Thursday, February 27, 2020

சந்திர சேகர் 'ஆசாத்'

பகத்சிங்கிற்கு பயிற்சி கொடுத்த ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாக வாழ்ந்த அந்த மாவீரன் யார் தெரியுமா? 

           ந்திர சேகர் 'ஆசாத்' 

இந்தியாவின் சுதந்திர போராட்டம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல்லாயிர கணக்கானோர் தங்கள் உயிரைக் கொடுத்து பல இலட்ச மக்கள் போராட்டத்தின் மூலம் பெறப்பட்டதுதான் நம் சுதந்திரம். நம் சுதந்திரத்திற்கு போராடிய பலர் நம் நினைவில் இல்லை என்பதே உண்மை. அந்த வகையில் சந்திர சேகர் ஆசாத் என்ற மாபெரும் போராளியைப் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மில் பலரும் இந்த பெயரையே இப்போதுதான் முதல் முறை கேள்விப்பட்டிருப்போம் என்பதே கசப்பான உண்மையாகும். 

சுதந்திர போராட்டத்தின் வீரமான போராளிகளில் இவருக்கென்று ஒரு தனி இடமும், வரலாறும் உள்ளது. இந்திய சுதந்திர புரட்சியின் முகம் என்றே இவரைக் கூறலாம். பயமறியா இந்த புரட்சி வீரனின் நினைவு நாளான இன்று அவரின் வீர வரலாற்றை தெரிந்து கொள்வோம். 

ந்திரசேகர் ஆசாத் 
இந்திய சுதந்திர புரட்சியின் ஆரம்ப புள்ளியாக இருந்த சந்திரசேகர் ஆசாத் 1906 ஜூலை 23 அன்று மத்திய பிரதேசத்தின் பவ்ராவில் பிறந்தார். லாலா லஜ்பத் ராய் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக ககோரி ரயில் கொள்ளை, சட்டசபை வெடிகுண்டு சம்பவம் மற்றும் லாகூரில் சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் போன்றவற்றில் ஈடுபட்ட அவர் துணிச்சலான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அச்சமற்ற புரட்சியாளராக இருந்தார். 

முதல் தண்டனை 
புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் போலீஸாரால் முதலில் பிடிபட்டபோது அவருக்கு வயது 15 தான். ஆசாத்தின் முதல் தண்டனையாக 15 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் சந்திர சேகர் 'ஆசாத்' என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டு சந்திர சேகர் ஆசாத் என்று அழைக்கப்பட்டார். 

சாத்தின் இறப்பு 
அவர் உயிருடன் இருந்தவரை அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். பிப்ரவரி 27, 1931 அன்று, கூட்டாளிகளில் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்ட அவர், அலகாபாத்தின் ஆல்பிரட் பூங்காவில் பிரிட்டிஷ் போலீசாரால் முற்றுகையிடப்பட்டார். அவர் வீரத்துடன் போராடினார், ஆனால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த அவர் போலீஸில் பிடிபடுவதை விட உயிரை விடுவதே மேல் என்று தன்னிடம் இருந்த ஒரு தோட்டாவின் மூலம் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார். 

தன் மரணம் கூட தன் கையால்தான் நேர வேண்டும் என்ற உறுதியுடன் இறந்தார் சந்திரசேகர் ஆசாத்

ம்மாவின் ஆசை 
சந்திரசேகர் என்பது மட்டுமே அவரின் பெயர் ஆகும். ஆசாத் என்பது அவரின் மீதிருந்த மரியாதையால் மக்கள் அளித்த பெயர். ஆசாத் என்பதற்கு சுதந்திரம் என்று பொருள். சந்திர சேகரின் தாயார் தனது மகனை ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞராக்க விரும்பினார், எனவே சமஸ்கிருதம் படிப்பதற்காக வாரணாசியில் உள்ள காஷி வித்யாபீத்துக்கு அனுப்பும்படி தனது தந்தையை வற்புறுத்தினார். 

த்துழையாமை இயக்கம் 
டிசம்பர் 1921 இல், மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தபோது, அவர் ஒரு மாணவராக இருந்தபோதிலும் இணைந்தார். அதேசமயம் முன்னாள் ஜாபுவா மாவட்டத்தின் பழங்குடி பில்ஸிடமிருந்து வில்வித்தை கற்றுக் கொண்டார், இது பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் போது அவருக்கு உதவியது. 

சிறப்பான சம்பவங்கள் 
சந்திரசேகர் ஆசாத் 1925 ஆம் ஆண்டில் ககோரி ரெயில் கொள்ளை மற்றும் 1928 இல் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜான் போயன்ட்ஸ் சாண்டர்ஸின் படுகொலை ஆகியவற்றால் மிகவும் பிரபலமானவராக மாறினார். லாலா லஜபதி ராயின் கொலைக்காக பழிவாங்கும் விதத்தில் இவர் இதனை செய்தார். 

