Wednesday, July 23, 2014

வியர்வை நாற்றம் போக்க சில எளிய வழிகள்!!!

கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை வந்தாலே அழையா விருந்தாளியாக வியர்வையும் சேர்ந்து கொள்கிறது. சிலரது வியர்வையும், அதனால் ஏற்படும் நாற்றமும் அதிகமாக இருக்கும். எவ்வளவு வாசனைத் திரவியங்களைப் பூசினாலும் அது தீர்வதில்லை. 

அடிக்கும் வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து, குளிர்சாதன அறையிலேயே முடங்கிக் கிடப்பவர்களும் இருக்கிறார்கள். வியர்வையின் அளவை வைத்துத்தான் நமது உடல் வெப்பநிலையையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். மனிதர்கள் அனைவருக்கும் வியர்வைச் சுரப்பி ஒரே எண்ணிக்கையில்தான் இருக்கும். 

அந்த சுரப்பிகள் இயங்கும் தன்மையில்தான் அதிகம், குறைவு என்று வேறுபடும். உண்மையில் வியர்க்காமல் இருந்தால்தான் பிரச்சினை. அதேநேரம் அதிகம் வியர்ப்பதும் ஒருவித நோய் பாதிப்பின் தன்மையாக இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் மருத்துவரைச் சந்தித்து தங்களுக்கு அதிகமாக வியர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அதற்கேற்பச் சிகிச்சை மேற்கொள்ளலாம். 

உண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும் நடக்கிறது. 

வியர்வையில் இரண்டு விதங்கள் உண்டு. சிலருக்கு உடல் முழுக்க ஒரேமாதிரி வியர்க்கும். சிலருக்கு முகம், தலை, வயிறு, தொடை, அக்குள் என்று குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வியர்க்கும். உடல் பருமன் அதிகமாக இருப்பதும் வியர்வைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. 

சிலர் மசாலா நிறைந்த உணவை ஆர்வமாய் அள்ளித் திணிப்பார்கள். இவர்களிடம் இருந்து வெளிப்படும் வியர்வை துர்நாற்றம் நிறைந்ததாய் மாறிவிடுகிறது. துர்நாற்ற வியர்வையால் அவதிப்படுகிறவர்கள் மசாலா, பூண்டு, வெங்காயம் தவிர்ப்பது நல்லது. 

உடம்பு நன்றாக வியர்த்து விட்டால் உடனே குளிப்பவர்கள் பாக்டீரியா தொற்றில் இருந்து தப்பி விடுவார்கள். இப்படிக் குளிப்பவர்கள் அந்த வாளித் தண்ணீரில் இயற்கை நறுமணப் பொருட்களை இட்டு உடலுக்கு ஊற்றிக் குளிக்கலாம். வியர்வை நாற்றம் விலகிவிடும். 

கோடையைச் சமாளிக்கும்விதமாக தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள். அதோடு இந்தக் கோடையில் தவறாமல் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் பருகுங்கள். வியர்வை கட்டுப்படுவதோடு, வெளிப்படும் கொஞ்ச வியர்வையும் நாற்றம் இல்லாததாக இருக்கும். கொஞ்சம் கவனம் வைத்தால், வியர்வைப் பிரச்சினையை விலக்கிவிடலாம்!

இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.


” எலுமிச்சையை  அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டால் போதும் ,   ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது.


வாசனைத்திரவியங்கள் பயன்படுத்தாமல் வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நம் உடலில் இருந்து நீக்கலாம்.


  • தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்கள்.

  • சாதாரண நீர் அருந்துவதை விட சிறிது சீரகம் போட்டு சூடாக்கி ஆற வைத்தோ அல்லது சிறிது துளசி இலை போட்டு வைத்த குளிர்ந்த நீரையோ அருந்துவது மிகவும் நல்லது.

  • உள்ளி (சின்ன வெங்காயம்), வெங்காயம், பூண்டு (வெளுத்துள்ளி), இறச்சி, அதிக காரம் உப்பு மசாலா கலந்த உணவுப்பொருட்களை குறைக்கவும். இவை வியற்வை நாற்றத்தை அதிகப்படுத்தும். 

  • நாற்றம் அதிகமாக இருந்தால் அடிக்கடி சுடுநீர்(டீ, காபி) குடிப்பதை தவிர்க்கலாம். 

  • சாதாரண சோப்பை நிறுத்திவிட்டு மெடிமிக்ஸ், டெட்மசால் (மருந்து கடைகளில் கிடைக்கும்) போன்ற ஆண்றி பாக்ரீரியல் சோப்புகளை மட்டும்கொஞ்ச காலத்திற்கு பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 

  • அடிக்கடி நீண்ட நேரம் குளிந்த நீரில் குளித்து உடல் சூட்டை தணிக்க முயலவும். வீட்டில் குளிப்பதை விட ஆறு, குளம், கடல் அருவி இவைகளில் குளிக்கும் போது இயற்கையாகவே உடல் சீக்கிரமாக தணிய ஆரம்பிக்கும். 

