Saturday, September 12, 2020

'டூம்ப் ஆப் வாஹ்டி' கல்லறையில் நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!

'டூம்ப் ஆப் வாஹ்டி' கல்லறையில் நூற்றுக்கணக்கான மம்மிகள் எகிப்தில் கண்டுபிடிப்பு! எதிர்பாராத விதமாக அவிழும் மர்ம முடிச்சு!  

எகிப்து அதன் மிகப்பெரிய தொல்பொருள் கண்டுபிடிப்பை சமீபத்திய நினைவகத்தில் அறிவிக்கத் தயாராகி வருகிறது, 4,400 ஆண்டுகள் பழமையான மரத்தினால் ஆனா மற்றும் தங்கத்தினால் ஆனா பல சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பல விலங்குகளின் மம்மிகளும், பதப்படுத்தப்பட்ட பறவைகளின் மம்மிகளும் பாதுகாப்பாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் சில சுவாரசியமான கண்டுபிடிப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  
மிகப் பெரிய தொல்பொருள் தேக்கம் கண்டுபிடிப்பு

மிகப் பெரிய தொல்பொருள் தேக்கம் கண்டுபிடிப்பு

எகிப்திய சுற்றுலா மற்றும் தொல்பொருள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் உச்சக்கட்ட பழங்கால கவுன்சில் ஒன்று சக்காரா தொல்பொருள் பகுதியில் இதுவரை கண்டிடாத மிகப் பெரிய தொல்பொருள் தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொல்பொருள் தேக்கத்தில் 50க்கும் மேற்பட்ட மனித மம்மிகள் மற்றும் எகிப்திய கடவுளின் விசித்திரமான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மம்மிகள் மற்றும் கடவுள் சிலைகள்

மம்மிகள் மற்றும் கடவுள் சிலைகள்

சக்காராவின் இந்த கண்டுபிடிப்பில் பல மனித மற்றும் விலங்குகளின் அடக்கங்கள், பல ஷப்தி(shabti) சிலைகள், ஐசிஸ்(Isis) கடவுள் சிலைகள், நெப்திஸ் மற்றும் ஹோரஸ்(Nephthys and Horus) கடவுள்களின் சிலைகள், முகமூடிகள் மற்றும் பிற்பகுதியில் பயன்படுத்தப்பட்ட சங்ககால கனோபிக் பாத்திரங்கள் ஆகியவை இந்த பகுதியில் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்கத்தால் ஆனா சவப்பெட்டிகள்

தங்கத்தால் ஆனா சவப்பெட்டிகள்

இதுவரை 50 சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் வலைத்தள தகவல் தெரிவிக்கிறது. முதற்கட்டமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த 50 சவப்பெட்டிகளில் சில சவப்பெட்டிகள் மட்டும் தங்கத்தால் செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மம்மிகளை அடையாளம் காணும் பணி

மம்மிகளை அடையாளம் காணும் பணி

சவப்பெட்டிகளில் எதுவுமே முக்கியமான வரலாற்று நபர்களைச் சேர்ந்தவை என்று கருதப்படவில்லை, சவப்பெட்டிகளில் யார் புதைக்கப்பட்டார்கள் என்பதை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எகிப்திய வட்டங்கள் தெரிவித்துள்ளது.
'டூம்ப் ஆப் வாஹ்டி' கல்லறை

'டூம்ப் ஆப் வாஹ்டி' கல்லறை

சமீபத்திய ஆண்டுகளில் பல தொல்பொருள் கண்டுபிடிப்புகளுக்கு சக்காராவின் தொல்பொருள் பகுதி ஒரு சாட்சியாக உள்ளது. இவற்றில் மிக முக்கியமானது டூம்ப் ஆப் வாஹ்டி (Tomb of Wahty) கல்லறை, இங்கு தான் எதிர்பார்த்திடாத ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகளின் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்லறை பகுதியில் கிணறு

கல்லறை பகுதியில் கிணறு

ஏப்ரல் 2018 இல் தொடங்கிய விலங்கு கல்லறையின் ஆராய்ச்சி, 2020 ஏப்ரல் வரை தொடர்ந்தது என்று உள்ளூர் செய்தித்தாளான அல்-வட்டாவின் ஆதாரங்கள் தெரிவிக்கிறது. இந்த ஆண்டின் ஏப்ரல் 18, உலக பாரம்பரிய தினத்தன்று சுமார் 120 x 90 செ.மீ அளவைக் கொண்ட கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிணறு சுமார் 11 மீட்டர் ஆழம் கொண்டது என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
4,400 ஆண்டுகள் பழமையான மம்மிகள்

4,400 ஆண்டுகள் பழமையான மம்மிகள்

அதேபோல், 2019 ஆம் ஆண்டின் இறுதியில், இப்பகுதியில் பணிபுரியும் எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பல விலங்குகள் மற்றும் புனித பறவைகளின் மம்மிகளின் தேக்கத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் சுமார் 4,400 ஆண்டுகள் பழமையான மம்மிகள் என்பது தெரியவந்துள்ளது.
வண்டு மம்மி முதல் முதலை மம்மி வரை

வண்டு மம்மி முதல் முதலை மம்மி வரை

இந்த பகுதியில் இதுவரை மனிதர்களை விட அதிகப்படியான எண்ணிக்கையில் விலங்குகள் மற்றும் பறவைகளின் மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கம், புலி, பூனை, கழுகு, முதலை, சக்காரா வண்டு போன்ற பல உயிர்களின் பதப்படுத்தப்பட்ட மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முதலை மம்மியை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதன் உருவம் பொறிக்கப்பட்ட மரப்பலகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறிய வகை சிங்கங்களா?