சாத்தின் சபதம் 
ஒரு புரட்சியாளராக, அவர் ஆசாத் என்ற கடைசி பெயரை ஏற்றுக்கொண்டார், அதாவது உருது மொழியில் "சுதந்திரம்" என்று பொருள். இவர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் போலீஸால் தன்னால் உயிருடன் பிடிக்க முடியாது என்ற சபதம் ஏற்றிருந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை போராட்டத்தில் வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆசாத் உணரவில்லை, குறிப்பாக 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கருத்தில் கொண்டு, இராணுவப் பிரிவுகள் நூற்றுக்கணக்கான நிராயுதபாணியான பொதுமக்களைக் கொன்றது மற்றும் ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது. இந்த சம்பவம் இளம் ஆசாத்தை சோகத்தால் ஆழமாகவும் உணர்ச்சிகரமாகவும் பாதித்தது. 

கத்சிங் 
இந்தியாவின் முக்கியமான இளம் போராளிகளில் ஒருவர் பகத்சிங் ஆவார். லாலா லஜ்பத் ராய் இறந்ததைத் தொடர்ந்து பகத் சிங் ஆசாத்துடன் சேர்ந்தார், அதற்குப்பின் இருவரும் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராக போராடினர். பகத்சிங்கிற்கு ஆசாத் ஆயுத பயிற்சியும், ரகசியமாக செயல்படுவது எப்படி என்றும் பயற்சி அளித்தார். 

சாத் பூங்கா 

ஆசாத் இறந்த அலகாபாத்தில் உள்ள ஆல்ஃபிரட் பார்க், சந்திரசேகர் ஆசாத் பார்க் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களுக்கும் அவர் பெயரிடப்பட்டுள்ளன.

நாம் மறந்த இந்திய விடுதலைக்கா பாடுபட்ட போராளிகள் பற்றிய தகவல்!!!

றிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்..

Wednesday, February 26, 2020

வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா? அப்ப இத டெய்லி செய்யுங்க...


வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா? அப்ப இத டெய்லி செய்யுங்க...



மனிதனின் வாயில் சுமார் 500 விதமான இனங்கள் அல்லது நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் எப்போது ஒருவரது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது தான் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஈறு அழற்சி, ப்ளேக், பல் சொத்தை போன்றவற்றை சந்திக்கிறோம். தற்போது பலர் வாய் துர்நாற்றம், மஞ்சள் பற்கள், ஈறுகளில் இரத்தக்கசிவு, சொத்தை பற்கள் போன்ற பல பிரச்சனைகளை அன்றாடம் சந்திக்கின்றனர். இதற்கு மோசமான வாய் பராமரிப்பு மட்டுமின்றி, உண்ணும் உணவுகளும் தான் முக்கிய காரணம். 

என்ன தான் கடைகளில் வாயின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் பல்வேறு டூத் பேஸ்டுகள் விற்கப்பட்டாலும், அவற்றில் கெமிக்கல் நிறைந்திருப்பதால், சில சமயங்ளில் அவை பற்களுக்கு தீங்கை விளைவித்து, பெரும் பாதிப்பை உண்டாக்கிவிடுகின்றன. முந்தைய காலத்தில் எல்லாம் டூத் பேஸ்ட் என்பதில்லை. வெறும் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி தான். இவற்றில் உள்ள உட்பொருட்கள் தான் வாயின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தன. 

 தற்போது இந்த குச்சிகள் நமக்கு கிடைக்காவிட்டாலும், நம் வீட்டுச் சமையலறையில் வாயில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சில பொருட்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு அன்றாடம் பராமரிப்பு கொடுத்து வந்தால், நிச்சயம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாயின் ஆரோக்கியத்தை மேம்படும். இப்போது வாயில் உள்ள கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும் மௌத் வாஷை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்றும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் காண்போம். 


தேவையான பொருட்கள்: 

* பேக்கிங் சோடா * உப்பு * ஹைட்ரஜன் பெராக்ஸைடு * டூத் பிக்ஸ் * டூத் பிரஷ் 

செய்முறை #1 ஒரு சிறிய பௌலில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ள வேண்டும். 

செய்முறை #2 பின்பு வெதுவெதுப்பான நீரை ஒரு கப்பில் எடுத்து, அதில் டூத் பிரஸை 3 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்

செய்முறை #3 பிறகு டூத் பிரஷை பயன்படுத்தி, உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து எடுத்து, அந்த கலவையால் பற்களை நன்கு மென்மையாக தேய்க்க வேண்டும். 

செய்முறை #4 பின் சில துளிகள் ஹைட்ரஜன் பெராக்ஸைடை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் அதை வாயில் ஊற்றி ஒரு நிமிடம் வாயைக் கொப்பளித்து துப்ப வேண்டும். 

செய்முறை #5 பிறகு டூத் பிக் கொண்டு பற்களின் பின் பிடிந்துள்ள ப்ளேக்கை மென்மையாக தேய்த்து விட வேண்டும். பின் குளிர்ந்த நீரால் வாயைக் கழுவ வேண்டும். 