  • கடைசியாக நீங்கள் புகைபிடிக்கும் பழக்கம் உடைய ஆளாக இருந்தால் அதை உடனடியாக நிறுத்துங்கள். 
சில பயனுள்ள தகவல் 




Friday, July 18, 2014

இந்திய நாணயங்களை பற்றிய அறியப்படாத சில உண்மைகள்!!!

இந்திய நாணயங்களை பற்றிய அறியப்படாத சில உண்மைகள்!!!  


சென்னை: இந்தியாவில் பிறந்து, வளர்ந்து நம் நாட்டின் மீது அதிக பற்று கொண்ட மக்கள் நாம். இந்தியவின் ரூபாய் தாள்கள் எப்படி சம்பாதிப்பது, எப்படி பெருக்குவது என்று பல வழிகளை கண்டிருக்கும் நாம், அதனை குறித்த வரலாறு எத்தனை பேருக்கும் தெரியும். இந்தியா ரூபாய் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்களை இங்கு சாட் & ஸ்வீட்டா பாக்கலாம் வாங்க.

முதன்முதலில் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் எப்போது வெளியிடப்பட்டன?

காகிததினாலான நாணயம் 18ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டது. முதலில் பாங்க் ஆஃப் பெங்கால், பாங்க் ஆஃப் பம்பாய், மற்றும் பாங்க் ஆஃப் மெட்ராஸ் ஆகிய தனியார் வங்கிகள் காகிதத்தினாலான பணத்தை அச்சிட்டன. 1861ஆம் ஆண்டு காகித நாணய சட்டத்திற்கு பின் இந்திய அரசிற்கு (ஆங்கிலேய அரசு) காகித பணம் அச்சிடுவதற்கு ஏக போக உரிமை வழங்கப்பட்ட பின்னர் இது நடைமுறைப்படுத்தப்பட்டது.

1935-ல் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா நிறுவப்பட்டது, அதற்கு முன்பு வரை காகித பணம் அச்சிடும் உரிமையை இந்திய அரசாங்கம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகலவில் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லாத பழக்கம் இந்தியாவில் உண்டு. அதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிங்க வேண்டும்.

10,000 ரூபாய் தாள்கள்

 10,000 ரூபாய் பிரிவில் காகித பணத்தினை இந்திய அரசாங்கம் 1938-ல் அச்சிட்டு கொண்டிருந்தது குறிப்பிடதக்கது.

ஆறாம் ஜார்ஜ் மன்னர் 

1938 -ல் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவினால் அச்சிடப்பட்ட முதல் காகித பணம் ரூ5 ரூபாய் நோட்டு ஆகும். அது ஆறாம் ஜார்ஜ் மன்னரின் உருவதினை கொண்டிருந்தது. அதே ஆண்டில் ரூ10 ரூ100 ரூ1000 ஆகிய ரூபாய் நோட்டுககளும் வெளியிடப்பட்டன.

5000 ரூபாய் தாள்!! 

1946ஆம் ஆண்டு கணக்கில் வராத பணத்தினை ஒழிப்பதற்காக ரூ 1000 மற்றும் ரூ10000 ஆகியவை செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இவை மீண்டும் 1954-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த முறை (ரூ5000 ரூபாய் தாளும் அச்சிடப்பட்டது) இவை 1978-ல் மீண்டும் திரும்பி பெறப்பட்டது.

ஆர்பிஐ

ஆர்பிஐ விரும்பிய பிரிவில் காகித பணம் வெளியிட முடியுமா? தற்பொழுது ரூ10,ரூ100,ரூ500,ரூ1000 ஆகியவை மட்டுமே அச்சிடப்படுகின்றன. ரூ1, ரூ2, ரூ5 ஆகியவை உலோகத்தினாலான காசுகளாக்கப்பட்டதால், அவை ரூபாய் நோட்டுக்ளாக அச்சிடுவது நிறுத்தப்பட்டது.

மீண்டும் ரூ10,000 அச்சிட முடியுமா??

எனினும், ரூ10,000 வரையினாலான பிரிவில், பணத்தினை அச்சிடும் அதிகாரம் ஆர்பிஐக்கு உண்டு. உயர்ந்த மதிப்பு கொண்ட பிரிவில் பணத்தை அச்சிடுவதற்கு,1934- ல் ஏற்படுத்தப்பட்ட ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்திய சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது.

ஆர்பிஐ தான் முடிவு செய்யும்.. 

