டுபிடிப்பும் முதல்முறை தோல்வி கண்டது சரித்திரம் கண்ட உண்மை. அதே கதிதான் டாக்டர் கார்னர் வடிவமைத்த தலைக்கவசத்துக்கும் நேர்ந்தது. டாக்டர் கார்னரின் தலைக்கவசத்தை ஆட்டோ சைக்கிள் யூனியன் அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில், ஐலே ஆஃப் மேன் டிடி மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அதனை பல வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், தலைக்கவசம் அணிந்து விழுந்து தலையில் அடிபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பரவலாக ஹெல்மெட் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அதன் மகத்துவத்துமும் புரியத்துவங்கியது.

04. மோட்டார்ஸ்போர்ட்ஸும், ஹெல்மெட்டும்

1950களில் முகத்தை முழுவதுமாக மூடக்கூடிய அளவிலான ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட் மாடல்கள் அறிமுகமானது. அத்துடன், அனைத்துவிதமான மோட்டார் பந்தயங்களிலும் வீரர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 1954ல் பெல் நிறுவனம் அதிக உற்பத்தி இலக்கை வைத்து ஹெல்மெட் மாடல்களை வெளியிட்டது.

05.. விழிப்புணர்வு 

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொல்பொருள் ஆய்வாளரும், ராணுவ அதிகாரியுமான லாரன்ஸ் ஆஃப் அராபியாவின் மரணமும் ஹெல்மெட் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்தது. சைக்கிளில் சென்றவர்கள் மீது மோதாமல் இருக்க மோட்டார்சைக்கிளை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கினார் லாரன்ஸ். மேலும், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், சில நாட்கள் கோமாவில் இருந்து அவர் மரணத்தை தழுவினார். அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இருசக்கர வாகனங்களில் செல்வோர்க்கு ஹெல்மெட் அவசியம் என்பதை உணர்ந்து அனைவரிடம் தெரிவிக்கத் துவங்கினார்.


Wednesday, May 15, 2019

"ராணி கி வாவ்" அரண்மனை..

"ராணி கி வாவ்" அரண்மனை..


ஆண் தான் பெண்களுக்காக எல்லாம் செய்கிறான். தனது மனைவிக்காக கல்லறை கூட கட்டினான் என பலர் ஷாஜகானை புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். ஆனால் ராணி உதயமதி தன் கணவருக்காக கட்டிய கட்டித்தை  பற்றி வாங்க பார்க்கலாம்..!

தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் ராணி உதயமதி தன் கணவர் பீம்தேவுக்காக தன் மகன் முதலாம் கர்ணதேவன் உதவியுடன் கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான ராணியின் படிகிணறு என்கிற' ராணி கி வாவ்' அரண்மனை..

குஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள பதான் கிராமத்தில் உள்ளது..

காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. 1958 வரை மண் மூடிக்கிடந்த இந்த பொக்கிஷக் கிணறை, 1972-ல் அகழ்வாராய்ச்சி மூலமாக வெளிக்கொண்டு வந்தனர். 1984-ல் இருந்து அது பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.


1980 இல் இப்படிக் கிணற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாய்வு செய்து நல்ல நிலையில் மீட்டது 
ஏழு அடுக்குகளாக கட்டப்பட்ட இக்கோட்டையின் கடைசி படிக்கட்டில்30 கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு சுரங்கவழியும் உள்ளது. கல்லால் ஆன குழாய்கள் போடப்பட்டு, படான் பகுதிக்கு அருகே உள்ள சித்பூர் என்ற நகர் வரை அந்த சுரங்கவழி பாதை நீள்கிறது. இது தண்ணீர் செல்லும் வழியா? அல்லது யுத்த காலத்தில் தப்பிச்செல்லும் வழியா? என்று அறியப்படவில்லை. 


இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், காளி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், கல்கி, மகிசாசூரன் வென்ற மகிசாசூரமர்தினி, வாமனர், வராகி, நாககன்னிகள், யோகினி, 16 வகையான கலைநயத்துடன் கூடிய அழகிய தேவலோக அப்சரசுகளின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் கௌதம புத்தர், சாதுக்கள், திருபாற்கடலில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின் சிற்பங்கள் கொண்டுள்ளன.
மேலும் இந்த இராணியின் கிணறு மழை நீர் சேமிக்கும் இடமாக இருந்தது. இக்கிணற்றைச் சுற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விஷக்காய்ச்சல் நீக்கும் ஆயுர்வேத மருத்துவக் குணம் கொண்ட செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு இருந்தது.

இந்த இராணியின் கிணறு நீர் சேமிக்கும் இடமாக மட்டும் இல்லாது குஜராத் மக்களின் ஆன்மிகத் தலமாக விளங்கியது. இக்குளத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் 800 இக்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.


புதிய நூறு ரூபாய்இல் ராணி கி வாவ் படம் வெளியாட்டப்ட்டது 

இத்தகவல் எத்தனை பேருக்குத் தெரியும்..!?

"எவளாச்சும் ஒரு செங்கல்நட்டுவச்சாளா" இனி பாடுவா????

Friday, May 10, 2019

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை

வரலாற்று சிறப்பு மிக்க செங்கோட்டை- கொல்லம் ரயில் பாதை



வரலாற்று சிறப்பு மிக்க ரயில் பாதைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதையாகும். 1873ம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசால் தொடங்கப்பட்ட செங்கோட்டை-கொல்லம் ரயில் பாதை பணிகள் 27 ஆண்டுகள் நடைபெற்றது. இப்பாதையை அமைத்திட தென்னிந்திய ரயில்வே கம்பெனி ரூ.17 லட்ச ரூபாயும்திருவாங்கூர் நிர்வாகம் ரூ.7 லட்ச ரூபாயும்அப்போதைய திருவாங்கூர் திவான் ராமய்யர் ரூ.6 லட்சம் ஆக ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இப்பணிகள் தொடங்கப்பட்டு 1901ம் ஆண்டு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவாங்கூர் திவான் ராமய்யர்

1902ம் ஆண்டு முதல் சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1901ம் ஆண்டு கொச்சி துறைமுகத்திற்கு கப்பல் வழியே ரயி்ல்  பெட்டிகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மாட்டு வண்டிகளில் பொருட்களை ஏற்றி கொல்லம் கொண்டு வரப்பட்டு முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து 1904ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து 21 குண்டுகள் முழங்கிட அங்குள்ள ரயில் நிலைய மேலாளர் ராமைய்யா என்பவர் முதல் பயணிகள் ரயிலை கொல்லத்தில் இருந்து செங்கோட்டைக்கு கொடியசைத்து துவங்கி வைத்தார். ரயிலின் பெயர் தூம சகடசூரன் ஆகும். சில மாதங்கள் இப்பாதையில் சென்ற ரயில் தென்மலை-கழுதுருட்டி இடையே உள்ள ஒரு குகையில் மண் சரிவு ஏற்பட்டு அப்படியே பல பயணிகளோடு மண்ணோடு மண்ணாகி புதைந்து போனது. அதன்பின் அருகிலேயே 13 கண் கொண்ட மிகவும் பிரமண்டமான ஒரு பாலத்தை கட்டினர். அப்பாலம் வழியே தற்போது ரயி்ல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இப்பாதையில் பகவதிபுரம் முதல் ஆரியங்காவு இடையே 1 கிமீ தொலைவில் ஒரு மலை குகையும்,கழுதுருட்டி-தென்மலை-இடமண்-இடையே 4 மலைக்குகைகளும்5 பெரிய பாலங்களும்120க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும் உள்ளன.


