Thursday, August 28, 2014

ஏலியன்ஸ் 07 - மாற்று உலகமும் எம்மை நோட்டமிடும் ஏலியன்ஸும்

ஏலியன்ஸ் 07 - மாற்று உலகமும் எம்மை நோட்டமிடும் ஏலியன்ஸும்

பார்ட்-1
பார்ட்-2
பார்ட் -3

பார்ட்-4
பார்ட்-5
பார்ட் - 6

ஏலின்ஸ் ஆறாம்    பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


போன பதிவில் ஏலியன்ஸ் என்பவர்கள் எதிர்கால மனிதராக இருக்கலாம் என்பதை சான்றுகளுடன் பார்த்திருந்தோம். இன்று… மாற்று உலகம் எனும் கோட்பாட்டை பார்க்க முதல்… முன்னர் குறிப்பிட மறந்த சில சம்பவங்களையும்… ஏற்கனவே குறிப்பிட்டதன் படி… பிரமிட்களில் பாவனைக்குட்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பம் பற்றியும் எழுதிடுறேன்…
————————————————————————————–...
இது நடந்தது 2ம் உலக யுத்த காலகட்டத்தில்…

இரண்டாம் உலக யுத்தன் மும்முரமாக நடந்துகொண்டிருந்த‌ போது… நேசப்படைகளை சேர்ந்த விமானிகள், பல நேரங்களில் தமது விமானத்தை ஒரு ஒளிமிகுந்த பொருள் பிந்தொடர்ந்ததை அவதானித்தார்கள்… ஆனால், அவர்கள் அது தொடர்பாக தமது மேலதிகார்களிடம் பதிவு செய்த போது, அது ஜேர்மனிய படைகளின் நவீன விமானமாக இருக்கலாம் என்று பதிவு செய்துகொண்டார்கள். சில ஆண்டுகளின் பின்னர் போர் நிறைவுக்கு வந்தது… அப்போதுதான் தெரிந்தது… ஜேர்மனிய விமானிகளும் அதே போன்ற ஒளிமிகுந்த பொருட்களை கண்டுள்ளார்கள், அவர்களின் பதிவுகளில்… அது அமெரிக்காவின் விமானமாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது…...

விமானத்தளபதிகளான இவர்கள் பொய்யான தகவல்களை பதிவு செய்திருக்கத்தேவையில்லை… ஆக‌வே, அவர்கள் ஒரு ஒளிரும் பொருளைக்கண்டுள்ளார்கள். பொதுவாக, இந்த ஏலியன்ஸ்கள் வருகைதருவதாக கருதப்படும் வாகனங்களை (பறக்கும் தட்டு) குறிப்பிடும் போது… இதே போன்று ஒளிரும் தன்மை பற்றியும் வேகம் பற்றியும் அதிகமாக கூறப்பட்டுள்ளது. ஆகவே, அவர்கள் கண்டது பறக்கும் தட்டுக்கள்தான் என முடிவு செய்யலாம். ஆனால், ஏன் அவர்கள் விமானங்களைப்பின் தொடர்ந்தார்கள் என்பதற்கு தெளிவான விளக்கமில்லை. இரு சாராருக்குமிடையே யுத்த வெறியைத்தூண்டி விடுவதற்காகவா??? அல்லது… மாறாக இரு தரப்பினருக்கும் பயத்தை உண்டுபண்ணி யுத்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவா??? ( இந்த இடத்தில், நான் இரண்டாவதை நம்புகின்றேன்… காரணம் இருக்கிறது… அதை பிறகு தெளிவாக சொல்கிறேன்…)...

மேலும், பறக்கும் தட்டின் சிதைந்த பகுதிகள் எனக்கூறி சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பூமியில் தற்சமையம் பாவனையிருக்கும் உலோகங்களுடன் ஒத்துப்போவதில்லையாம். அவர்களின் விமானங்களின் வடிவங்கள் கூட எம்மோடு ஒத்துப்போவதில்லை…...

ஆனால், போன வருடம் விமானங்களின் வடிவங்களை மாற்றியமைப்பது சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டு போட்டிகள் கூட நடாத்தப்பட்டன. ( இடத்தையும், எரி பொருளையும் சிக்கனப்படுத்துவதும்… வேகத்தை அதிகரிப்பதுமே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது…) அதில் இந்திய மாணவியாள் வடிவமைக்கப்பட்ட விமான மாதிரிக்கு பரிசு கிடைத்திருந்தது. அவர் வடிவமைத்த மாதிரியில்… விமானங்களுக்கே உரித்தான செட்டைகள் இருக்கவில்லை… மேலும்… அது ஏறத்தால ஒரு கூம்பு போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டிருந்தது…...

இப்போதே இவ்வாறான அமைப்புக்கள் தயாரிக்க முடியும் என ஏற்றுக்கொள்ளப்படுவதால்… இன்னும் பல ஆண்டுகளின் பின்னர்… பறக்கும் தட்டின் வடிவில்… விமானங்கள் வர வாய்ப்பில்லையா???… அத்தோடு, இரசாயன விஞ்ஞானத்தில்… சில உலோகங்களை தயாரிப்பதற்கு சிலவகை ஊக்கிகள் அறியப்படாமல் இருக்கின்றது… எதிர்காலத்தில், இவ்வூக்கிகள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் புதிய உலோகங்கள் கண்டு பிடிக்கப்படக்கூடும்… இன்று எம்மால் என்ன வென்று அறிந்துகொள்ள முடியாதுள்ள இந்த சிதைந்த பாகங்களின் உலோகங்கள் எதிர்காலத்தில்நாமே உருவாக்கினதாகவும் இருக்கலாம்… ————————————————————————————–...