சிறிய வகை சிங்கங்களா?

இதில் ஐந்து மம்மிகள் பெரிய பூனை வகையைச் சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப ஆய்வுகளில் இவை சிறிய வகை சிங்கங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சர்வதேச செய்தி நிறுவனங்கள் இந்த கண்டுபிடிப்பை ஸ்பின்க்ஸ் விலங்குடன் ஒத்திருப்பதாகக் கூறியுள்ளது

Monday, July 6, 2020

"உலகின் வினோதமான மரங்களை இங்கே காணலாம்"

"உலகின் வினோதமான மரங்களை இங்கே காணலாம்"
"மரங்களின் வித்தையரங்கம்"

 1884-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ல் ஸ்வீடனிலுள்ள (Sweden) ஹாலேண்ட் (Halland) நகரில் ஆல்ஃப்ரெட் எர்லாண்ட்சன் (Alfred Erlandson) மற்றும் கிறிஸ்டினா லார்சன் (Kristina Larsson) தம்பதியினருக்கு லுட்விக் (Ludwig), ஆந்தன் (Anthon) என்கிற இரு புதல்வருக்குப் பின்னரும், எம்மா ஸ்வான்சன் (Emma Swanson) என்கிற புதல்விக்கு முன்னரும் மூன்றாவதாய்ப் பிறந்தவர்தான் ஆக்செல். அடிப்படையில் விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட குடும்பம், சுண்ணாம்பு, சாந்து போன்ற கட்டுமானப் பொருட்கள் உருவாக்கும் சுண்ணாம்புக் காளவாசலையும் நடத்திவந்தது. 1886-களின் துவக்கத்தில் அமெரிக்காவின் மின்னசோட்டா (Minnesota) மாகாணத்திற்குக் குடிபெயர்ந்தது ஆக்செலின் குடும்பம். சிறுவயதிலிருந்தே (விவசாயக் குடும்பம் என்பதால்) தாவரங்களோடு புழங்கிய ஆக்செல், மரங்களின் மீதிருந்த அளவற்ற அன்பினால், தான் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்தபின், 1925-ல் தனது தோட்டத்தில் மரங்களைத் தனக்குப் பிடித்த வடிவங்களில் வளர்க்கத் தொடங்கினார். வடிவங்கள் என்றால், அசாதாரணமானவைகள் அவை. உதாரணத்திற்கு, கூடை, நாற்காலி, நுழைவாயில், நடனமாடும் ஜோடி, ஏணி, பாம்பு, இதயம், கோபுரம் என அவரது மனத்திரையில் கண்ட/விரும்பிய அனைத்துமாய் வளர்ந்து நின்றன மரங்கள். அதுமட்டுமல்லாது, வளர்ந்துகொண்டே இருக்கும் தனது பொதுவான பண்பினை மரங்கள் ஆக்செலுக்காக நிறுத்தியிருந்தன. ஆம், ஆக்செல் வளர்த்த மரங்கள் சில குறிப்பிட்ட (அவர் விரும்பிய) அளவிற்கு மேல் வளரவே இல்லை. உதாரணத்திற்கு, ஒரு நாற்காலி வடிவில் ஒரு மரத்தை வடிவமைத்து வளர்த்தால், அது சரியாக ஒரு நாற்காலியின் உயரம் மட்டுமே வளர்ந்திருந்தது; அதற்கு மேல் வளரவில்லை.





          இவ்விநோதத்தை மக்கள் ரசிக்கின்றனர் என்பதைத் தாமதமாகத்தான் அறிந்துகொண்டார் ஆக்செல். உடனடியாக கலிபோர்னியா (California)-வில் ஒரு இடத்தை வாங்கி, அங்கும் தனது இஷ்டம்போல மரங்களை வளர்த்துவிட்டார். "உலகின் வினோதமான மரங்களை இங்கே காணலாம்" என்று விளம்பரப்படுத்தியதோடு, "மரங்களின் வித்தையரங்கம்" (The Tree Circus) என அத்தோட்டத்திற்குப் பெயரும் இட்டார். மரங்கள் விதவிதமான வடிவங்களில் கிளைகளைப் பரப்ப உலகெங்கும் ஆக்செலின் புகழ் பரவத் தொடங்கியது. "ரிப்லீயின், நம்பினால் நம்புங்கள்" (Ripley's Believe It or Not!) என்கிற உலகப்புகழ்பெற்ற விநோதங்களின் தொகுப்புகளடங்கிய புத்தகத்தில் ஆக்செலும், அவரது மரங்களும் பன்னிரண்டு முறை இடம்பெற்றிருந்தன. இதில் இவருக்குக் கிடைத்த சிறப்பு என்னவெனில், ரிப்லீயின் புத்தகத்தில் ஒருமுறை இடம்பெற்ற வினோதம் மீண்டும் இடம்பெறும் சாத்தியக்கூறுகள் குறைவு; காரணம், ஆண்டுக்கொருமுறை வெளியாகும் அப்புத்தகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் நிகழும் விநோதங்களும், இந்த ஆண்டிலும் மக்களை வியப்புறச் செய்யும் சென்ற ஆண்டின் விநோதங்களும் மட்டுமே இடம்பெறும்.