 உங்கள் வாயில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். மேலும் தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ளதை வாரம் ஒருமுறை தவறாமல் பின்பற்றி வந்தால், பற்கள் மற்றும் வாய் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Monday, February 10, 2020

பெட்ரோலை விட செலவு குறைவுதான்... ஆனாலும் பைக்கில் டீசல் இன்ஜின் வழங்க மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

பெட்ரோலை விட செலவு குறைவுதான்... ஆனாலும் பைக்கில் டீசல் இன்ஜின் வழங்க மாட்டார்கள்... ஏன் தெரியுமா? 


பைக்குகளில் டீசல் இன்ஜின்கள் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

நம் அனைவருக்கும் பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாளில் நாம் பலமுறை பைக்குகளை பயன்படுத்துகிறோம். பொதுவாக பெட்ரோல் மூலம்தான் பைக்குகள் இயங்குகின்றன. ஆனால் டீசலை காட்டிலும் பெட்ரோல் விலை மிகவும் அதிகம். இதனால் டீசலில் இயங்கும் வகையில் பைக்குகள் வடிவமைக்கப்படாதது ஏன்? என்ற சந்தேகம் சில சமயங்களில் நமக்கு எழும். பைக்குகள் டீசலில் இயங்கினால் நம்மால் பெருமளவு பணத்தை மிச்சம் பிடிக்க முடியும். இருந்தபோதும் பெட்ரோலில் இயங்கும்படிதான் பெரும்பாலும் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. எனவே பைக்குகளில் ஏன் டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

1. டீசல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோ 24:1. இது பெட்ரோல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோவை விட அதிகம். பெட்ரோல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோ 11:1 மட்டுமே. இந்த அதிகப்படியான கம்ப்ரஷன் ரேஷியோவை கையாள வேண்டுமென்றால், டீசல் இன்ஜின் பெரிதாகவும், ஹெவி மெட்டலாகவும் இருப்பது அவசியம். இதன் காரணமாகதான் பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது டீசல் இன்ஜின் கனமானதாக இருக்கிறது. அத்துடன் மோட்டார்சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களுக்கு டீசல் இன்ஜின்கள் 'சூட்' ஆகாமல் போவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. 

2. ஹை-கம்ப்ரஷன் ரேஷியோ காரணமாக, பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது டீசல் இன்ஜின்கள் அதிக வைப்ரேஷனையும், சத்தத்தையும் உருவாக்கும். மோட்டார்சைக்கிள் போன்ற இலகு ரக வாகனங்களால் இந்த அதிகப்படியான அதிர்வுகளையும், சத்தத்தையும் கையாள்வது என்பது சாத்தியம் இல்லாதது. இதன் காரணமாகவும் பைக்குகளில் டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுவதில்லை. 

3. ஹை-கம்ப்ரஷன் ரேஷியோ மற்றும் ஹெவி இன்ஜின் காரணமாக, டீசல் இன்ஜின்களின் ஆரம்ப விலையானது பெட்ரோல் இன்ஜினை விட அதிகமாக இருக்கும். இந்த ஆரம்ப விலை வேறுபாடானது சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு நெருக்கமாக வரும். எனவே மோட்டார்சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களுக்கு இது பொருத்தமானதாக இருக்காது. 

4. டீசல் இன்ஜின்கள் அதிக டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தவை. ஆனால் பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது அதன் ஆர்பிஎம் குறைவு. ஆனால் பைக்குகளை பொறுத்தவரை நாம் அதிக வேகத்தை எதிர்பார்ப்போம். அது நமக்கு தேவையான ஒன்றும் கூட. இதன் காரணமாகவும் டீசல் இன்ஜின்கள் பைக்குகளுக்கு 'செட்' ஆவதில்லை. 

5. டீசல் எரியும்போது, மிக அதிகப்படியான வெப்பம் உருவாகும். இது சிலிண்டரின் சுவர்கள் மற்றும் இன்ஜினின் இதர பாகங்களை அழித்து விடும். இந்த வெப்பத்தை குறைக்க வேண்டுமென்றால், நமக்கு அதிக மேற்பரப்பு பகுதி மற்றும் முறையான கூலிங் சிஸ்டம் ஆகியவை தேவை. எனவே டீசல் இன்ஜின்கள் பெரிதாக உருவாக்கப்படுகின்றன. இதனாலும் பைக்குகளுக்கு டீசல் இன்ஜின்கள் பொருத்தமாக இருப்பதில்லை. 

6. சிலிண்டருக்குள் அதிக காற்றை பம்ப் செய்ய டர்போசார்ஜர் அல்லது சூப்பர்சார்ஜரை டீசல் இன்ஜின் பயன்படுத்துகிறது. இது அதன் விலை மற்றும் அளவை அதிகரிக்க செய்து விடுகிறது. இது போன்ற காரணங்களால்தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மோட்டார்சைக்கிள்களில் டீசல் இன்ஜின்களை வழங்குவதை தவிர்க்கின்றன.