ம்ம்ம்… பதிவு நீளமாகிறது… ( நீண்ட பதிவுகள் வாசிக்க கஷ்டமாக இருப்பதாக சொன்னார்கள்…)

அதனால்…

எகிப்திய பிரமிட்டுக்களை பார்க்க முன்னர்… மாற்று உலக கோட்பாடு பற்றி என்க்கு தெரிந்தவற்றை ஆரம்பிக்கிறான்… உலகத்தில்… ஒவ்வொன்றிற்கும் எதிர்த்தன்மையுடன் இன்னொன்றிருக்குமாம்…...
புரோத்திரனுக்கு இலத்திரன் எதிர்த்தன்மையுடனிருப்பது போன்று… இந்த உலகத்திற்கும் இன்னொரு மறை உலகம் இருக்கிறது என்பதே இந்தக்கொள்கை. அது பூமியிலிருந்து குறிப்பிடத்தக்க இடைவெளியிலேயே இருக்கும்… ஆனால், அங்கு அனைத்துமே பூமிக்கு எதிரானதாக இருக்குமாம்… சுத்தும் திசை முதல் கொண்டு அனைத்துமே… பரிமாணங்கள் கூட பூமிக்கு எதிரானதாகையால்த்தான் எங்களால் அதை பார்க்கவோ… உணரவோ முடிவதில்லையாம்… கேக்க லூசுத்தனமாத்தான் இருக்கு… ஆனால், சில புதிர்களுக்கு இந்தக்கொள்கை விடையளிக்கிறது. இதைப்போன்றே இன்னும் பல ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் இருக்கின்றன… அவை பெரும்பாலும் இருக்கு ஆனா இல்லை… என்கிற வகைகள்… அவற்றை எதிர்வரும் பதிவுகளில்… சந்தர்ப்பங்களின் போது பார்ப்போம்…

இந்த மாற்றுலக கொள்கையை இலகுவாக விளக்குகிறார்கள்… இரண்டு கோல வடிவான பொருட்களை ( உதாரணமாக… ஃபூட்பொல் பந்து) எடுத்து… குறிப்பிட்ட இடைவெளியில்… எதிர் எதிர் திசைகளில் சுற்ற விடும் போது… ஒரு கோலப்பொருளில் தாழ்ப்பான இடமும் மற்றையதில் மேடான இடமும் வரும் போது… தாழ்ப்பான இடத்திலிருக்கும் பொருள்… மேடாக உள்ள கோலத்தின் பகுதிக்கு இடம் பெயர்க்கப்படும்…காரணம்… அங்கு ஏற்படும் அமுக்க வேறுபாடாகும்… ( இங்கு இரண்டு கோளங்களினது வெளியமைப்பும் தளமானதல்ல…)...

இந்த கொள்கையை நான் ஏன் இங்கு குறிப்பிட்டுள்ளேன்… என்பது பலருக்கு தெரிந்திருக்கும்… தெரியாதவர்கள்/ இன்னமும் விளங்கிக்கொள்ளாதவர்கள்… அடுத்த பதிவில் சம்பவங்களுடன் எழுதும் போது விளங்கிக்கொள்ளலாம்… ————————————————————————————–...
இங்கு… பென்டகன் தகர்க்க பட்ட போது.. பிடிக்கப்பட்ட படத்தை பாருங்கள்… அது சம்பந்தமானக எதிர்வரும் பதிவுகளில் பார்ப்போம்… ( முகில் கூட்டமாகவுமிருக்கலாம்…) பிரமிட்களில் பயண்படுத்தப்பட்டுள்ள… நவீன விஞ்ஞானம் என்ன??? ...

அவர்கள் அந்த அறிவை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பதுகளை அடுத்த பதிவில் பார்ப்போம்… ( இங்குதான், எனக்கு நிறைய குழப்பம் இருக்கிறது… இரண்டு வகையாக ஜோசிக்க வேண்டியுள்ளது… ஒன்று லெமூரியா… மற்றது ஏலியன்ஸ்…. அடுத்த கிழமைக்குள்… லெமூரியா தொடர்பாக நான் மேலதிகமாக வாசித்த சில வியப்பான சம்பவங்களுடன் லெமூரியா தொடரின் அடுத்த பகுதியை எழுதுகிறேன்…)

இங்கு குறிப்பிட்டிருப்பது பலது எனது ஐடியாக்கள், கருத்துக்கள்தான்… அதனால், தவறு என நீங்கள் கருதுவதை பின்னூட்டத்தில் இடவும்… ( எடுத்துக்காட்டாக பயன்படுத்தப்பட்ட கொள்கைகள் விஞ்ஞான உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள்…)...


இதன் எட்டவது   பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...

ஏலியன்ஸ் 06 - வேற்றுக்கிரகவாசிகள் எனப்படும் “ஏலியன்ஸ்” எதிர்கால மனிதர்களா?

ஏலியன்ஸ் 06 - வேற்றுக்கிரகவாசிகள் எனப்படும் “ஏலியன்ஸ்” எதிர்கால மனிதர்களா?

பார்ட்-1
பார்ட்-2

பார்ட் -3

பார்ட்-4
பார்ட்-5


ஏலின்ஸ் ஐந்தாம்    பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


நாங்கள்தான் ஏலியன்ஸாக இருக்கலாம் எ ன போன பதிவில் நான் கூறியிருந்தேன்… அதை பார்ப்பதற்கு முன்னம் சில சம்பவங்களை பார்த்தால் பொருத்தமாக இருக்கும்…

1954 ம் ஆண்டில் அமெரிக்காவில் பிரபலமாக பேசப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்த தகவலின் படி…...