       மரங்களின் தென்றல் காற்றில் வாழ்ந்து கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் காற்று திசைமாறியது. அவரது வாழ்க்கையின் சோதனைக்காலம்; தான் உருவாக்கிய அந்த அற்புதத் தோட்டத்தை விற்கவேண்டிய சூழ்நிலை! 1963-ல் தனது தோட்டத்தை, பன்னிரண்டாயிரம் டாலர்களுக்கு லேரி (Larry) மற்றும் பெக்கி தாம்ப்சன் (Peggy Thompson) தம்பதியருக்கு விற்றார். ஆக்செலுக்கு தான் வளர்த்த மரங்களின் மீதிருந்த அளவுகடந்த பிரியத்தை உணர்ந்த அத்தம்பதியர், ஆக்செல் அவ்விடத்தை விற்றபிறகும் கூட அம்மரங்களைப் பராமரிக்க, பணிக்கு அமர்த்தினர். என்ன இருந்தாலும் இப்போது அவர் மாற்றான் தோட்டத்து மரங்கள். தினமும் அவைகளோடு இருக்கும் வாய்ப்பு கிட்டினாலும், அவைகள் தனது சொந்தமாய் இருந்து தற்போது தான் வேறோருவராய் வந்து பராமரிக்கிறோமே என்கிற வருத்தம் ஆக்செலின் மனதில் அடியாழத்தில் குமுறிக்கொண்டிருந்தது. விளைவு, தான் வளர்த்து உருவாக்கிய மரங்களை அதன் இடத்தோடு சேர்த்து விற்ற ஒரு ஆண்டிற்குள்ளாகவே, அதாவது சரியாக 1964, ஏப்ரல் 28-ல் ஆக்செல் தனது கடைசி மூச்சுக்காற்றை அம்மரங்களிடமிருந்து பெற்று மீண்டும் அம்மரங்களிடமே கொடுத்தனுப்பினார். (அப்போது மரங்கள் செலுத்திய கண்ணீர் அஞ்சலியும், கதறல்களும் மரங்களுக்கு மட்டுமே கேட்டிருக்கும்!) [பின்குறிப்பு: இவர்தான் ஆக்சல் எர்லாண்ட்சன் என்று ஆணித்தரமாகக் கூறுமளவிற்கு அவரின் ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை.]





          பின்னர், லேரியும், பெக்கியும், அத்தோட்டத்திற்குள் 25, 30 ராட்சத டைனோசர் உருவங்களை வைத்து அதற்கு "தொலைந்த உலகம்" (The Lost World) எனப் பெயரிட்டனர்; ஆக்செலின் மரங்கள் இருந்த தோட்டத்திற்கு "மந்திரக்காடு" (The Enchanted Forest) எனவும் பெயர் மாற்றினர். துரதிஷ்டவசமாக, அவை இரண்டும் திறப்பு விழா காணும் முன்னரே லேரியின் இறப்பு நிகழ்ந்துவிட, தனது மூன்று குழந்தைகளை வளர்க்கும்பொருட்டு நிர்வாகத்தைக் கையிலெடுத்த பெக்கி, சில ஆண்டுகள் வெற்றிகரமாகக் கையாண்டார். பின்னர், அவ்விடத்தை விற்க முடிவெடுத்தபோது முதலில் சம்மதித்த ஒரு சிலர் பின்னர் காரணமேதுமின்றி பின்வாங்கினர். சரி குத்தகைக்கு விடலாம் என்று பார்த்தால், குத்தகைக்கு எடுத்தவர்களின் தொழிலில் எதிர்பாராத நஷ்டம் என இந்த மந்திரக்காடு ஒரு சபிக்கப்பட்ட காடுபோல் சிலரது மத்தியில் பீதியைக் கிளப்பியது. 




          பின்னர் 1977-ல், ராபர்ட் ஹோகன் (Robert Hogan) என்பவர் தொழில் மேம்பாட்டிற்காக அந்நிலத்திலுள்ள மரங்களைப் பெயர்த்தெடுத்து வேறொரு இடத்தில் வரிசையாக நட முடிவெடுத்து, மார்க் ப்ரிமேக் (Mark Primack) எனும் இளம் வடிவமைப்பாளரின் தலைமையில் மரங்களைக்குறித்தத் தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டன.  ஜோசப் காஹில் (Joseph Cahill) எனும் நிலவியல் வடிவமைப்பாளர், இவர்களின் திட்டப்படி மரங்களை இடம்பெயர்த்து பத்திரமாகப் பொருத்த பன்னிரண்டாயிரம் டாலர்களையும், இரண்டரை ஆண்டுகள் அவகாசமும் பெற்றார். திடீரென ஜோ குச்சியாரா (Joe Cucchiara) என்பாரின் தலைமையில் கிளம்பிய உள்ளூர் புரட்சிப்படை (Friends of Scotts Valley Tree Circus) ஒன்று, இவர்கள் மரங்களை இடம்பெயர்ப்பதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர். இதன் விளைவால் ப்ரிமேக்கும் அவரது சகாக்களும் கைதுசெய்யப்பட்டனர், காஹிலின் அலுவலகம் மூடப்பட்டது, ஹோகனின் கனவு அம்மரங்களின் காற்றில் கரைந்தே போனது. பிறிதொருநாள் 1985-ஆம் ஆண்டு, மைக்கேல் போன்ஃபான்டே (Michael Bonfante) என்பவர் ஆக்செல் வளர்த்த 24 மரங்களை ஹோகனிடம் விலைக்கு வாங்கி, தற்போது கில்ராய் பூங்கா (Gilroy Gardens) என்றழைக்கப்படும்  தனது கேளிக்கைப் பூங்காவில் நிறுவினார். ஆக்செல் வளர்த்ததில் இறந்துபோன மரங்களை கலிஃபோர்னியா மாகாணத்தின் சாண்டாக்ரூஸ் நகரிலுள்ள கலை-வரலாற்று அருங்காட்சியத்தில் பதப்படுத்திப் பாதுகாக்கின்றனர். ஒரு மரம் ஜப்பானில் 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகளாவிய கண்காட்சி ஒன்றிற்காக வழங்கப்பட்டது. ஆக்செல் வளர்த்த "தொலைபேசிக்கடை மரம்" (Telephone Booth Tree)மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமூர் நகரிலுள்ள அமெரிக்க தொலைநோக்குக் கலை அருங்காட்சியகத்தில் (American Visionary Art Museumநிரந்தரக் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.




