Friday, October 18, 2019

ஜானகியின் காதல்

ஜானகியின் காதல்

  கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் மிக இளவயதில் மரணம் அடைந்தவர்.
அவரது மரணத்தின் காரணங்கள் மிக விசித்திரமானவை. இராமானுஜனை லண்டன் வருமாறு பேராசிரியர் ஹார்வி அழைத்திருந்தார். ஆனால் கடல்
கடந்து செல்லகூடாது என்ற சம்பிரதாயம் காரணமாக அதை இராமானுஜன்
மறுத்திருந்தார். அதன்பின் இராமானுஜனை லண்டன் அழைத்துவரும் பொறுப்பை நெவில் எனும் கணித அறிஞரிடம் ஹார்வி ஒப்படைத்தார், அவர்
சென்னை வந்து இராமானுஜனை மிக கன்வின்ஸ் செய்து லண்டன் வர அழைத்தார்.





  இராமானுஜன் இறுதிமுடிவு தன் தாயினுடையதுதான் என கூறிவிட்டார்.
அன்று இரவு இராமானுஜனின் அன்னையின் கனவில் ஐரோப்பியர்களுக்கு மத்தியில் இராமானுஜன் தலையில் ஒளிவட்டத்துடன் அமர்ந்து இருப்பது போல் கனவு வர, அது அவர்களது குலதெய்வம் நாமகிரி தாயார் கொடுத்த
உத்தரவு என கருதி அவரது அன்னை அவரை ப்ரிட்டன் போக அனுமதித்தார்.



1914ம் ஆண்டு இராமானுஜன் லண்டன் கிளம்பினார். அப்போது அவரது வயது 27. அவரது 22வது வயதில் அவருக்கு திருமணம் ஆகியிருந்தது. அவரது மனைவி ஜானகி. ஆனால்அன்றைய சம்பிரதாயப்படி அவருக்கு திருமணம் நடக்கையில் ஜானகிக்கு வயது 10 தான்.


  திருமணம் ஆகிய பெண்கள் அதன்பின் வயதுக்கு வரும்வரை தந்தை வீடு
சென்றுவிடுவார்கள். அதுபோல் ஜானகியும் தந்தைவீட்டுக்கு சென்றுவிட்டார்.
வயதுக்கு வந்தபின் தான் இராமானுஜனின் இல்லம்
வந்து சேர்ந்தார். ஆனால் இராமானுஜனின் அன்னை அப்போதும்
அவர்களை தனியாக இருக்க அனுமதிக்கவில்லை. அதன்பின்
இராமானுஜன் சென்னைக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து இலண்டனுக்கும் ஜானகியை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இலண்டன் செல்ல முடிவானதும் இராமானுஜனின் நண்பர்கள் அவரை லன்டன்
பயணத்துக்கு தயார்படுத்துவதாக சொல்லி படுத்தி எடுத்துவிட்டார்கள்.



  கோட்டு வாங்கலாம், அளவு எடுக்கலாம், தொப்பி வாங்கலாம் என
சொல்லி அலைகழித்தது கூச்ச சுபாவம் உள்ள இராமானுஜனை மிக
சலிபப்டையவைத்தது. லண்டனின் டர்பன் அணிந்து இருந்தால் அங்கே சக
கணிதவியலாலர்கள் அவரை தவறாக நினைக்க மாட்டார்கள்
என்பது அவரது நண்பர்களுக்கு தெரியவில்லை.
இராமானுஜன் சுத்த சைவம். அந்த கால விதிகளின்படி பிராமணர்கள்
சமைத்ததை மட்டுமே உண்னமுடியும். அதனால் கப்பலில்
தானே சமைத்ததை மட்டும் உண்டார். அதுபோக சின்ன, சின்ன
விஷயங்களை கூட அவருக்கு எடுத்து சொல்ல யாரும்
இல்லை. கப்பலில் கடுமையாக குளிர்கிறது என புகார் செய்தபின்
தான் இராமானுஜனுக்கு கப்பலில் உள்ள படுக்கையில் உள்ள போர்வைகளுக்கு அடியே படுக்கவேண்டும் என்ற உண்மையே தெரியவந்தது. அதற்கு முன் இந்தியாவில் கயிற்றுகட்டிலில் படுப்பதுபோல்
கம்பளிகளுக்கு மேலே படுத்து குளிரில் அவதிபட்டுகொண்டு இருந்தார்.