அமெரிக்காவின் குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் பல பகுதிகளைச்சேர்ந்த மக்களால்… தாம் விசித்திரமான உயிரினங்களை( மனிதர்களை) கண்டதாக வெவ்வேறு இடங்களில் பொலிஸ்ஸாரிடம் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இவர்கள் அனைவரினதும் புகார்களிலும்… “குட்டையான உருவமும், பெரிய தலையும், நீண்ட கைகளும், விசித்திரமான நீளமான கண்களும் கொண்ட மனிதர்களை (?) தாம் கண்டதாகவும்…. அவர்கள் தம்மை கண்டதும் ஓடி மறைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்… மேலும் அவர்களை பின் தொடர்ந்து சென்றவர்கள் மயக்கமுற்று சுயனினைவின்றி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்… சிலர்… தாம் அவர்கள் வந்திறங்கிய இயந்திரத்தை/பறக்கும்தட்டை கண்டதாகவும் கூறியுள்ளார்கள்…...

( ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பலர் குறிப்பிட்ட நேர இடைவெளியில் இந்த தகவல்களை பதிவு செய்தமையால்… இது நம்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது… குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் என்பதன் மூலம்… அவர்களின் வேகம் சம்பந்தமாகவும் நங்கள் இந்த பதிவுகளை கணக்கெடுக்கலாம்… ) ————————————————————————————–

இது போன்றே… பொதுவாக அனைத்து பறக்கும்தட்டு சம்பவங்களிலும் கூறப்பட்டுள்ளது… நாங்கள் இங்கு கவணிக்க வேண்டியது… அவர்கள் கூறிய உடலமைப்பைத்தான்… அவர்கள் கூறிய உடலமைப்பில்… கைகள் நீளமாகவும் உடல் குட்டையாகவும் தலை பெரிதாகவும் இருந்ததாக கூறியுள்ளார்கள்… இதுதான் இங்கு முக்கியமானது… ஏனென்றால், விஞ்ஞானிகள் மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியில் என்ன என்ன உடல் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்வு கூறுகிறார்களோ… அதையொத்தே இந்த சம்பவங்களின் போது கூறப்பட்ட ஏலியன்ஸின் உருவ அமைப்பும் இருக்கிறது…. (விஞ்ஞானிகளால் எதிர்கால மாற்றம் சம்பந்தமாக கூறப்பட்ட விளக்கங்கள் முதல் 2,3 ம் பதிவுகளில் இருக்கிறது… வாசிக்காதவர்கள் வாசிக்கவும்… :) ) அத்தோடு இதுவரை பார்த்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சம்பவங்களின் போதும்… ஏலியன்ஸின் உருவமென அடையாலம் கூறப்பட்ட அனைத்து சம்பவங்களிலுமே ஏலியன்ஸின் உருவ அமைப்பு மனிதனின் உருவ அமைப்பினைஜொத்ததாகவே உள்ளது. ( சில சம்பவங்களில் வேறு அமைப்பு கூறப்பட்டாலும்… அதாவது பல கைகள் என்பது போன்ற உருவங்கள் கூறப்பட்டாலும்…. அவையும் நாம் பூமியில் காணும் ஏதோ ஒரு உயிரினத்தின் சாயலை ஒத்ததாகவே ஒத்ததாகவே உள்ளதை காணமுடியும்….)...

இதன்னடிப்படையில் பார்க்கும் போது… ஏலியன்ஸ் என பொதுவாக கூறப்படும் உடலமைப்பானது எமது புலன்களால் உணரப்பட்ட உருவங்களை அடிப்படையாக கொண்டே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது....

ஆனால், நான் ஏற்கனவே செவ்வாயும் மனிதனும் நாமும் பதிவில் கூறியதன் படி… ஓரனு அமீபாவாக உருவான உயிரின ஆரம்பம்… கலன்களின் பிரிவின் போது ஏற்பட்ட சிறு…சிறு தவறுகளின் காரணமாகவும்… பிற்காலத்தில் ஏற்பட்ட இனக்கலப்பினாலும் பல உயிரினங்களாக பரிணாம வளர்ச்சியடைந்து… இன்று உச்சக்கட்டமான பரிணாமமடைந்த மனிதன் உருவாகியுள்ளான்…...

இந்த பரிணாம வளர்ச்சி நிண்டுவிடும் என கூற முடியாது… பரிணாமவளர்ச்சி என்பது தொடர்ச்சியானது… ஆகவே… குரங்கிலிருந்து மனிதன் வந்தது போன்று… மனிதனிலிருந்தும் இன்னொரு மேம்பட்ட உயிரினம் உருவாகும் என்பது அனைவருமே ஏற்றுக்கொள்ளத்தக்க வெளிப்படை உண்மை. நோர்மலாகவே… ஆதிகாலத்து மனிததுக்கும் நமக்கும் பல வித்தியாசங்கள் உருவாகிவிட்டன… மூக்கு , விலா எலும்பு என பல படிகளில் நாம் பரிணாம் அடைந்துவிட்டோம்… ஹீ….ஹீ… இன்று கூட சூழல் மாற்றங்களால் தேவையற்றதாக கருதப்படும் முடிகூட கொட்டுகிற… ( இது சம்பந்தமாகவும் ஏற்கனவே விரிவாக பார்த்துள்ளோம்…) மொட்டை விழுபவர்கள் இனி கவலைப்படதேவையில்லை…. ஹீ…ஹீ…. பரிணாம ரீதியில் அவர்கள் எம்மைத்தாண்டிக்கொண்டிருக்கிறார்கள்….

ஆனால்…....