          ஆக்செலின் இம்மரங்களால் கவரப்பட்ட பலர் அவரைப்போல மரம்வளர்க்க முயன்று தோற்றனர்; சிலருக்கு ஓரளவு வெற்றி கிடைத்தது. அந்த ஓரளவு வெற்றியும் கூட ஆக்செலின் விஸ்வரூப வெற்றிக்கு முன் தூசாகத் தெரிந்தது. அதற்காக அவர்கள் நிறைய மெனக்கெடவும், மரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியும், அவை வளரும்போது துன்புறுத்தியும் வளர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஆக்செல் இதில் எதையும் பின்பற்றியதாய்த் தெரியவில்லை. சில கிளைகளுக்கு ஆதரவாய் (துன்புறுத்தாமல்) அருகில் கொம்பு நடுதல், சிறிது நாட்கள் பிணைத்துவைத்தல் போன்றவற்றைச் செய்தாலும், அவர் செய்த முறை அவருடனேயே மறைந்து போனது. ஆக்செல் எப்படி இவ்வாறு மரங்களை வளர்த்தார் என்ற ரகசியத்திற்கு இன்றுவரை யாருக்கும் விடை கிடைக்கவில்லை. ஒருமுறை ஆக்செலிடம் அவர் எவ்வாறு இப்படி மரங்களை வளர்த்தார் என்பதைக் கேட்டபோது, "நான் மரங்களிடம் பேசுவேன். நான் எப்படி சொல்கிறேனோ, அப்படித்தான் மரங்கள் வளரும்." என்பார். 

என் சகோதரனின் தளம்  இது அவரது பதிவு 

Friday, April 3, 2020

இந்திய வரலாற்றின் முக்கிய காதல் கதையான ஜோதா-அக்பரில் ஜோதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா?

இந்திய வரலாற்றின் முக்கிய காதல் கதையான ஜோதா-அக்பரில் ஜோதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது தெரியுமா? 


 இந்தியாவை பல மன்னர்கள் ஆண்டிருந்தாலும் அதில் ஒருசில மன்னர்களின் பெயர் மட்டுமே வரலாற்றில் நிலைபெற்று இருக்கிறது. இந்தியாவை ஆண்ட மன்னர்களில் முகலாய மன்னர்களுக்கு என்று பல தனிச்சிறப்புக்களும், வரலாறும் உள்ளது. முகலாய சாம்ராஜ்ஜியம் பேரரசர் அக்பரின் காலத்தில்தான் முழு எழுச்சி பெறத்தொடங்கியது. 

வரலாற்றில் அக்பர் அழியாப்புகழ் பெற அவரின் வீரமும், அரசியல் நடவடிக்கைகள் மட்டும் காரணமல்ல அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும்தான். முகலாய அரசர்களில் இருந்து இந்து இளவரசி ஜோதாவை திருமணம் செய்த முதல் அரசர் இவர்தான். 
[தாய் தந்தையர் வழியில், இவர் இருவருக்கும் பிறந்த ஐஹாங்கீர் மார்வாடா மன்னன் ராஜா உதய்சிங் மகளான ஐகத் கோசனியை மணந்தார், அவர் மூலம் பிறந்தவரே ஷாஐகான், ஷாஐகான் முத்த மகனும் இதே போன்று தான், அவரது நான்கவாவது மகனான அவுரங்கசீப் காஷ்மீர் இந்து அரசர் ராஜுவின் மகளான நவாப் பாய் மணந்தார், அவர்களது வாரிசே பகதூர்ஷா]


ஜோதா-அக்பர்  இருவருக்கும் இடையே காதல் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும். ஜோதா-அக்பரின் வரலாறை பலரும் அறிந்திருந்தாலும் ஜோதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாகும். இந்த பதிவில் ஜோதாவின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று பார்க்கலாம்.