எத்தனை நோட்டுகள் அச்சிட வேண்டும் என்று ஆர்பிஐ முடிவு செய்கிறது. பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அழுக்கடைந்த நோட்டுகளை திரும்ப பெறுதல் ஆகிய காரணிகளின் அடிப்படையில், எத்தனை நோட்டுகள் அச்சிட வேண்டும் என்று ஆர்பிஐ முடிவு செய்யும்.

ஒரு ரூபாய் நோட்டு 

காசுக்கள் அடிக்கும் பொறுப்பு ஆர்பிஐயை சார்ந்ததல்ல. அது இந்திய அரசை சார்ந்தது, எனவே தான் ஒரு ரூபாய் நோட்டுகளில் இந்திய நிதி துறை செயலாளரின் கையொப்பம் காணப்படுகிறது. 1940இல் போர் கால நடவடிக்கையாக ஒரு ரூபாய் நோட்டு மறு அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு ஒரு ரூபாய் நோட்டு இந்திய அரசால் நாணய அந்தஸ்தை அடைந்து வெளியிடப்பட்டது. 1994 -ஆம் ஆண்டு வரை இந்திய அரசு ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது.

ரூ1, 50 பைசா நாணயங்கள் 

எந்த ஒரு தொகைக்காகவும் ஒரு ரூபாய் (ரூ 1 மற்றும் மேலே) நாணயத்தினை கொடுக்கவும்/பெறவும் பயன்படுத்த முடியும். ஆனால் ரூ 10 ரூபாய்க்கு மேற்பட்ட எந்த ஒரு தொகைக்காகவும் 50 பைசா நாணயத்தினைகொடுக்கவும்/பெறவும் பயன்படுத்த முடியாது, அதனால் 50 புழக்கம் குறைந்தது. மேலும் ரூ1000 வரை நாணயத்தினை அச்சடிக்க முடியும், 1000ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளது.

என்ன பழக்கம்?? 

உலகில் பல நாடுகள் தங்களின் நாட்டு கொடியின் வர்ணத்தில் சட்டை, பணியன், தொப்பி, ஏன் ஜட்டி கூட தைத்து போட்டுள்ளதை பார்த்திருப்போம். ஆனால் இந்தியாவில் மட்டும் தான் தாய்நாட்டு கொடியை தாயை போல் பார்த்து கொள்கிறோம். இந்த பழக்கம் எந்த நாட்டிலும் இருக்காது. இந்தியனாக இருப்பதில் பெருமை அடைவோம்!!

Wednesday, July 16, 2014

வீட்டில் கொசு தொல்லையா.? கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..!


வீட்டில் கொசு தொல்லையா.? கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..!


மழைக்காலம் பிறந்தாலே, கொசுவுக்குக் கொண்டாட்டம் தான். மனிதர்களின் ரத்த வேட்டையைத் துவங்கி விடும். கொசுவை விரட்டியடிக்க இதோ புதிய வழி..



கொசுபர்த்தி தேவையில்லை, ஹிட் தேவையில்லை, காயில்கள் தேவையில்லை. தீங்கு விளைவிக்கும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்..!

உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த இயற்கை வழி..!

ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்கப்பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள்...!
இந்த பதிவை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..! தீங்கு தரும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்.


* பாத்திரங்களில் நீரைத் தேக்கி வைக்கக் கூடாது. பிளாஸ்டிக் பொருட்கள், தொங்கிக் கொண்டிருக்கும் பிளாஸ்டிக் ஷீட்களை அவ்வப்போது நிமிர்த்திக் கட்ட வேண்டும்.
* "ஏசி' மற்றும் கூலர்களிலுள்ள டிரேக்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் உப்பு தூவி வைத்தால், கொசுக்கள் அண்டாது.
* பூந்தொட்டிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
* திறந்த கிணறுகள், தொட்டிகளில் கொசுக்கள் புகா வண்ணம் வலை அடிக்க வேண்டும்.
* அலங்கார மீன்களான, கபூசியா, போசிலி (கப்பி வகைகள்) ஆகியவை, கொசு முட்டைகளை உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டவை. நகராட்சி அலுவலகங்கள், மலேரியா கட்டுப்பாட்டுத் திட்ட அலுவலர்கள் மற்றும் சில கடைகளில் இந்த மீன்கள் கிடைக்கும். இவற்றை பொதுக் கிணறுகள், நீர் நிலைகளில் வளர்த்தால், கொசு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
* வீட்டு ஜன்னல்கள், கதவுகளில், கொசு வலை அடித்து வைக்கலாம்.
* இரவு நேரங்களில் அறையில் கொசு வலை கட்டித் தூங்கினால், கொசுக் கடியிலிருந்து தப்பிக்கலாம்.
* முழுக்கை சட்டை, கால் மறையும் வகையில் பேன்ட் ஆகியவை அணிந்து படுத்தால் கொசு கடிக்காது.
* கொசு கடியிலிருந்து தப்பிக்க, உடலில் பூசும் வகையிலான களிம்புகள் உள்ளன. ஆனால், அவற்றை நேரடியாக உடலில் பூசுவதை விட, ஆடைகளில் பூசிக் கொள்வது நல்லது. குழந்தைகள், கர்ப்பிணிகள் இந்தக் களிம்புகளைப் பயன்படுத்தக் கூடாது.
* கொசு வத்திகள், சுருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இவை, மூச்சுக் குழலில் ஒவ்வாமை ஏற்படுத்தும். ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் ஆகியவற்றை உருவாக்கி விடும்.