வேற்றுக்கிரக வாசிகளாக கருதப்படும் ஏலியன்ஸும் மனிதனின் உடலமைப்பை ஒத்திருக்கும் என கூறுவது ஒரு நெருடலான விடையம். ஏனென்றால்… பூமியில் அணுக்கலன்களில் ஏற்பட்ட தவறுகளால்த்தான் இன்று நாம் உருவாகியுள்ளோம்.. இதே படியில்… தவறுகள் ஏற்பட்டால்த்தான்… 2 கை,2கால்,ஒரு முகம் என மனித அமைப்பையோ அல்லது பூமியின் இயற்கை உயிரின அமைப்பையோ ஒத்திருக்க சந்தர்ப்பம் உள்ளது. ஆனால்… இதே தவறுகள் ஏற்பட வேண்டுமெனின்… பூமி இருக்கும் அதே அண்டவெளி சூழ் நிலை இருக்க வேண்டும். இது மிகவும் சாத்தியம் குறைந்தது… ( சாத்தியமும் இருக்கிறது அதை இதில் கூறினால் இடம் ஓவராக நீண்டுவிடும் என்பதால் எதிர்வரும் பதிவுகளில் பார்க்கலாம்…) நாங்கள் முக்கியமாக இன்னொரு விடையத்தையும் இங்கு பார்க்கனும்….

அதாவது…. மனிதன் எவ்வளவுதான் கெட்டித்தனமானவனாக இருந்தாலும் இயற்கையின் அமைப்பை மீறி… எம்மால் சிந்திக்க முடியாது… சும்மா பார்த்தாலே இது தெரியும்… கார்,பிளேன்,கப்பல் என எதைப்பார்த்தாலுமே ஏதோ ஒரு வகையில் இயற்க்கையாக உள்ள அமைப்பை ஒத்தே இது இருக்கிறது… காரணம் மனிதனின் மூளையில் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ணக்கருக்கள் இவை… இது மாறுவதற்கு சந்தர்ப்பம் மிக…மிக குறைவு… அதனால்… கூட ஏலியன்ஸின் உருவங்களை மனிதனுடம் ( எமக்கு உட்பட்ட இயற்கையுடன் ) ஒப்பிட்டு கூறுகிறார்களாக இருக்கலாம்...

ஏற்கனவே இந்த ஏலியன்ஸின் அமைப்பு பற்றி… கிரேக்க , எகிப்திய‌ , புராதன குகைகளில் காணப்பட்ட குறிப்புக்களைப்பார்த்திருந்தோம்… அந்த‌ குறிப்புக்களில்… மனிதனுடன் இணைந்து செயற்படுவது போன்றுள்ளது… இது ஒரு முக்கியமான விடையம்… காரணம்… எகிப்திய பிரமிட்களின் கட்டிட அமைப்புக்களில் பயண்படுத்தப்பட்டுள்ள… தொழில் நுட்பங்களில்… பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரங்கள்… பூமியின் விட்டங்கள்… மற்றும் சில முக்கியமான தொழில் நுட்பங்கள்… பயன்படுத்தப்பட்டுள்ளன… முக்கியமாக வட்டத்துக்கு… பயன்படுத்தப்படும்… “ஃபை 22/7 = 3.14…)” பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவு அவர்களுக்கு ஏலியன்ஸ் ( எதிர்கால நாம்(?) ) கொடுத்ததாக இருக்குமா… என்பதையும்… காலப்பயணம் சம்பந்தமான சில விடையங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.

அவற்றை அடுத்துவரும் பதிவுகளில் பார்க்கலாம்

இதன் ஏழம்   பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...


ஏலியன்ஸ் 05 - ஆட்களைக்கடத்தும் வேற்றுக்கிரக வாசிகள்!

ஏலியன்ஸ் 05 - ஆட்களைக்கடத்தும் வேற்றுக்கிரக வாசிகள்!

பார்ட்-1
பார்ட்-2

பார்ட் -3

பார்ட்-4
ஏலின்ஸ்  நான்காம்   பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


போன பதிவில் ஏலியன்ஸால் பரிசோதிக்கப்பட்ட சிலரின் சம்பவங்களைப்பார்த்திருந்தோம்…

இன்று அதன் தொடர்ச்சியாக மேலும் சில சம்பவங்களைப்பார்ப்போம். ரஷ்ய மலைப்பகுதியில்.. யுத்தம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் நடந்த சம்பவம் இது…...

வழமையாக போரின் போது தனித்தனி பெரும் குழுக்களாக இருப்பது வழக்கம்… அந்த மாதிரித்தான் 3 குழுக்களைச்சேர்ந்த 1000 சிப்பாய்கள் தமது ஆயுதங்கள் சகிதம் ஒரு மலையடிவாரத்தில் தங்கியிருந்தார்கள்… அங்கு அவர்கள் தங்கியிருப்பது ஒன்றும் புதிதல்ல… 2,3 வாரமாகவே அங்குதான் நிலைகொண்டிருந்தார்கள்… ஒரு நாள் அந்த குழுவை சேர்ந்த சிப்பாய்கள் இருவர் மட்டும்… அடுத்த குழுவுடன் தமது உணவு சம்பந்தமான விடையங்களை கதைப்பதற்காக ( இன்னொரு நூளில் வாசித்ததன் படி… காலை கடன்களை முடிப்பதற்காக…) தனியாக சென்றிருந்தார்கள்… தமது வேலைகள் முடிந்ததும்… 1 மணி நேரத்தின் பின்னர் அவர்கள் தமது குழுவுடன் இணைவதற்கு திரும்பினார்கள்… என்ன ஆச்சரியம்… அங்கு இவர்களின் குழுவைச்சேர்ந்த ஒருவரைத்தானும் காணமுடியவில்லை… ஆனால்… அங்கே இருந்த ஆயுதங்கள், தங்கியிருந்த ரென்ட்கள், வாகனங்கள் அவர்களால் பயண்படுத்தப்பட்ட அனைத்துப்பொருட்களும் அப்படியே இருந்தன… இவர்கள் பீதியுடன் அத்தகவலை… தமது மேலிடத்துக்கு அறிவித்தார்கள்… அவர்கள் பெரும் தேடுதலை மேற்கொண்டும் ஒரு பலனுமில்லை… ( கூகுள்…)...