   இங்கிலாந்து சென்றதும் உணவு பிரச்சனை அவரை வாட்டிஎடுத்தது. அது  உலகயுத்த காலம். குளிர் காலம் வேறு. தன்
உணவை தானே சமைக்கவேண்டும் என்ற நிபந்தனையால்
அவருக்கு குளிர்காலத்தில் காய்கறி கிடைப்பது, ஷாப்பிங் போவது, சமைப்பது முதலியவற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டன. 30 மணிநேரம்
தொடர்ந்து ஆராய்ச்சி செய்வார். அதன்பின் 20 மணிநேரம்
தொடர்ந்து உறங்குவார். சமைப்பது ஒரு நாளைக்கு ஒரு
முறை, இருமுறைதான். இதனால் உடல் மிக மெலிந்து விட்டது.
மருத்துவமனையில் சேர்க்கபட்டு பின் இந்திய பயணத்தை உடல் தாங்கும் என மருத்துவர்கள் கூறி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பபட்டார், லண்டனில் இருந்த குறுகியகாலத்தில் அவர் செய்த ஆய்வுகளை நூறு ஆண்டுகள் கழிந்தும் இன்னும் கணித உலகில் மிகப்பெரும் அளவில் கொண்டாடபடும் அளவு உள்ளன என்பது குறிப்பிடதக்கது.


  சென்னைக்கு வந்து சேர்ந்ததும் அவரது தாயார் மட்டும் வந்து இருந்தார். "எங்கே ஜானகி" என கேட்கவும் அவரை நாமக்கல்லில் விட்டுவிட்டு வந்ததாக தாயார் கூறினார். கடும்கோபமடைந்த இராமானுஜன் ஜானகியை தன்
மாமியாருடன் சென்னைக்கு வரவழைத்தார். சென்னையில் கடைசி மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த நிலையில் ஜானகி அவருடன் இருந்து அவரை கவனித்துக்கொண்டார். இராமானுஜனின் கடைசி 3 ஆண்டுகள் ஜானகியுடன் கழிந்தது. "அவருக்கு அரிசி, லெமென் ஜூஸ்,
பால், நெய் கொடுத்துவந்தேன். வலி எடுக்கையில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பேன். அந்த பாத்திரங்கள் கூட இன்னும் அந்த நினைவாக என்னிடம் உள்ளன" என பெருமிதத்துடன் பின்னாளில் கூறினார் ஜானகி.

   இராமானுஜனுடன் அவரது மனம் முழுமை அடைந்ததா என்பதே பலரும்
சந்தேகித்த விஷயம். சென்னைக்கு திரும்பிய காலத்தில் இராமானுஜன் கடும் உடல்நலகுறைவுடன் இருந்தார். அவர்களுக்கு பிள்ளைகள் கடைசிவரை இல்லை. 1920ம் ஆண்டு தன்
33ம் வயதில் இராமனுஜன் ஜானகியின் மடியில் இறந்தார்.  அப்போது ஜானகியின் வயது 21.



  அதன்பின் அந்த இளம் விதவை தன் சகோதரன், சகோதரிகள் ஆகியோருடன் மாறி, மாறி வசித்து வந்தார். கடைசியில் டெய்லரிங் கற்று ஒரு டைலராக வாழ்க்கையை நடத்தும் நிலை உருவானது. 'நான் இறந்தாலும் என் கணிதம் உன்னை காப்பாற்றும்" என மரணதருவாயில் இராமானுஜன் கூறியிருந்தார்.

  1962ம் ஆண்டு இராமானுஜனின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது தான் ஜானகி என ஒருவர் இருப்பதே தெரிந்து அவர்களுக்கு 20,000 ரூபாய் பரிசளித்து மாதம் 1000 ரூபாய் பென்ஷன் வழங்கினார்கள். இராமனுஜனின் வார்த்தைகள் இப்படி பலவருடங்கள்
கழித்தே உண்மையானது,.