* பூச்சிக்கொல்லி மருந்துக் கெல்லாம் இப்போதைய கொசுக்கள் கட்டுப்படுவதில்லை. இந்தப் பூச்சிக் கொல்லிகளை, "ஸ்பிரே' செய்தால், இந்த மருந்தை எதிர்க்கும் சக்தியைக் கொசுக்கள் பெற்று விடும்; மனிதர்களுக்கு, மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும்.
RELATED ARTICLES

பாலஸ்தின மக்களுக்காக கவலைபடுபவரா நீங்கள்?

பாலஸ்தின மக்களுக்காக கவலைபடுபவரா நீங்கள்?

RAHMANFAYED : உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தார்கள் மீதும், இறைவனின் சாந்தியும் சமாதனமும் நிலவுவதாக...

என் உடன்பிறவாக சகோதர சகோதரிகளே, உங்களிடம் நான் சில கேள்விகள் கேட்க நினைக்கிறேன், உங்களுக்கு மட்டும் அல்ல, அதே கேள்வி என்னை நோக்கியும் கேட்டு கொள்கிறேன்..

கடந்த ஒரு மாதமா காலமாக உலகில் பல இடங்களில் இஸ்லாமியர்களுக்கு துன்பம் இழைக்கபடுகிறது, இலங்கையில் சிங்களர்களால்,
ஈரானின் ஒர் இறை கொள்கையை ஏற்ற ஷியா, சன்னி முஸ்லிம்கள் தங்களுக்குள் அடித்து கொள்கின்றனர்.

பாலஸ்தீனில் இதை விட கொடுமையாக, நபிமார்கள் அதிகம் இறங்கப்பட்ட இனமான யுதர்களால் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்படும் கொடுமை ஏன, எல்லா இடங்களிலும் இஸ்லாமியர்கள் அடிவாங்குகிறார்களே, அது ஏன் என்று சிந்திதர்களா நீங்கள்??

பாலஸ்தின மக்களுக்கு அதிரவாக யுத பொருள்களான கோக், பெப்சி என எல்லா பொருள்களை தவிர்பதால், பெரிய அளவில் மாற்றம் ஏற்பட போவது இல்லை, 

ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் போது அவர்களுக்காக துவா செய்கின்ற அந்த ஒன்று மட்டுமே, அவர்களுக்கு நாம் செய்கின்ற நேரடி உதவியாக இருக்கும். 

சரி பாலஸ்தின மக்களுக்கு இந்த நிலை ஏற்பட முக்கிய காரணம் நாம் தான், முஸ்லிம்களாகிய நாம் மட்டுமே காரணம்,
இலங்கையிலும் அதே நிலை தான், காரணம் பல ஜமாத்தாக பிரிந்து இருக்கின்ற காரணத்தால் தான். 
ஈராக்கில் இஸ்லாமிய சமுதாயத்துக்குள்ளே ஷியா சன்னி என இரு சமுதாயத்துக்குள்ளே நடக்கின்ற சண்டையில் மரணிப்பது கலிமாவை சொல்லிய இஸ்லாமியர்கள் தான்.

அரபு தேசத்தின் மத்தியில் இருந்து கொண்டு ஒரு பாலஸ்தின் நாட்டை அபகரித்து கொண்டு ஆட்டம் ஆடும் இஸ்ரேல் என பயங்கரவாத நாட்டை அடக்க கூட முடியாமல் இருக்க காரணம். இஸ்லாத்தை பின்பற்றும் அரபு நாடுகளில் இடையே ஒற்றுமை இல்லாத காரணம் தான், என்பதை தவிர வேறு பெரிய  காரணத்தை சொல்ல முடியுமா நம்மால்??