இந்த சந்தர்ப்பத்தில் வேற்று படையினர் இவர்களை கைது செய்திருக்க சந்தர்ப்பமில்லை… 1000 பேரி இருந்தவர்கள் ஒரு எதிர்ப்பை காட்டியிருப்பார்கள்… மற்றத்கு 1 மணி நேரத்துக்குள் இவளவும் நடக்க சந்தர்பமில்லை… தேடுதலின் போதும் அவர்கள் அகப்பட வில்லை… அந்த பனி மலைப்பிரதேசத்தில் கூட்டமாக தப்பி போவது என்பது சாத்திய பட வாய்ப்பில்லை… மேலும் பனிச்சரிவில் சிக்கி இருப்பார்கள் என்று நினைப்பதும் முற்றாக ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை… ( எங்கு என்ன நடந்து இருக்கும்… என்பதை இரண்டு கண்ணோட்டத்தில் பார்க்க முடியும்… அதுக்கு முன்னாடி இதே போன்று பதிவுசெய்யப்பட்ட இன்னொரு சம்பவத்தை பார்ப்போம்….) ———————————————————————————–...
http://rahmanfayed.blogspot.in/2012/08/blog-post_10.html
இது கொஞ்சம் பழசு… 1881… பேர்முடா!!!! பிரதேசம்… (பேர்முடா முக்கோன வலையமே ஒரு மர்மம்தானே… அது தொடர்பாக க பார்க்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் )...

பேர்முடா பகுதிவில் றோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை… ஒரு நாள் அப்படித்தான் றோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் காரர்களின் கண்களுக்கு… தூரத்தி ஒரு பாய்மரக்கப்பல்… ஒன்று தனியாக மிதந்து கொண்டிருந்தது தெரிந்தது… உடனே அருகில் சென்று பார்த்தார்கள்… என்ன துரதிஷ்டம் கப்பலில் ஒருத்தரையும் காணவில்லை…. ஒரு நாய் மட்டும் பசியால் வாடிப்போயிருந்தது…. கடல் கொள்ளையர்களின் வேலையாக இருக்கும் என்றால் அதுக்கும் சந்தர்ப்பமில்லை… ஏனெனின்… பயணிகளால் கொண்டு வரப்பட்ட நகைகள் மற்றும் தளபாடங்கள் அனைத்தும் அப்படிஅப்படியே இருந்தன… ( மேகதூதன் பதிப்பகம்…) அப்படி என்றால் என்னதான் நடந்திருக்கும்… ———————————————————————————–
இன்னொன்று… மேலுள்ள சம்பவங்களில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானது… இதுவும் ஊர் பேர் தெரியாதது… ஆனால், பல விஞ்ஞானிகளாளும் ஆய்வாலர்களாளும் நேரடியாக உணரப்பட்ட ஃபேமஸான சம்பவம்…...

ஒரு விவசாயி… தனது தோட்டத்தில் அதிக படியான விளைச்சலை காட்டி இருந்தமையால் அவரை கெளரவிக்கும் நோக்கத்துடன் விவசாயத்துக்கு பொறுப்பான அதிகாரி… ஒரு நாள் மாலைஅவரின் வீட்டுக்கு வந்திருந்தார்… இருவரும் தமது தோட்டத்தில் கதைத்துக்கொண்டு உலாவினார்கள்… அப்படியே உலாவிக்கொண்டுருக்கையில்… அதிகாரி திரும்பி பார்த்த போது… விவசாயியை காணவில்லை… அந்த வெட்ட வெளி பிரதேசத்தில் அவர் ஓடி ஒழிந்திருக்க சந்தர்ப்பமே இல்லை…. சுற்று முற்றும் தேடினார்கள்… ம்ஹீம்… ஒரு அறிகுறியுமில்லை… உடனே ஆய்வாளர்களுகுக்கு ந்த புத்திசாலி அதிகாரி அறிவித்தார்…. அவர்களும் வந்தார்கள்…விவ‌சாயியை கண்டு பிடிக்க முடியவில்லை… ஆனால் இருவரும் நடந்து வந்துகொண்டிருந்த ஒரு இடத்தில் ஒரு பகுதியில் மாத்திரம்… வட்ட வடிவாக தரை புள்வெளியில் மஞ்சள் படிவு காணப்பட்டது…. அது ஏன் வந்தது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை…. அதைவிட ஆச்சரியம் என்னவென்றால்… அம்மனிதர் காணாமல் போன நாளிலிருந்து 3 நாட்களுக்கு அடிக்கடி தன்னை காப்பாற்றுங்கள் என பொருள் பட சத்தம் கேட்டதாக சில ஆய்வாளர்களும்… பல ஊர்மக்களும் தெரிவித்தார்கள்…. 3நாட்களின் பின்னர் அந்த குரல் ஓய்ந்துவிட்டது….
————————————————————————————

சரி… இனி என்ன நடந்திருக்கும் என்பதை பார்ப்போம்… இந்த சம்பவங்களை நான் சொன்ன மாரி இரண்டு வகையாக பார்க்கலாம்… ஒன்று… ஏலியன்ஸ் தமது தொழில் நுட்ப அறிவை பயன்படுத்தி தமது பறக்குந்தட்டுகளில் இருந்தவாறே கதிர்களின் துணையுடன் இவர்களை உள்ளெடுத்திருக்கலாம்… (அது எதற்காக என்பது தெரியாது…)