 ஜோதா பாய் ஜோதா பாய்தான் பேரரசர் அக்பருக்கு மிகவும் பிடித்த ராணியாக இருந்தார். ஜோதா பாய் அக்பரின் இதயத்தில் மிகவும் முக்கியமான இடத்தில் இருந்தார் அதன் விளைவாக முகலாயர்களின் அரண்மனையிலும், அரசவையிலும் உயர்ந்த இடத்தை வகித்தார். ஹீரா கன்வார் என்று பெயரிடப்பட்ட ஜோதா பாய் ஒரு இந்து இளவரசி மற்றும் அமீரின் ராஜ்புத் மன்னர் ராஜா பார்மலின் மகள். அக்பரின் அரண்மனையில் நீண்ட காலம் வாழ்ந்த அவர், தனது 80 வது வயதில் 1622 இல் இறந்தார். அவரது மரணத்தை சுற்றி பல மர்மங்கள் உள்ளது.

 முகலாய அரசவை முகலாய அரசவையில் ஜோதா பாய்க்கு மரியம்-உஸ்-ஜமானி என்ற தலைப்பு வழங்கப்பட்டது. அக்பருக்கு பிறகு முகலாய அரியாசனத்தில் அமர்ந்த வாரிசை பெற்றுத்தந்ததும் இவர்தான். முகலாயர்களின் அரசவையில் ஜோதாவிற்கு அதிக செல்வாக்கு இருந்தது, எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அக்பருக்கு அடுத்த நிலையில் இவர்தான் இருந்தார், அக்பர் சார்பில் அரசக்கட்டளைகளை விதிக்கும் அளவிற்கு இவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

ஜோதாவின் மதம் முஸ்லீம் பேரரசரை மணந்த பின்னரும் ஜோதா இந்து மதத்தை பின்பற்றி வாழ்ந்தார். ஜோதா கிருஷ்ணரின் மீது அளவற்ற பக்தி கொண்டவராக இருந்தார், மேலும் அக்பர் அவருக்கு கிருஷ்ணரை வழிபட முழு சுதந்திரம் அளித்திருந்தார். முகலாய அரண்மனையில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் கோவில் ஒன்று ஜோதா பாய் வணங்குவதற்காக கட்டப்பட்டது. 

 ஜோதா-அக்பர் புரிதல் ஜோதா பாயின் அறிவுரைகளும், செயல்களும் அக்பருக்கு இந்து மதத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. இந்து மதம் குறித்த பல தகவல்களை ஜோதாவிடம் இருந்து அக்பர் கற்றுக்கொண்டார். ஜோதா பாய் கிருஷ்ணர் மீதான தனது பக்தியை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்திருந்தாலும், அவரும் நாடு முழுவதும் பல மசூதிகளை கட்டுவதற்கு பெரும் பணத்தை செலவிட்டார். ஜோதாவும், அக்பரும் வெவேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தங்கள் மதத்தை மற்றவர் மீது திணிக்காமல் மற்ற மதத்தையும் மதித்து வாழ்ந்தார்கள். 

 ஜோதாவின் மரணம் அக்பர் இறந்த பிறகும் 20 ஆண்டுகள் வாழ்ந்த ஜோதா பாய் 1622 ஆம் ஆண்டில் தனது 80 வயதில் இறந்தார். அவர் ஒரு இந்துவாகப் பிறந்து கிருஷ்ணரை வாழ்நாள் முழுவதும் வழிபட்ட போதிலும், அவரது மரணத்திற்கு பின்னர், அவர் இந்து மரபுப்படி தகனம் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, அவர் இஸ்லாமிய நடைமுறையின் படி அடக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரது மரணத்திற்கு பிறகு அவரது நினைவாக ஒரு கல்லறை நினைவுச்சின்னமாக எழுப்பப்பட்டது. 

 ஜோதாவின் மகன் அவரது மகன் சலீமுக்கு அவர் அளித்த விவரக்குறிப்புகளின்படி இந்த கல்லறை கட்டப்பட்டது, பின்னர் அவர் ஜஹாங்கிர் என்று அழைக்கப்பட்டார். ஜஹாங்கீர் நிலத்திற்கு அடியில் இருக்கும் கல்லறைக்கு செல்லும்படி மாடிப்படிகளுடன் கல்லறையை கட்ட ஏற்பாடு செய்தார். அக்பரின் கல்லறைக்கு மிக அருகில் இந்த கல்லறை கட்டப்பட்டது. காலப்போக்கில், அவரது கல்லறை பாழடைந்த நிலையில் இருந்தது, இது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் சரிசெய்யப்பட்டது.

 ஜோதாவின் கல்லறை ஜோதா பாயிற்காக கட்டப்பட்ட கல்லறை மிகவும் சுவாரஸ்யமானது. நுழைவாயிலில் உள்ள கல்வெட்டு இது அக்பரை மணந்து பின்னர் ஜஹாங்கிரைப் பெற்றெடுத்த அமீரின் இளவரசி மரியம் உஸ் ஜமானிக்கு சொந்தமானது என்று கூறுகிறது. முகலாயர்களால் கட்டப்பட்ட மற்ற வகையான கட்டமைப்புகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில், இந்த கட்டிடம் முன் மற்றும் பின் பக்கங்களில் இருந்து ஒரே மாதிரியாக இருக்கிறது. இவ்வாறு, ஒரு ராஜ்புத்திர இளவரசியாகப் பிறந்த ஜோதா பாய், முகலாய சிம்மாசனத்தில் நீண்ட காலம் அமர்ந்த அக்பரின் பேரரசி என்ற புகழைப் பெற்றார்.