ஒரு காலத்தில் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் என்றால், ஒற்றுமையான சமுதாயம், கண்ணியமிக்க ஒழுக்கமானவர்களாக மற்றவர்கள் மதிக்கும் வகையில் இருந்த இஸ்லாமிய சமுதயம்,
இன்று மாற்று மதத்தவர்கள் மிதிக்கும் வகையில் ஒற்றுமையும் கண்ணியத்தை இழந்து நிற்கிறது நமது இஸ்லாமிய சமுதாயம் என்று சொல்லும் வகையில் மாறிவிட்டது.

இஸ்லாத்திற்கு எதாவது பிரச்சனை என்றால் ஒற்றுமையுடன் போராடுவது பாராட்டக்கூடியது, ஆனால் அதில் விளம்பரம் தேடும் சில ஜமாத்துகளை நினைத்தாலே வெக்கமாக இருக்கிறது, போராட்டத்திற்கு முதல் ஆளாக வரும் இஸ்லாமிய இளைஞர்களே, ஏன் அது போல ஜவேளை தொழுகைக்காக பள்ளிவாசல் பக்கம் வர ஏன் தயக்கம்.??

ஒரு தாய் வயற்றில் பிறந்த அண்ணன், தம்பிகள் வெவ்வேறு ஜமாத்தை சேர்ந்தவராக இருந்தால், இருவரும் எதிரிகள் போல பிரிந்து, வீட்டு விசேசங்களில் இருந்து எல்லாவற்றீலும் ஒதுங்கி கொள்ளும் அவலத்தை தமிழகத்தில் உள்ள பல இஸ்ஸலாமிய வீட்டில் பார்க்கும் நிலை தற்போது. இப்படிபட்டவர் தன் உடன்பிறந்தவனையே வெறுக்கும், ஏங்கோ பிறந்த வேறு இனத்தை சேர்ந்த பாலஸ்தின மக்களுக்காக வடிக்கும் கண்ணீர் முதலை கண்ணீர் தான், இதை எல்லாரையும் பார்த்து சொல்லவில்லை..

பள்ளிவாசலில் தொழுகை வருபவர்களை தொழுகைக்கு அனுமதிக்காத அவலம் நம் இஸ்லாமியர்களிடம் ஏற்படுவது மிகப்பெரிய கொடுமை, மாற்று மதத்தவர்களையே உள்ளே வர தடுக்ககூடாது என்ற போது, வேறு ஜமாததை சேர்ந்தவன் என்ற காரணத்தால் அனுமதிக்காத இஸ்லாமியர்கள், தன் இனம் அல்லாத அரபு இனத்தவருக்கு வருந்துவது நகைச்சுவையாகவே உள்ளது.

பாலஸ்தின மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், உங்கள் அண்டை வீட்டில் வசிக்கும் ஏழை முஸ்லிம்களுக்கு உதவுங்கள், புனிதமிக்க ரமலான் மாதமான இந்த மாதத்தில் அதிகமாக தான தர்மங்களை உங்கள் ஏழை சொந்தங்களுக்கு உதவுங்கள், அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற்ற வியாபாரம் செய்ய உதவுங்கள், அல்லது அந்த வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவுங்கள், 

முடிந்தவரை சொந்த பந்தங்களுடன் இனைந்து வாழுங்கள் சகோதரர்களே, வெவ்வேறு ஜமாத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் அவர்கள் புரிதலை மறந்து இனக்கம் காட்டுங்கள், அவர்களின் தவறுகள், அவர்கள் சினம் கொள்ளா வகையில் அன்பாக சொல்லி திருந்துக்கள், 

ஒர் இறை கொள்கையான தவ்ஹிதையும், இறை தூதர் முஹ்ம்மது நபி அவர்களின் சுன்னத்தையும் பின்பற்றுபவராக நாம் அனைவரையும் இறைவன் ஆக்கிவைப்பானாக.
 
 இன்ஷா அல்லா, நமது ஒற்றுமையின் முலம் இறைவன் பாலஸ்தின மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலகில் வாழும் மக்கள் அனைவருக்கு நிம்மதியூடன் வாழ அல்லா அருள்புரிவானாக.

ஆமின்...

Wednesday, July 9, 2014

நபிகள் நாயகத்தைப் பற்றி இந்து மத வேதங்களில் முன்னறிக்கை !!!

நபிகள் நாயகத்தைப் பற்றி இந்து மத வேதங்களில் முன்னறிக்கை !!!


சகோதரர் சுவனப்ரியன் முலம் இப்பதிவை பதிவு செய்கிறன்...      