ஆனால்… அது எப்படி மனிதர்களை மட்டும் அந்த கதிர்கள் உள்ளெடுத்தது என்பது விளங்கவில்லை… நாம் காந்தத்தை பயன்படுத்தி உலோகங்களை மட்டும் கவர்வது மாதிரி… அவர்களின் தொழில்னுட்ப அறிவில் இது சாத்தியமாகி இருக்கலாம்… ( ஹீ…ஹீ… அப்ப எப்படிநாய் மட்டும் கதிர்களில் அகப்படாமல் தப்பியது??? அதுக்கு இன்னும் வாசித்துதான் தேடனும்…) அந்த குரலுக்கான விளக்கத்தை அடுத்த பதிவில் பார்ப்போம்… மற்ற வகைப்படி பார்த்தால்… அணுவில் புரோத்திரனுக்கு எப்படி இலத்திரன் மறையாக இருக்கிறதோ… அதே போன்று இந்த பூமிக்கும் மறையாக பரிமாணங்களில் முற்று முழுதாக மாறுபட்ட இன்னொறு உலகம் தொழிற்படலாம்… அது எப்படி இந்த சம்பவங்களுடன் பொருந்தும் என்பதை இதில் விளக்கினால்… பதிவு ஓவராக நீண்டுவிடும்… அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்…

————————————————————————————

ம்ம்ம்… நீண்ட நாட்களாக இந்த பகுதியில் மனிதனின் எதிர்கால பரிமாண மாற்றங்கள் பற்றிய விஞ்ஞானிகளின் எதிர்வு கூறல்களைப்பற்றி எழுதிவந்தேன்… காரணம்…. இந்த ஏலியன்ஸ் என அறியப்பட்டிருப்பவர்கள் நாங்களாகவும் இருக்கலாம்… அதாவது… எதிர்காலத்தில் பரிமாண வளர்ச்சியில் நாம் சந்திக்க கூடுமென எதிர்வு கூறப்படும் உடல் மாற்றங்களுக்கும்… இன்று நாம் ஏலியன்ஸ் என இனங்கண்டிருக்கும் உருவத்துக்கும் ஒற்றுமைகள் இருப்பதைக்காணமுடியும்… ஆகவே… எதிர்காலத்தில் தொழில்நுட்ப ரீதியாக பெரும் வழர்ச்சியடையப்போகும...

இந்த ரைம்ரவலுக்குத்தேவையான வேகத்தையும் அடைந்திருக்க சாத்தியமுள்ளது… ஸோ… இந்த ஏலியன்ஸென அடையாலங்காணப்பட்டவர்கள் எதிர்கால நாங்களாகவும் இருக்கலாம் தானே… இது சம்பந்தமாக கனக்க எழுதவேண்டி இருக்கிறது… எல்லாத்தையும் ஒன்றாக எழுதினால் போராக இருக்கும்… அடுத்த பதிவுகளில்… எதிர்கால நாங்கள் தான் ஏலியன்ஸ் (?) என்பதற்கான சான்றுகளையும்… அப்படி என்றால் ஏன் அவர்கள் எமது நிகழ்காலத்துக்கு வந்த போதும் அந்த தொழில்நுட்ப அறிவுகளை எமக்கு சொல்லித்தரவில்லை…. மாற்று உலக கோட்பாடு… மற்றும் மேலும்சில விசித்திரமான ஏலியன்ஸ் தொடர்பான பதிவு செய்யப்பட்ட தகவல்களையும் பார்ப்போம்….
————————————————————————————
By : Chandran Pirabu .

இதன் ஆறாம்  பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...

ஏலியன்ஸ் 04 - பூமிக்கு விஜயம் செய்த ஏலியன்ஸ் குறிப்புக்கள்.

ஏலியன்ஸ் 04 - பூமிக்கு விஜயம் செய்த ஏலியன்ஸ் குறிப்புக்கள். 

பார்ட்-1
பார்ட்-2

பார்ட் -3

ஏலின்ஸ் முன்றாம்  பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


போன பதிவில் காலப்பயணம் பற்றிய சில கொள்கைகளையும், பரிமாண மாற்றத்தையும் பார்த்திருந்த அதேவேளை, ஏலியன்ஸினால் பாதிப்புற்ற ஒரு பெண்ணைப்பற்றி சில குறிப்புக்களைப்பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சியை இன்று பார்க்கலாம்…

அடுத்து ஒரு 6 மாத காலத்தின் பின்னர்…

காலையில் எழுந்து பார்த்த அந்த பெண் அதிர்ச்சியுற்றாள்… காரணம் அவளது வயிறு பிள்ளை இருப்பதற்கான எந்தவித அறிகுறியுமில்லாமல் இருந்தது….

உடனே டொக்டரிடம் சென்று செக் பண்ணி பார்த்தார்கள்… என்ன ஆச்சரியம்… வயிற்றில் பிள்ளை இருந்தமைக்கான எந்தவித அறிகுறியுமே இல்லை!!!!

 மீண்டும் ஹிப்னாடிஸம்… அதே போன்ற சம்பவத்தையே பெண் மீண்டும் சொன்னால்… அப்படியானால் என்ன நடந்து இருக்கும்????...

வேற்றுக்கிரக வாசிகள் என பரவலாக நம்பப்ப‌டும் ஏலியன்ஸ் ஏன் அந்த பெண்ணின் வயிற்றில் குழந்தையை உருவாக்கி இருக்க வேண்டும்… ஏன் மறுபடியும் அந்த கருவை கலைத்திருக்க வேண்டும்… அல்லது 6 மாதமான அந்த கருவை அவர்கள் தமது பரிசோதனைகளுக்காக கொண்டுசென்றார்களா??? பூமியிலுள்ள மனிதர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள் என்பதை அறிவதுதான் அவர்களின் நோக்கம் என்றால் அது ஏன்????