செங்கோட்டை-புனலூர் இடையே உள்ள முக்கிய தலங்கள் பற்றிய விபரங்கள்

செங்கோட்டையில் இருந்து சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

பகவதிபுரம் ரயில் நிலையம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்ட முதல் ரயில் நிலையம்.  இங்கிருந்து புளியரை அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்ல சுமார் 2 கிமீ தொலைவு மட்டுமே. மேலும் இந்த ரயில் நிலையம் தாண்டிய உடன் இருபுறங்களிலும் அடர்ந்த வனப்பகுதியில் தென்றல் காற்று தேகத்தை தழுவுகிறது.

வடபுறத்தில் உயர்ந்த மலைப்பகுதியின் கீழ் புறத்தில் கடல் மட்டத்தி்ல் இருந்து சுமார் 700 அடி உயரத்திலும் ரயில் சொல்லத் தொடங்குகிறது. எஸ் வளைவு என்ற பகுதி இரு மாநில எல்லை பகுதியாகும். இங்கு கீழே பேருந்தும்மேலே ரயிலும் செல்ல தொடங்கும். இதிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சென்றல் அடர்ந்த பாறைகளை உடைத்து உருவாக்கப்பட்ட ரயில் பாதை தொடங்குகிறது. இதற்கு அடுத்தற்போல் ஆயிரம் பேரை காவு வாங்கியதாக இன்றும் செவிவழி கதையாக கூறப்படும் 1901ம் ஆண்டு அடர்ந்த 500 அடி உயரம் கொண்ட மலையினை சுமார் 15 அடி உயரமும்15 அடி அகலமும்கொண்ட 900 மீ்ட்டர் நீளம் கொண்ட முதல் மலைக்குகை தொடங்குகிறது.
இந்த மலைக் குகையினுள் ரயில் செல்ல தொடங்கும் போது அமாவாசை இருட்டில் செல்வது போன்ற உணர்வும்ஒரு திகில் கலந்த விவரிக்க முடியாத உணர்வும் ஒரு சேர ஏற்பட்டாலும் ஆயிரம் குளிர்சாதன பெட்டிகளை இயக்கியது போன்ற குளிர்ச்சியும் ஏற்படுகிறது.

இந்த இடத்தினுள் ரயி்ல் செல்லும் போது அனைத்து பெட்டிகளிலும் மின் விளக்கு வெளிச்சம் கொடுக்கிறது. மேலும் குகை பகுதியில் பராமரிப்பு பணிகளுக்கும் செல்லும் பணியாளர்களுக்காக சுமார் 10 அடிக்கு இடை இடையே பாறையை குடைத்து சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குகையை ரயில் கடக்கும்போது சுமார் 30 கிமீ வேகத்தில் இயக்கப்படுகிறது. இக்குகையை மட்டும் கடப்பதற்கு சுமார் 2.30 நிமிடங்கள் ஆகிறது. இரவில் 28 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த குகையை வி்ட்டு ரயில் வெளியேறிய சில நிமிடங்களில் ஆரியங்காவு ரயில் நிலையத்தை அடையும்போது கீழே பேருந்து பாதையும்மேலே ரயில் பாதையும் நம்மை வரவேற்கிறது.

ஆரியங்காவு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 300 அடி தூரத்தில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. மேலும் வருடத்தில் 10 மாதம் கொட்டும பாலருவியும் உள்ளது. ஆரியங்காவில் இருந்து கழுதுருட்டி என்ற பகுதியை நோக்கி ரயில் செல்லும்போது தேகம் திடீர் என சில்லிடும் அளவுக்கு குளிர்ந்த காற்று தேகத்தை தழுவுகிறது. இருபுறங்களிலும் தரைமட்டத்தின் 300 அடி உயர பள்ளத்தில் சோப்பு டப்பாக்களை சிதைத்து விட்டது போல் மலைக்குன்றுகளுக்கு  இடையே ஆங்காங்கே தென்படுகிறதுஆலயங்கள்கட்டிடங்கள்ரப்பர்,கிராம்புவாழை தோட்டங்கள்.