மகரிஷி வியாச முனிவரால் எழுதப் பட்ட பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான பவிஷ்ய புராணத்தில் கீழ்க்காணும் சூத்திரம் வருகிறது:

“ஏதஸ் மின்னந்தரே மிலேச்ச

ஆச்சார்யண ஸமன்வித

மஹாமத் இதிக்கியாத

சிஷ்ய சாகா ஸமன்வித

நிரூபஷ்சேவ மஹாதேவ

மருஸ்தல நிவாஸினம் “


(பவிஷ்ய புராணம் – பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5.8)

ஒரு மிலேச்ச – அதாவது அந்நிய – நாட்டிலே ஒரு ஆச்சாரியர் தன் சீடர்களுடன் வருவார். அவரது பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சேர்ந்தவராக இருப்பார்.

மஹாமத் - முஹம்மது



மிக மிகத் தெளிவாகப் பெயரும் இடமும் குறிக்கப்பட்டிருப்பது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது.

அந்த ஆச்சாரியரின் இனம் அவர்களுடைய தோற்றம், பற்றியும் அதே புராணம் கூறுகிறது.

“ லிங்க சேதி சிகாஹீன

சுமச்சுறுதாரி ஸதாஷக

உச்சலாபி ஸர்வபக்ஷி

பனிஷ்யகி ஆனோமம

முசலை நைஸ்மஸ்கார"


(பாகம் 3, சுலோகம் 25, சூத்திரம் 3)

“அவர்கள் – லிங்க சேதி – அதாவது, சுன்னத்து -செய்துகொண்டிருப்பார்கள். தலையில் குடுமி இருக்காது. தாடி வைத்திருப்பார்கள். சப்தம் போட்டு அழைப்பார்கள். முசலை என்று அறியப்படுவார்கள்.” என்று அந்தப் புராணம் கூறுகிறது.

மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். மிகத் தெளிவான ஒரு காட்சி புலப்படும்!

லிங்க சேதி – சுன்னத் – என்பது இந்து மதத்தில் இல்லாதது. குடுமி என்பது இனந்து மதத்துக்குத் தேவையானது. ஆனால், சிகாஹீனம் – மயிரைக் களைவது – என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதை விட வியப்புத் தருவது முசலை என்ற சொல்.

முஸ்லிம் – முசல்மான் என்பவற்றோடு “முஸலை” என்பதை ஒப்பிட்டுப் பாருங்கள்!

இம்மட்டோ? நபிகள் நாயகத்தின் வாழ்க்கையைப் பற்றியது கூறப்பட்டதோ என நினைக்கும் வண்ணம் வேதத்திலேயே கூறப்பட்டிருக்கிறது.

“ இதம் ஜன இபக்ருத

நாரா சம் ஸஸத விஷியதே

ஷஷ்பீம் சஹஸ்ர நவனீதம்

சசௌரம் அருவ மேஷு தன்மஹே

உஷடி ருயங்லம் பிறவாஹிணோ

வநூ மந்தோஹிர் தசா

வத மர ரத் தஸாயனீ

ஜீ ஹிவுதே திவ

ஈஷ்மான உபஸ்மிறுத

ஏவந் தர்ஷயே மாமஹே

சதம் நிஷ்காந்த சஸரஜ

ஸ்ரீ ணி சதான்னியவதாம்

ஸ்ஹஸ்ரா தசகோ நாம்


(அதர்வ வேதம், 20 ஆம் காண்டம்)

“ ஏ, பக்தர்களே! இதைக் கவுரவத்துடன் கேட்பீர்களாக! புகழக் கூடிய, புகழ் பெறக்கூடிய அந்த மா மஹரிஷி 60,090 மக்கள் மத்தியிலே தோன்றுவார். (முகம்மது என்றாலே, புகழப்பட்டவர், புகழுக்குரியவர் என்று பொருள். அவர் தோன்றிய போது, மக்கா மாநகரின் மக்கள் தொகை 60,000!)

அவர் 20 ஆண்-பெண் ஒட்டகங்களில் சவாரி செய்வார். அவரது மகத்துவம் சுவர்க்க லோகம் வரை செல்லும். அந்த மகரிஷிக்கு 100 தங்க நாணயங்கள் இருக்கும்,-

(ஒட்டகத்தில் தோன்றும் மகரிஷியை நாம் இந்தியாவில் காணவில்லை. ஆகவே இது நபிகளைப் பற்றிக் குறிப்பதே ஆகும்.)

10 முத்து மாலைகளும் 100 தங்க நாணயங்களும் அரேபியாவைத் துறந்து அபிசீனியா சென்ற 100 நபி தோழர்களைக் கூறும்.

10 முத்து மாலைகளும், 300 அரபிக் குதிரைகளும், 10 ஆயிரம் பசுமாடுகளும் இருக்கும்.