போன்ற பல கேள்விகள்… தேங்கி நிற்கின்றன....

———————————————————————————
அடுத்து ஒரு இன்னொரு விசித்திர சம்பவம்…

இதுவும் பெயர்,ஊர் தெரியாதது… ( தெரிந்தவர்கள் கூறவும்…) இரண்டு நண்பர்கள்…

ஆற்றங்கரையோரமாக வந்து கொண்டிருந்தார்கள்… அப்போது… கண்ணைக்கூசச்செய்யும் வெளிச்சத்துடன்… பறக்கும் தட்டு ஒன்று வந்திறங்கியது… அந்த அதிர்ச்சியில் ஒரு நபர் மயக்கமுற்றுவிட்டார்… மற்றவர் பார்த்தபோது ஒன்றுமே இல்லை… தனது நண்பர் மட்டும் மயக்கமுற்றிருப்பதைக்கண்டு… உடனே அவரை ஹொஸ்பிட்டலுக்கு கூட்டிச்சென்றார்… மயக்கம் தெளிந்த பின்னர் அந்த நபர்… டொக்டர்களிடம் தமக்கு நடந்தவற்றை கூறினார்…...

அங்கு இருந்த யூ.எஃப்.ஓ ஆராச்சியாளர்களுக்கு தகவல் அனுபப்பட்டு… அவர்கள் இந்த நபர்களை பரிசோதிக்க முடிவெடுத்தார்கள்… இருவரையும் ஹிப்னாடிஸத்துக்கு உட்படுத்தியபோது… ஒரு சிறிய வியப்பு காத்திருந்தது…. ஆம்… அந்த மயக்கமுற்ற நபரிடம் ஏலியன்ஸ்கள் எந்தவிதமான சோதனைகளையும் செய்யவில்லை… மாறாக… சுய நினைவுடனிருந்த நபர் சொன்னபடி… அவரை தமது ஓடத்துக்குள் அழைத்துச்சென்று… சில கருவிகள் மூலமாக இவரின் உடலில் துளைகள் இடாமலே ஏதேதோ ஆராச்சிகள் செய்தார்களாம்…...

இதிலிருந்த சில முடிவுகளை நாங்கள் எடுக்க முடியும்…

இங்கு… மயக்கமுற்ற நபருக்கு… ஏலியன்ஸ் வந்தது தெரியும்…( அதை பார்த்த பின்னர்தான் அவர் மயக்க மடைந்தார்…) ஆனால், சுய நினைவுடனிருந்தவருக்கு அது தெரியாது… அப்படி என்றால்… ஏலியன்ஸ் ஏதோ ஒரு முறையை பயன்படுத்தி நினைவுகளை அழித்திருக்கிறார்கள். அவ்வாறு அழிப்பதற்கு மனிதன் சுய நினைவுடனிருக்க வேண்டும். இல்லை என்றால்… ஏன் அவர்கள் அந்த மயக்கமுற்ற‌ நபரின் நினைவை மட்டும் அழிக்கவில்லை… ஆகவே… அவர்கள் எமக்கு உட்படாத தமது பரிமாணத்தை பயன்படுத்தியோ… அல்லது… அவர்களது அறிவை ( 7 வது அறிவு என்றும் வைத்துக்கொள்ளலாம்…) பயன்படுத்தியோ… எமது கண்கள்(????) ஊடாக தமது கட்டுப்பாட்டுக்குள் எங்களை ஆட்படுத்துகிறார்களாக இருக்கலாம். ( மயக்கமுற்றமையால் அந்த நபரை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை போலும்… ) ———————————————————————————
அடுத்து…...

கோர்டன் குஃபெர் என்ற ஜேர்மனிய விண்வெளி வீரர்… தான் இராணுவத்தில் பணியாற்றிய போது தனக்கு நிகழ்ந்ததை விபரிக்கின்றார்… “நான் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது… எனது விமானத்தை தாண்டி ஒரு மாறுபட்ட விமானம் பறந்தது… நான் அதை பின்தொடர்ந்து சென்றபோது… அது எதிர்பார்க்க முடியாத அளவுக்கு விரைவாகவும் கிட்டத்தட்ட 90 பாகையில் அதன் திசையை மாற்றி மறைந்துவிட்டது…”

இந்த சம்பவத்தில் அவர்கள் எம்மை விட எவளவு கூடிய அறிவை பெற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகும்… அதாவது… இவரின் கூற்றுப்படி பார்க்கும் போது அது… கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பறந்திருக்கிறது என்ற முடிவுக்குவரலாம்…. 90 பாகையில் மாறி மாறி திசை திருப்புவது என்பது நமது அறிவுக்கு இன்னமும் சாத்தியமாகாதது… ———————————————————————————... 
சம்பவங்கள் இருக்கட்டும்… இவ்வாறான மேலும் சில முக்கிய சம்பவங்களை பிறகு பார்க்கலாம்…... 

அதுக்கு முதல்…. எகிப்திய சுவரோவியங்களை பார்த்தொமானால்… அதில் வேற்றுக்கிரக வாசிகள் என கருதப்படும் ஏலியன்ஸின் உருவ அமைப்புக்கள் காணப்படுகின்றன… ஆனால் என்ன குழப்பம் என்றால்… அவை மனிதனுடன் சேர்ந்து உதவுவதுபோன்று வரையப்பட்டுள்ளது. ( இது சில நேரம்… அவர்கள் இணைந்து செயற்படாவிடினும் அவர்களிடம் இருந்து பெற்ற அறிவுகளை தாம் எவ்வாறு பயன் படுத்தினோம் என்பதை காட்டுவதற்காகவும் வரையப்பட்டு இருக்கலாம்.)... 

