Wednesday, December 19, 2018

பாகம் 2. வேற்றுக்கிரகவாசிகளும் மனிதர்களும்! கடவுள்கள் ஏன் தெரிவதில்லை?

பாகம் 2. வேற்றுக்கிரகவாசிகளும் மனிதர்களும்! கடவுள்கள் ஏன் தெரிவதில்லை?


பாகம் 01

இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே தான் வருகின்றது. இப்படித்தான் மனித இனம் வளர்ச்சியடைந்தது என்பதை எவரும் அடித்துக் கூறவில்லை.
அதனால் ஒரு வித சர்ச்சையான விடயமாகவே இந்த மனித இனத்தின் தோற்றம் காணப்படுகின்றது. அந்த வகையில் பூமியில் மனித இனத்தை தோற்றுவித்தவர்கள் வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்தவர்களே என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர்.
இப்போதைய மனித சமூகம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? மதங்கள் கடவுள்கள் என்ற ஓர் கட்டுப்பாட்டில் வாழ்ந்து கொண்டு வரும் மனித இனம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? இவை மிகப்பெரிய கேள்விகளே.
பூமிக்கு வேற்றுக் கிரகவாசிகள் வருகை தந்தனர் எனவும், அவர்கள் பூமியில் தங்கம் என்ற கனிமத்தை எடுக்கவே வந்தார்கள் எனவும் கடந்த பதிவில் பார்த்திருந்தோம்.