ரயில் பாதையை ஓட்டி ஏராளமான பகுதிகளில் குடியிருப்புகள்8 கண் பாலத்தை ரயில் கடந்து கழுதுருட்டி ரயில் நிலையத்தை தொட்டு தென்மலை ரயில் நிலையத்தை நோக்கி செல்கிறது. சுமார் 300 அடி முதல் 500 அடி நீளமுள்ள ஒரு சிறு மலைக்குகைகளை ரயில் கடக்கும்போது இடப்புறம் திரும்பி பார்த்தால் ஆங்கிலேயரின் அபாரமான செயல்திட்டமும்இருமாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பும்தியாகமும் வரலாற்றை பறை சாட்டுவது தெரியும். எவ்விதமான தொடர்பும் இல்லாத காலகட்டத்தில் தரை மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் பாதை அமைத்த திறமை தெரியும்.

இதனை தாண்டும்போது அழகாய் ஓடி கேரளத்தை நோக்கி பாயும் நதி. அதனை ஓட்டி சாலைஅதனை தொட்டற்போல் தரை மட்டத்தில் இருந்து சுமார் 80 அடி உயரத்தி்ல் 13 வாயிற்கொண்ட கற்களால் கட்டப்பட்ட இராட்சத பாலம். இதில் ரயில் ஊர்ந்து செல்லும்போது ஆயிரம் கண்கள் வேண்டும் இந்த அழகிய காட்சியை காண்பதற்கு...

இப்பாதையில் ரயில் செல்லும்போது அனைத்து பெட்டிகளை டிரைவரும்கடைசி பெட்டியில் இருக்கும் கார்டும் பார்க்க முடியும். தென்மலைக்குள் நுழையும்போதே இரு குகையை ரயில் கடந்து விடுகிறது.

தென்மலையில் கேரள மாநில சுற்றுலாத்துறைவனத்துறைபொதுபணி துறையினர் தனிதனியாக டூரிசம் சென்டர்படகு போக்குவரத்துவனப்பகுதியில் மலை ஏறுதல்உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட எக்கோ டூரிசம் சென்டர் உள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் கல்லசா நீர்தேக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து ரயில் ஓத்தக்கல் என்ற பகுதியை நோக்கி செல்லும்போது வெயில் காலங்களில் வினை இல்லை. மழைக்காலங்களில் தண்டவாளம் ரயில் சக்கரங்களை நகர விடாமல் வழுக்கிவிடும் தன்மைக்கே மாறிவிடும்.

அதற்காக ரயில்வே இன்ஜினில் சான்டல் பவுடர் தனி பாக்ஸ் மூலம் வைக்கப்பட்டு அதற்காக தனி கருவி மூலம் தண்டவாளத்தில் சான்டல் பவுடர்களை கொட்ட செய்து ரயில் சக்கரம் நகர தொடங்கும். மேலும் இந்த ரயில் நிலையத்துக்கு கட்டிடம் கிடையாது. நிலைய மேலாளர் கிடையாது. பயணிகளுக்கு டிக்கெட் வழங்க மட்டும் தனியார் ஏஜென்சி மூலம் விற்பனை நடக்கிறது. இந்த பாதையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மழைக்காலங்களில் அடிக்கடி பாறைகள் உருண்டு விழுந்து விடும் என்பதால் ஒரு வேகானில் கம்ப்ரஸர் பிளாண்ட் வசதியோடு எப்போதும் நிறுத்தப்பட்டிருக்கும். ஓத்தக்கல்எடமண் தாண்டி புனலூரை நோக்கி ரயில் செல்லும்போது இரு சிறு குகைகளை  கடந்து செல்கிறது.