(நபிகள் நாயகத்தால் சொர்க்கத்தின் வாரிசுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 10 பக்தர்களைக் குறிக்கும் சொல்தான் 10 முத்து மாலை. நபிப் பெருமானாருடன் முதற் போர்க்களத்தில் இருந்த 313 பேர் குதிரைகளாகவும் மக்கா வரை சென்ற போது அவருடன் இருந்த 10 ஆயிரம் பேர் 10 ஆயிரம் பசுமாடுகள் எனும் செல்வங்களாகச் சித்திரிக்கப்பட்டதாகவும் மவுல்வி முகம்மது உமர் கூறுவார்.)

நபிகள் நாயகத்தை உலகத்தின் அருட்கொடை என்றே அல் குர் ஆன் ஷரீபு கூறும்.

ரிக்வேதத்தில் உலக அருட்கொடையாக 10 ஆயிரம் பேருடன் தோன்றிப் புகழ் பெறுவார் என்று கூறப்பட்டிருக்கிறது.

“அன ஸவந்தா ஸக்பதிர் மாமஹே

மேகாவா சேதிஷ்ஷடா

அசுரோ பகோன

திரை விஷ்னோ அஞேத காப்பி

ஸஹஸ்னரா வைச்சுவாரை

திறையம் ருணாஷிகேத


(ரிக்வேதம் மந்திரம் 5, சூக்தம் 28)

ஆக, வேத மொழியிலும் “மாமஹே” என்றும், மஹாமத் என்றும் கூறப்பட்டிருப்பதும் தொடர்புடைய செய்திகள். சரியாகவே சொல்லப்பட்டிருப்பதும் பெரிய வியப்புக்குரியவையாக இருக்கின்றன.

“அஹ்மித்திஹி பிதுஸ்கரி 
மிதாமிரிதஸ்ய ஜஹ்ரப் 
அஹம் சூர்ய அவாஜனி”
ரிக் வேதம் – 8:6-10
பொருள்: தியாகம் செய்வதில் அஹ்மது முதன்மையாக திகழ்ந்தார். சூரியனை போன்ற மான்பினை கொண்டு சாதனை புரிந்தார்.


…….. மேலே உள்ளது முரசொலி அடியாரின் கட்டுரையாகும். “நான் காதலிக்கும் இஸ்லாம்” என்கிற தலைப்பில் நீரோட்டம் நாளிதழில் அவர் எழுதிவந்த தொடரின் ஓர் அத்தியாயமே மேற்காணும் கட்டுரை. இந்த அத்தியாயத்துக்கு அவர் கொடுத்திருந்த தலைப்பு “வியப்பு: ஆனால் உண்மை! – இந்து மத வேதங்களால் முன் கூட்டிச் சொல்லப்பட்டவர் நபிகள் நாயகம்” என்பதாகும். இந்தக் கட்டுரையைப் படித்து நான் அடைந்த வியப்பை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டே நினைவில் நின்ற இதை இங்கே எழுதியுள்ளேன்.

“வேத் அஹ்மத்ம் புருஷம் 
மஹாந்தமாதித்தயவான் 
தம்ஷ பிரஸ்தாத் தமேவ் 
விதித்வாதி மிருதிய்மிதி
 நான்ய பன்தா
 விதியாத் அயனாய”

யஜூர் வேதம் – யசூர் 31:18
பொருள்: அறிவிற்கு ஆதாரமாக விளங்கிய அஹ்மது மேன்மை மிகு மனிதராக திகழ்வார். இருளின் விரட்டியடித்த சூரியனைப் போன்று அறியாமையை விரட்டி பிரகாஷமாக திகழ்வார். யார் அவரை அறிந்து பின் பற்றுகிறாரோ, அவர் மரண வேதனையை அறியார். மீட்சிக்காக அது தவிர வேறு மார்க்கமும் இல்லை.

“அஹ்மதி பிதுன் பரிமேதா 
ம்யதஸய் ஐஹ்ரஹ அஹம் 
ஸூய இவா ஜனி”

சாம வேதம் – பூர்வார்ச்சிகம், ஐந்தர காண்டம், சதூர்த்தகண்டம்:152
பொருள்: அஹ்மதின் பிதாவிடமிருந்து வேதஞானம் கிடைத்தது. இந்த வேதங்கள் அனைத்தும் தத்துவங்கள் நிறைந்த்தாகும். சூரியனிலிருந்து கிடைத்தது போல, நான் அவரிடமிருந்து ஒளியை பெற்று கொள்கிறேன்.



வியப்படைபவர்கள் வியப்படையலாம். இந்திய மூதாதையர்கள் சொன்னது எதுவானாலும் அதைத் துளியேனும் ஆராயத் தயாராக இல்லாமல், எள்ளி நகையாடுவதையே இயல்பாகக் கொண்டவர்கள் கேலி செய்யலாம். இது அவர்களுக்காக எழுதப்படவில்லை! அவர்கள் எள்ளி நகையாடிக்கொண்டே இருக்கட்டும். அதனால் யாருக்கும் இழப்பு இல்லை! எது ஒன்றையும் சிறிதளவேனும் ஆராயாமல் அப்படியே நம்புவதும் சரி, நம்பாமல் கேலிசெய்வதும் சரி, இரண்டுமே தவறு என்பதே நமது கருத்தாகும்.