அதை  காண இங்கே<<கிளிக்  >> செய்ங்கள்  
அதன் தொடர்ச்சியாக உண்மைத் தன்மைப் பற்றியும், மனித இனத்தின் தோற்றம் பற்றியும் ஆய்வாளர்கள் கூறியுள்ள அதிர்ச்சிமிக்க தகவல்களை பார்க்கலாம். 
பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் தங்கத்தை எடுக்கவே வந்தார்கள் என்பதனை நிரூபிக்கும் ஆதாரங்கள் பலவற்றை ஆய்வாளர்கள் முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் கி.மு 3000 ஆண்டுகளில் வாழ்ந்து வந்த சுமேரிய நாகரீகம் ஓர், ஆதி நாகரீகம் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் நாகரீகம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் கண்டு பிடிக்கப்பட்ட எழுத்துப் படிவங்களில் ஓர் விடயம் கூறப்பட்டுள்ளது.
அதாவது விண்வெளியில் இருக்கும் ஓர் நட்சத்திரத்தில் இருந்து அநூனாக்கி (Anunnaki) எனப்படும் தமது கடவுள் பூமியில் தங்கத்தை எடுப்பதற்காக வந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடவுள், அவர்களை (மனிதர்களை) தமது அடிமைகளாக இருக்க வேண்டும் என கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.
இந்தத் தகவல்களை 1976ஆம் ஆண்டு Zecharia Sitchin ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டு வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்தன.
அதிலும் குறிப்பாக உலகில் முதல் மனிதன் ஆதாம் என பைபிள் கூறுகின்றதனை, அதற்கு முன்னராகவே சுமேரிய கல்வெட்டுப் படிமங்களில் உலகின் முதல் மனிதன் அடெமு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுமார் 5500 வருடங்களுக்கு முன்பே இந்த மனித தோற்றம் பற்றிய சுமேரியப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆச்சரியம் மிக்கதே.
மேலும் மனித தோற்றம் வளர்ச்சி போன்ற அனைத்தும் சுமேரிய குறிப்புகளில் கூறப்படுகின்றது.
வானத்தில் இருந்து வந்த கடவுள் தம்மை அவருக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டதாகவும் எழுதப்பட்டுள்ளதை Zecharia Sitchin எனப்படும் ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார்.
அதன் அடிப்படையிலும், பூமியில் கண்டுபிடிக்கப்பட்ட படிமங்கள் ஊடாகவும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து பூமிக்கு தங்கம் எடுக்க வந்த வேற்றுக்கிரகவாசிகளுக்கு.,
அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு கீழ் வேலை செய்யவும் மனிதர்கள் தேவைப்பட்டிருக்கலாம்.
அதற்காக ஆரம்பகால பூமியில் புத்திசாலித்தனம் மிக்க உயிரினமான ஓர் குரங்கு வகையை தேர்ந்து எடுத்து அவற்றின் மரபணுக்களோடு, தமது மரபணுக்களையும் இணைத்து பூமியில் மனித இனம் தோற்று விக்கப்பட்டிருக்க வேண்டும் என Zecharia Sitchin அடித்துக் கூறுகின்றார்.
இதனை பல ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. உதாரணமாக இன்று வரை மனிதனின் பரிணாம வளர்ச்சி சர்ச்சைக்கு உரியதாகவே காணப்பட்டு வருகின்றமை சிறந்த எடுத்துக்காட்டு.
அதேபோன்று ஆதி மனிதர்கள், பண்டைய கால குகை ஓவியங்களில் தமது கடவுள்கள் அல்லது தலைவர்கள் வானத்தில் இருந்து வந்தவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆதிகாலத்தில் அதாவது கப்பல் பயணமே சாத்தியமற்ற காலப்பகுதியில் விண்வெளிப்பயணம் மேற்கொள்ளப்பட்டமைக்கு ஆதாரங்களும் பூமியில் காணப்படுகின்றது.
இவ்வாறாக வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக மனித இனத்தை தோற்றுவித்ததாகவும், மனிதர்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி மனிதர், தமக்கு அறிவு கொடுத்து, பலத்தை அதிகரித்தவர்களை கடவுள்களாக ஏற்றுக் கொண்டு அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி வைத்துள்ளனர்.
அவ்வாறு வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்கள் தங்கிய இடங்களே காலப்போக்கில் வழிபாட்டுத்தலங்களாக மாறிப் போனதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக பிரமிட் என்ற கட்டுமானத்தில் கற்களுக்கு இடையே பூசப்பட்டுள்ள ஒரு வித பசைத் தன்மை மிக்க கனிமம் பூமியில் எங்குமே இல்லாத கனிமத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதை முன்வைக்கின்றனர் ஆய்வாளர்கள்.
அத்தோடு எத்தகைய தாக்கத்தாலும் அழிக்க முடியாத சக்தி மிக்கதோர் கனிமத்தைக் கொண்டு இந்த பிரமிட்டுகள் கட்டப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது போன்று இப்போதைய மனித தொழில் நுட்ப அறிவுக்கு எட்டாத பல அதிசயங்கள் ஆதிகாலத்தில் உருவாக்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
புராண குறிப்புகள், கதைகள் போன்ற அனைத்துமே கூறுவது தமது கடவுள்கள் வேறு உலகத்தில் இருந்து பறந்து வந்தவர்கள் என்பதனையே.
மேலும் மதங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் கூறினாலும் அடிப்படையில் இந்த ஓர் கருத்தையே அனைத்து மதங்களும் முன்வைக்கின்றன என்பது தெளிவு.
அதேபோல் இப்போது வாழும் எந்த மனிதனுக்கும் கடவுளாக கூறப்பட்டவர்கள் கண்ணுக்கு புலப்படுவதில்லை இது ஏன்? என்ற கேள்வி எவருக்கும் இலகுவில் வந்து விடாது.
அதற்கான பதில் ஆரம்ப காலத்தில் கடவுளாக பார்க்கப்பட்டவர்கள் மனிதர்களின் வாழ்கையோடு பயணித்துள்ளனர், அதனால் அவர்களின் கண்களுக்கு தெரிந்தனர்.
ஆனால் இப்போது அவ்வாறான கடவுள்கள் பூமியை விட்டு சென்று விட்டனர் அதனால் அவர்கள் (வேற்றுக்கிரக வாசிகள்) புலப்படுவதில்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்து.
ஆனாலும் இன்றும் அவர்கள் பூமிவாசிகளை கண்காணித்தவாறே இருக்கின்றார்கள் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துகள் உண்மையாயின், ஏன் இப்போது பூமிவாசிகளுக்கு வேற்றுக்கிரகவாசிகள் தென்படுவதில்லை? என்ற கேள்வி எழக்கூடும்.
இதற்கான பதிலோடு, யார் அந்த Anunnaki எனப்பட்ட கடவுள்? இந்துக் கடவுள்களோடு இவருக்கு தொடர்பு உண்டா?
அவர் மூலம் மனித இனம் கற்றுக் கொண்டது எதனை? வேற்றுக்கிரகவாசிகளுக்கும் இருண்ட கிரகம் எனப்படும் Planet Nibiru எனப்படும் கிரகத்திற்கும் என்ன தொடர்பு?
பூமியின் அழிவு இந்த கிரகத்தாலேயே ஏற்படும் என புராணக்கதைகள் கூறுவதோடு ஆய்வாளர்களும் தெரிவித்து வருகின்றனர். அப்படியாயின் அவை ஏன் வெளி உலகிற்கு சொல்லப்படவில்லை இதற்கான பதில்கள் அடுத்த பதிவில்.,

No comments:

Post a Comment

welcome ur comment,