Thursday, February 27, 2020

சந்திர சேகர் 'ஆசாத்'

பகத்சிங்கிற்கு பயிற்சி கொடுத்த ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாக வாழ்ந்த அந்த மாவீரன் யார் தெரியுமா? 

           ந்திர சேகர் 'ஆசாத்' 

இந்தியாவின் சுதந்திர போராட்டம் என்பது நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல்லாயிர கணக்கானோர் தங்கள் உயிரைக் கொடுத்து பல இலட்ச மக்கள் போராட்டத்தின் மூலம் பெறப்பட்டதுதான் நம் சுதந்திரம். நம் சுதந்திரத்திற்கு போராடிய பலர் நம் நினைவில் இல்லை என்பதே உண்மை. அந்த வகையில் சந்திர சேகர் ஆசாத் என்ற மாபெரும் போராளியைப் பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நம்மில் பலரும் இந்த பெயரையே இப்போதுதான் முதல் முறை கேள்விப்பட்டிருப்போம் என்பதே கசப்பான உண்மையாகும். 

சுதந்திர போராட்டத்தின் வீரமான போராளிகளில் இவருக்கென்று ஒரு தனி இடமும், வரலாறும் உள்ளது. இந்திய சுதந்திர புரட்சியின் முகம் என்றே இவரைக் கூறலாம். பயமறியா இந்த புரட்சி வீரனின் நினைவு நாளான இன்று அவரின் வீர வரலாற்றை தெரிந்து கொள்வோம். 

ந்திரசேகர் ஆசாத் 
இந்திய சுதந்திர புரட்சியின் ஆரம்ப புள்ளியாக இருந்த சந்திரசேகர் ஆசாத் 1906 ஜூலை 23 அன்று மத்திய பிரதேசத்தின் பவ்ராவில் பிறந்தார். லாலா லஜ்பத் ராய் கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்காக ககோரி ரயில் கொள்ளை, சட்டசபை வெடிகுண்டு சம்பவம் மற்றும் லாகூரில் சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் போன்றவற்றில் ஈடுபட்ட அவர் துணிச்சலான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அச்சமற்ற புரட்சியாளராக இருந்தார். 

முதல் தண்டனை 
புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் போலீஸாரால் முதலில் பிடிபட்டபோது அவருக்கு வயது 15 தான். ஆசாத்தின் முதல் தண்டனையாக 15 சவுக்கடி தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் சந்திர சேகர் 'ஆசாத்' என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டு சந்திர சேகர் ஆசாத் என்று அழைக்கப்பட்டார். 

சாத்தின் இறப்பு 
அவர் உயிருடன் இருந்தவரை அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். பிப்ரவரி 27, 1931 அன்று, கூட்டாளிகளில் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்ட அவர், அலகாபாத்தின் ஆல்பிரட் பூங்காவில் பிரிட்டிஷ் போலீசாரால் முற்றுகையிடப்பட்டார். அவர் வீரத்துடன் போராடினார், ஆனால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த அவர் போலீஸில் பிடிபடுவதை விட உயிரை விடுவதே மேல் என்று தன்னிடம் இருந்த ஒரு தோட்டாவின் மூலம் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார். 

தன் மரணம் கூட தன் கையால்தான் நேர வேண்டும் என்ற உறுதியுடன் இறந்தார் சந்திரசேகர் ஆசாத்

ம்மாவின் ஆசை 
சந்திரசேகர் என்பது மட்டுமே அவரின் பெயர் ஆகும். ஆசாத் என்பது அவரின் மீதிருந்த மரியாதையால் மக்கள் அளித்த பெயர். ஆசாத் என்பதற்கு சுதந்திரம் என்று பொருள். சந்திர சேகரின் தாயார் தனது மகனை ஒரு சிறந்த சமஸ்கிருத அறிஞராக்க விரும்பினார், எனவே சமஸ்கிருதம் படிப்பதற்காக வாரணாசியில் உள்ள காஷி வித்யாபீத்துக்கு அனுப்பும்படி தனது தந்தையை வற்புறுத்தினார். 

த்துழையாமை இயக்கம் 
டிசம்பர் 1921 இல், மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தபோது, அவர் ஒரு மாணவராக இருந்தபோதிலும் இணைந்தார். அதேசமயம் முன்னாள் ஜாபுவா மாவட்டத்தின் பழங்குடி பில்ஸிடமிருந்து வில்வித்தை கற்றுக் கொண்டார், இது பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தின் போது அவருக்கு உதவியது. 

சிறப்பான சம்பவங்கள் 
சந்திரசேகர் ஆசாத் 1925 ஆம் ஆண்டில் ககோரி ரெயில் கொள்ளை மற்றும் 1928 இல் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜான் போயன்ட்ஸ் சாண்டர்ஸின் படுகொலை ஆகியவற்றால் மிகவும் பிரபலமானவராக மாறினார். லாலா லஜபதி ராயின் கொலைக்காக பழிவாங்கும் விதத்தில் இவர் இதனை செய்தார். 