  அரசாங்கம் மறந்தாலும் கணித உலகம் ஜானகியை மறக்கவில்லை. உலகின் புகழ்பெற்ற கணித நிபுணர்களான ஆண்ட்ரூஸ், பெர்னபார்ட் முதலானோர் சென்னை வந்தபோதெல்லாம் ஜானகியின் தையல்
கடைக்கு சென்று அவரை சந்திக்க தவறவில்லை. இராமனுஜனுடன் வாழ்ந்த
சிலவருடங்களை தன் இறுதிகாலம் வரை மனதில் சுமந்த
ஜானகி இறக்கையில் அவரை சந்திக்கபோவதாக சொல்லி மகிழ்ச்சியுடன் உயிர்நீத்தார். வருடம் 1994. அன்று ஜானகியின் வயது 95.

மித்தி பாகிஸ்தானில் இப்படி ஒரு ஊரா?

மித்தி பாகிஸ்தானில் இப்படி ஒரு ஊரா?


ஒரு இந்து பெண்ணா இப்படி சொல்வது ?

அந்த  இஸ்லாமிய பெரியவர்களால் அதை நம்பவே முடியவில்லை :
"அம்மா, நீங்கள்
நிஜமாகத்தான்
சொல்கிறீர்களா ?"

அந்தப் பெண் உறுதியான குரலில் சொன்னார்:
"ஆமாங்க பாய் , நமது ஊரில் உள்ள  மசூதியை இன்னும்  பெரியதாக கட்டுவதற்கு ,   நீங்கள் திட்டம் போட்டு இருப்பதாக கேள்விப்பட்டேன்.
என் இடம் அதற்கு  பக்கத்தில்தானே இருக்கிறது. அதையும் உங்கள் இடத்துடன் சேர்த்து பெரிதாக கட்டுங்கள் . இது என்னுடைய நன்கொடையாக இருக்கட்டும். "

இதை சொல்லி விட்டு அந்தப் பெண்மணி  அங்கிருந்து போய் விட்டார்.

அந்த இடத்தில் கூடி இருந்த முஸ்லிம் பெரியவர்கள் அனைவரும் கண்களில் நீர் மல்க, அருகில் இருந்த மசூதிக்கு சென்று , மண்டியிட்டு  மனம் உருகி , அந்த  இந்து சகோதரிக்காக
தொழ ஆரம்பித்தார்கள்.

இது நடந்தது நம் பக்கத்து நாடான பாகிஸ்தானில் !

கராச்சியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் மித்தி.

அங்குதான் இந்துக்களும் , இஸ்லாமியர்களும் இப்படி  பல ஆண்டு காலமாக ஒற்றுமையுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சுமார் 80 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த ஊரில் 70 சதவீதத்திற்கு மேல் இந்துக்கள்தான் வசிக்கிறார்கள்.

கோவிலில் பூஜை நடக்கும்போது , மசூதியில் ஒலிபெருக்கி வைப்பதில்லை.
அது போல மசூதியில் தொழுகை  நடக்கும்போது  கோவிலில் மணி அடிப்பதில்லை.

அந்த ஊரிலுள்ள  இஸ்லாமிய பெரியவர்  ஹாஜி முகம்மது இப்படிச் சொல்கிறார் :

"இந்துக்கள் தீபாவளி கொண்டாடும் போது எங்களை அழைப்பார்கள். நாங்கள் ஈகைத்திருநாளை கொண்டாடும் போது அவர்களை அழைக்கிறோம்.

ரம்ஜான் நோன்பு காலங்களில் , எங்கள் கண்களில் படும்படியாக இந்து சகோதரர்கள் சாப்பிடுவதில்லை.
சொல்லப்போனால் எங்களோடு சேர்ந்து அவர்களில் சிலரும் நோன்பு இருப்பார்கள்."

எல்லாம் சரி ! அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் எப்படி ?

ஒரு சிலர் அவ்வப்போது மதபேத வம்பு வழக்குகளை   ஆரம்பிப்பது  உண்டாம்;
ஆனால்  இரு தரப்பு பெரியவர்களும் அதை ஆரம்ப கட்டத்திலேயே
அடக்கி விடுவார்களாம்.

மித்தி.

பாகிஸ்தானில் இப்படி ஒரு ஊர் இருப்பது , இன்றுதான் எனக்கு தெரியும் .

மித்தியில் உள்ள இந்து கோவிலின் படத்தையும் இங்கே பகிர்ந்திருக்கிறேன் !

அரசியல்வாதிகளிடமிருந்தும் , மதவாதிகளிடமிருந்தும் இந்த ஊரை காப்பாற்றி வரும் இந்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி !

John Durai Asir Chelliah