-ஜோதிர்லதா கிரிஜா...
-ஜோதிர்லதா கிரிஜா..

நன்றி 
ஜசக்கல்லஹிர் ,

- சுவனப்பிரியன்... அண்ணா ...

related articles

http://rahmanfayed.blogspot.in/2013/07/blog-post_31.html

Thursday, July 3, 2014

எச்சரிக்கை மாமிசங்களில் கலப்படம்!!! (அதிர்ச்சி ரிப்போட்)

எச்சரிக்கை மாமிசங்களில் கலப்படம்!!! (அதிர்ச்சி ரிப்போட்)


காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல்வராம உன்னிக்கிருஷ்ணன் கொரலா வரும்? என்பது ரன் படத்தில் விவேக் நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி,

அதே போன்ற ஆனால் உண்மையான அதிர்ச்சியான தகவல்கள் தான் இது, நீங்கள் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.

அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை,
அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”,

 பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்த முறை ஒழுங்கா கட்டிடு.
மாட்டு மாமிசம்

1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். “முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு”,

2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம் ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன.
இறந்து போன கோழி

இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் :0 என பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் ஊருக்கு போய் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மண் சட்டி சுமக்கவேண்டியதுதான், இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது,

அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கொயம்பேட்டில் கழிவுகழுக்கு பஞ்சமில்லை, அதைக்கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது)
அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித்துண்டங்களில் சொறுகப்படும். குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்ன வென்று இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)(சென்னையில் இது இருப்பது போல் தெரியவில்லை)

அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழகொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்துவிடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக்கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள்.

இன்னும் பல எழுதமுடியும் மற்றொன்று முக்கிய செய்தி இது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஏன் வெளியெ சொல்வதில்லை அதுதான் தமிழரின் அற்புத குணங்களில் ஒன்று முகநூலிலும் இதர இணையத்திலும் தமிழனின் பெருமையை பார் என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவான், அந்த பொய்யை இரசிக்க ஆயிரம் சேர்களும் லைக்குகளும், ஆனால் உண்மையை பகிரமாட்டான் ஏன் தெரியுமா. அடுத்தவன் எக்கேடு கெட்டுப்போகட்டும் நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் (பேருந்தில் நிற்க முடியாத நிலையில் ஒரு முதியவர் இருக்கும் போது இரண்டு வயது குழந்தையை சீட்டில் உட்கார வைத்து இடம் கொடுக்க கூறினால் குழந்தைக்கு காய்ச்சலுங்க பெரியவர் என்ன அவசர வேலையாகவா போகிறார்) காலியாக வரும் பஸ்ஸில் ஏறவேன்டியது தானே என்று சொல்லும்............................

இதை(கெட்டுப்போன மாமிசம்) அரசு எந்த அளவிற்கு தடுக்க முடியும் என்றால் முடியாத காரியம் தான் ஊறிப்போன லஞ்ச பரிமாற்றம். அரசு திட்டமிட்டால் கீழே வர வர காணாமல் போகும். ஒரு நாள் நடவடிக்கை எடுத்தால் இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து விடும் நாம் தான் இதை தடுத்து நிறுத்த முடியும் எப்படி உண்மையை எடுத்துக்கூறுங்கள் பலருக்கு தெரிவியுங்கள் கூட்டம் குறையும் போது தன்னாலேயே நல்ல பொருளை வாங்கி விற்க ஆரம்பிப்பார்கள், அப்போதுஅவர்களுக்கு துணிவு வரும் லஞ்சம் வாங்க வருபவர்களுக்கு பயப்பட தேவையில்லாமல் போகும் நல்ல மாற்றம் வரும்

இதை ஷேர் செய்யுங்கள் இன்னும் நிறைய பேரை சென்றடையட்டும்.


சில எச்சரிக்கை பதிவுகள் 

 


எச்சரிக்கை நீங்கள் பயன் படுத்தும் பொருள்களில் ஹரமான (பன்றி) கொழுப்பு இருக்கலாம்.

 

http://rahmanfayed.blogspot.in/2013/01/blog-post_2277.html

 

ஓர் எச்சரிக்கை பரோட்டா பிரியர்களுக்கு




எச்சரிக்கை நீங்கள் பின்பாக்கெட்டில் பர்ஸ் வைப்பவரா ??


உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா....?