சாத்தின் சபதம் 
ஒரு புரட்சியாளராக, அவர் ஆசாத் என்ற கடைசி பெயரை ஏற்றுக்கொண்டார், அதாவது உருது மொழியில் "சுதந்திரம்" என்று பொருள். இவர் தனது வாழ்க்கையில் ஒருபோதும் போலீஸால் தன்னால் உயிருடன் பிடிக்க முடியாது என்ற சபதம் ஏற்றிருந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை போராட்டத்தில் வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆசாத் உணரவில்லை, குறிப்பாக 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கருத்தில் கொண்டு, இராணுவப் பிரிவுகள் நூற்றுக்கணக்கான நிராயுதபாணியான பொதுமக்களைக் கொன்றது மற்றும் ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது. இந்த சம்பவம் இளம் ஆசாத்தை சோகத்தால் ஆழமாகவும் உணர்ச்சிகரமாகவும் பாதித்தது. 

கத்சிங் 
இந்தியாவின் முக்கியமான இளம் போராளிகளில் ஒருவர் பகத்சிங் ஆவார். லாலா லஜ்பத் ராய் இறந்ததைத் தொடர்ந்து பகத் சிங் ஆசாத்துடன் சேர்ந்தார், அதற்குப்பின் இருவரும் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராக போராடினர். பகத்சிங்கிற்கு ஆசாத் ஆயுத பயிற்சியும், ரகசியமாக செயல்படுவது எப்படி என்றும் பயற்சி அளித்தார். 

சாத் பூங்கா 

ஆசாத் இறந்த அலகாபாத்தில் உள்ள ஆல்ஃபிரட் பார்க், சந்திரசேகர் ஆசாத் பார்க் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல பள்ளிகள், கல்லூரிகள், சாலைகள் மற்றும் பிற பொது நிறுவனங்களுக்கும் அவர் பெயரிடப்பட்டுள்ளன.

நாம் மறந்த இந்திய விடுதலைக்கா பாடுபட்ட போராளிகள் பற்றிய தகவல்!!!

றிந்துகொள்ள இங்கே <<கிளிக்>> செய்யுங்கள்..

Wednesday, February 26, 2020

வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா? அப்ப இத டெய்லி செய்யுங்க...


வாயில் உள்ள பாக்டீரியாக்களை முழுமையாக நீக்க வேண்டுமா? அப்ப இத டெய்லி செய்யுங்க...



மனிதனின் வாயில் சுமார் 500 விதமான இனங்கள் அல்லது நுண்ணுயிரிகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் எப்போது ஒருவரது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது தான் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஈறு அழற்சி, ப்ளேக், பல் சொத்தை போன்றவற்றை சந்திக்கிறோம். தற்போது பலர் வாய் துர்நாற்றம், மஞ்சள் பற்கள், ஈறுகளில் இரத்தக்கசிவு, சொத்தை பற்கள் போன்ற பல பிரச்சனைகளை அன்றாடம் சந்திக்கின்றனர். இதற்கு மோசமான வாய் பராமரிப்பு மட்டுமின்றி, உண்ணும் உணவுகளும் தான் முக்கிய காரணம். 

என்ன தான் கடைகளில் வாயின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் பல்வேறு டூத் பேஸ்டுகள் விற்கப்பட்டாலும், அவற்றில் கெமிக்கல் நிறைந்திருப்பதால், சில சமயங்ளில் அவை பற்களுக்கு தீங்கை விளைவித்து, பெரும் பாதிப்பை உண்டாக்கிவிடுகின்றன. முந்தைய காலத்தில் எல்லாம் டூத் பேஸ்ட் என்பதில்லை. வெறும் வேப்பங்குச்சி, ஆலங்குச்சி தான். இவற்றில் உள்ள உட்பொருட்கள் தான் வாயின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தன. 

 தற்போது இந்த குச்சிகள் நமக்கு கிடைக்காவிட்டாலும், நம் வீட்டுச் சமையலறையில் வாயில் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சில பொருட்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு அன்றாடம் பராமரிப்பு கொடுத்து வந்தால், நிச்சயம் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாயின் ஆரோக்கியத்தை மேம்படும். இப்போது வாயில் உள்ள கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவும் மௌத் வாஷை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்றும், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் காண்போம். 


தேவையான பொருட்கள்: 

* பேக்கிங் சோடா * உப்பு * ஹைட்ரஜன் பெராக்ஸைடு * டூத் பிக்ஸ் * டூத் பிரஷ் 

செய்முறை #1 ஒரு சிறிய பௌலில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ள வேண்டும். 

செய்முறை #2 பின்பு வெதுவெதுப்பான நீரை ஒரு கப்பில் எடுத்து, அதில் டூத் பிரஸை 3 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்

செய்முறை #3 பிறகு டூத் பிரஷை பயன்படுத்தி, உப்பு மற்றும் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து எடுத்து, அந்த கலவையால் பற்களை நன்கு மென்மையாக தேய்க்க வேண்டும். 

செய்முறை #4 பின் சில துளிகள் ஹைட்ரஜன் பெராக்ஸைடை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் அதை வாயில் ஊற்றி ஒரு நிமிடம் வாயைக் கொப்பளித்து துப்ப வேண்டும். 

செய்முறை #5 பிறகு டூத் பிக் கொண்டு பற்களின் பின் பிடிந்துள்ள ப்ளேக்கை மென்மையாக தேய்த்து விட வேண்டும். பின் குளிர்ந்த நீரால் வாயைக் கழுவ வேண்டும். 