இந்த பகுதியில் ரயி்ல் செல்லும்போது வெப்பமும்குளிரும் ஓரு சேர மேனியை தழுவுகிறது. மலைமுகடுகளில் பனி துளியை கொட்டும் மேகக் கூட்டங்கள் தழுவி செல்லுவதும்பச்சை பசேல் என்று திரும்பிய பக்கமெல்லாம் பூஞ்சோலைகள்ஓங்கி வளர்ந்த தேக்குகமுகுதென்னைமரங்களுக்கு இடையே ஏத்தம்வாழைரப்பர் மரங்கள் அடர்ந்திருக்கும் மிளகு கொடியும்அருகே கிராம்பு செடியும்மரவள்ளி கிழங்கு தோட்டமும்பலாப்பழ மரங்களும் உள்ளனதேனிக்களை போல் அதிகாலையில் ரப்பர் மரங்களின் பாலை சிரட்டையில் (கொட்டாங்குச்சியில்) வெட்டி வடிய வைக்கும் பெரியவர்களும்பெண்களும்சாரைசாரையாய் அதிகாலையிலேயே அணிவகுத்து பள்ளிகல்லூரிக்கு செல்லும் சிறுவர்கள் முதல்இளைஞர்கள்,இளம்பெண்களையும் காண முடிகிறது.

புனலூரில் இறங்கினால் கட்டன் சாயாவும்கப்பை கிழங்கும்மதியம் பத்ரி (புரோட்டாவோடு) கூடிய பீப் மாட்டு கறியும்கொட்டை அரிசிமீன்குழம்பு சாப்பாடும்உணவங்களில் சுண்டிதான் இழுக்கிறது. புனலூருக்குள் ஓடிவரும் கல்லடா நதியில் அமைந்துள்ள அழகிய தொங்கு பாலம் நம்மை ஆச்சரியத்துக்கே அழைத்து செல்கிறது. இத்தடத்தில் 9 லெவல் கிராசிங்கள் உள்ளன. இதில் ஆளில்லாத ரயில் கேட் 6ம்ஆள் உள்ள ரயில்வே கேட் 3ம் உள்ளன. இத்தடத்தில் 3 ரோடு ஓவர் பிரிட்ஜ்களும் உள்ளன.

தென்மலை 13 கண் பாலம் 102.72 மீட்டர் நீளமும்5.18 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. ஆரியங்காவு குகை கடல் மட்டத்தில் இருந்து 280 அடி உயரத்தில் அமைய பெற்றுள்ளது. ஆரியங்காவு-புனலுர் இடையே பாதையில் அம்பநாடுரோஸ்மலை ஆகிய பகுதிகளில் தேயிலை தோட்டங்களையும்செங்கோட்டை-கண்ணுபுளிமெட்டு பகுதியில் தேயிலை தோட்டங்களையும்அரவை ஆலைகளையும் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தினர். மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் தேக்குகடம்பன்பாறை பகுதியில் சந்தன தோட்டங்களையும் அமைத்தனர். இந்த ரயில் பாதை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட பின் வனப்பகுதியை சுத்தம் செய்ய ஆட்கள் இன்றி தவித்த ஆங்கிலேயர்கள் அப்பகுதிகளில் வெள்ளி காசுகளை அள்ளி வீசியுள்ளனர். அந்த தகவலை மக்களிடம் பரப்பியுள்ளனர். அதன்பின் மக்கள் காடுகளை சுத்தம் செய்து காசுகளை பொறுக்கியுள்ளனர். இப்படிதான் இந்த பாதை உருவான வரலாறுகள் கூறப்படுகிறது.

சுற்றுலாத் தலமான பாதை சுமார் 50.5 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த தடத்தில் 2013-ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் ரயில் போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், குறிப்பிட்ட ஆண்டைக் கடந்து சுமார் எட்டு வருடங்கள் அந்த ரயில் இயக்கப்படாமல் நடப்பாண்டில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அகல ரயில் பாதை போக்குவரத்துக்கு துவங்கப்பட்டுள்ளது. தேவையிருந்தோ, இன்றியோ தென்காசி - கொல்லம் ரயில் வழித்தடம் ஓர் சுற்றுலாத் தலமாகவே மாறியது. இன்றும் இந்த ரயில் செல்லும பாதையை ரசித்திட பயணிகள் அதிகளவில் பயணிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். நாமும் ஒரு முறை பயணிப்போம். அப்படி அந்த ரயிலிலும், அது செல்லும் பாதையிலும் உள்ள பசுமையையும், பிரம்மாண்டத்தையும் ரசித்திடுவோம்.