 உங்கள் வாயில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்யும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். மேலும் தினமும் இரண்டு முறை பற்களைத் துலக்குங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ளதை வாரம் ஒருமுறை தவறாமல் பின்பற்றி வந்தால், பற்கள் மற்றும் வாய் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Monday, February 10, 2020

பெட்ரோலை விட செலவு குறைவுதான்... ஆனாலும் பைக்கில் டீசல் இன்ஜின் வழங்க மாட்டார்கள்... ஏன் தெரியுமா?

பெட்ரோலை விட செலவு குறைவுதான்... ஆனாலும் பைக்கில் டீசல் இன்ஜின் வழங்க மாட்டார்கள்... ஏன் தெரியுமா? 


பைக்குகளில் டீசல் இன்ஜின்கள் ஏன் பயன்படுத்தப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

நம் அனைவருக்கும் பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாளில் நாம் பலமுறை பைக்குகளை பயன்படுத்துகிறோம். பொதுவாக பெட்ரோல் மூலம்தான் பைக்குகள் இயங்குகின்றன. ஆனால் டீசலை காட்டிலும் பெட்ரோல் விலை மிகவும் அதிகம். இதனால் டீசலில் இயங்கும் வகையில் பைக்குகள் வடிவமைக்கப்படாதது ஏன்? என்ற சந்தேகம் சில சமயங்களில் நமக்கு எழும். பைக்குகள் டீசலில் இயங்கினால் நம்மால் பெருமளவு பணத்தை மிச்சம் பிடிக்க முடியும். இருந்தபோதும் பெட்ரோலில் இயங்கும்படிதான் பெரும்பாலும் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. எனவே பைக்குகளில் ஏன் டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுவதில்லை? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

1. டீசல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோ 24:1. இது பெட்ரோல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோவை விட அதிகம். பெட்ரோல் இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோ 11:1 மட்டுமே. இந்த அதிகப்படியான கம்ப்ரஷன் ரேஷியோவை கையாள வேண்டுமென்றால், டீசல் இன்ஜின் பெரிதாகவும், ஹெவி மெட்டலாகவும் இருப்பது அவசியம். இதன் காரணமாகதான் பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது டீசல் இன்ஜின் கனமானதாக இருக்கிறது. அத்துடன் மோட்டார்சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களுக்கு டீசல் இன்ஜின்கள் 'சூட்' ஆகாமல் போவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. 

2. ஹை-கம்ப்ரஷன் ரேஷியோ காரணமாக, பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது டீசல் இன்ஜின்கள் அதிக வைப்ரேஷனையும், சத்தத்தையும் உருவாக்கும். மோட்டார்சைக்கிள் போன்ற இலகு ரக வாகனங்களால் இந்த அதிகப்படியான அதிர்வுகளையும், சத்தத்தையும் கையாள்வது என்பது சாத்தியம் இல்லாதது. இதன் காரணமாகவும் பைக்குகளில் டீசல் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுவதில்லை. 

3. ஹை-கம்ப்ரஷன் ரேஷியோ மற்றும் ஹெவி இன்ஜின் காரணமாக, டீசல் இன்ஜின்களின் ஆரம்ப விலையானது பெட்ரோல் இன்ஜினை விட அதிகமாக இருக்கும். இந்த ஆரம்ப விலை வேறுபாடானது சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு நெருக்கமாக வரும். எனவே மோட்டார்சைக்கிள் போன்ற சிறிய வாகனங்களுக்கு இது பொருத்தமானதாக இருக்காது. 

4. டீசல் இன்ஜின்கள் அதிக டார்க் திறனை உருவாக்கும் வல்லமை வாய்ந்தவை. ஆனால் பெட்ரோல் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது அதன் ஆர்பிஎம் குறைவு. ஆனால் பைக்குகளை பொறுத்தவரை நாம் அதிக வேகத்தை எதிர்பார்ப்போம். அது நமக்கு தேவையான ஒன்றும் கூட. இதன் காரணமாகவும் டீசல் இன்ஜின்கள் பைக்குகளுக்கு 'செட்' ஆவதில்லை. 

5. டீசல் எரியும்போது, மிக அதிகப்படியான வெப்பம் உருவாகும். இது சிலிண்டரின் சுவர்கள் மற்றும் இன்ஜினின் இதர பாகங்களை அழித்து விடும். இந்த வெப்பத்தை குறைக்க வேண்டுமென்றால், நமக்கு அதிக மேற்பரப்பு பகுதி மற்றும் முறையான கூலிங் சிஸ்டம் ஆகியவை தேவை. எனவே டீசல் இன்ஜின்கள் பெரிதாக உருவாக்கப்படுகின்றன. இதனாலும் பைக்குகளுக்கு டீசல் இன்ஜின்கள் பொருத்தமாக இருப்பதில்லை. 

6. சிலிண்டருக்குள் அதிக காற்றை பம்ப் செய்ய டர்போசார்ஜர் அல்லது சூப்பர்சார்ஜரை டீசல் இன்ஜின் பயன்படுத்துகிறது. இது அதன் விலை மற்றும் அளவை அதிகரிக்க செய்து விடுகிறது. இது போன்ற காரணங்களால்தான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மோட்டார்சைக்கிள்களில் டீசல் இன்ஜின்களை வழங்குவதை தவிர்க்கின்றன.