மேலும்… புராதன குகைகளிலும் ஏலியன்ஸின் உருவ அமைப்பை ஒத்த உருவங்கள் வரையப்பட்டுள்ளன…... 

இதற்கு மேலாக… இராமாயணத்தில் இராவணனின் வாகனமான புஸ்பக (புட்பக) விமானத்தின் இயக்கமானது… தரையிலிருந்து செங்குத்தாக கிழம்பி எங்கு வேணுமென்றாலும் குறுகிய நேரத்தில் செல்லத்தக்கது என்று கூறப்படுகிறது. இது உண்மையோ இல்லையோ… அது வேறுவிடையம் ஆனால், புராதன மக்கள் ஏலியன்ஸின் இயக்கத்தை உண்ணிப்பாக அவதானித்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாகும். ———————————————————————————... 
அடுத்து நான் போன பதிவில்…. தற்போது மனிதனின் பரிமாணவளர்ச்சி பற்றி கூறியிருந்தேன்… அதன்படி பார்க்கையில்… இனி… எதிர்காலத்தில்… மனிதன் தந்து உடல் வலுவைவிட மூளையைத்தான் பயண்படுத்தப்போகிறான்… ஆகவே… நமது விஞ்ஞானிகளின் கணிப்பு படி… அடுத்த கட்டமாக… மனிதனின் உடல் சிறுத்து… தலை பெருக்கும்… அத்தோடு பார்வைப்புலன் விரிவடையவே கண்ணும் அகலாம்… என்னதான் கருவிகள் வந்தாலும்… பெரும்பாலும் அவை கைகளாக் இயக்கப்படுபனவே… எனவே கையும் நீளகாகலாம்… (உடம்ப்பு சிறிதாகும் போது கை நீளமாகாவிடினும் ஆகியதாகத்தானே தோன்றும்… )

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்பது இப்போது விளங்கியிருக்கு… வரும் பதிவுகளில்… அதை தெளிவாக விளக்குகிறேன்….

By : Chandran Pirab...

இதன் ஐந்தாம் பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...

ஏலியன்ஸ் 03 - காலப்பயண சாத்தியமும், ஏலியன்ஸ் உருவாக்கமும்!

ஏலியன்ஸ் 03 - காலப்பயண சாத்தியமும், ஏலியன்ஸ் உருவாக்கமும்!

பார்ட்-1
பார்ட்-2
ஏலின்ஸ் இரண்டாம் பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ..


“காலம் மூலம் பின்நோக்கி செல்லுதல் சாத்தியம் என்பதை நான் விளக்குகிறேன். ஒரு பொருளை நாம் பார்க்க பயன்படுவது அதன் மேல் பட்டு வெளிப்படும் போட்டான்ஸ் (photons). பூமி போட்டான்ஸ் வெளியிடமுடியாது, ஏனெனில் இது கிரகம். சூரியனால் முடியும் , ஏன்னா அது நட்சத்திரம். இப்ப நம்மால் பார்க்க சாத்தியம் ஆவது போட்டான்ஸ் ஒரு பொருள் மேல போய் மோதுவதால் . உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் சூரியனிலிருந்து புறப்பட்டு ஒரு போட்டன்ஸ் (light) பூமியை அடைய 8 min 24 sec ஆகும்.

அதாவது சூரியனில் ஒளி வெளிப்பட்டுவிட்டது, செயல் நடந்து விட்டது. ஆனால் அதை நாம் பார்த்தல் மூலம் அறிய 8 min 24 sec ஆகுது. இது காலத்தால் நிகழுது. இதே நாம் இன்னும் தூரத்தில் இருந்தால் இன்னும் தாமதமாகும். அதாவது ப்லூட்டோ கிரகத்தை பொறுத்தவரை அந்த செயல் நடைபெறவில்லை. ஏனென்றால் ஒளி இன்னும் சென்றடையவில்லை.

இததுதான் கால பின்னோக்கி செல்லுதலை நிருபிக்கிறது. அதாவது ஆற்றல் அழிவின்மை விதிப்படி நடந்த நிகழ்ச்சிகளின் காட்ச்சிகளால் வெளிபடுத்தப்பட்ட போட்டான்கள் சென்று கொண்டே இருக்கும். நாம் ஒளியை அதாவது போட்டானை விட வேகமாக சென்று பார்த்தால் அதனை அறிய முடியும். இது தான் time travel என்கிறோம். அப்படிஎன்றால் எதிர்காலத்திலிருந்து நம் காலத்திற்கு யாராவது வந்திருப்பார்களே என்று நீங்கள் கேக்கலாம். அவர்கள் காட்ச்சிகளைதான் பார்க்க முடியும் செயல் முடிந்து விட்டதால் அதில் பாதிப்பை ஏற்படுத்த முடியாது. அதாவது one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம்.

அதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன் டைஹோ பிராகி 1624 -ல் ஒரு நட்சத்திர வெடிப்பை பார்த்து பதிவு செய்தார். அது அந்த நிமிடம் நடந்த நிகழ்வு இல்லை. அது நடந்து பல நூற்றாண்டுகளுக்கு பின்தான் அறியப்பட்டது. ஏனென்றால் அந்த நட்சத்திரத்துக்கும் பூமிக்கும் தூரம் அதிகமாவதால் ஒளி நம்மை அடைய அவ்வளவு காலம் ஆயிற்று. இந்த நொடியே சூரியன் வெடித்து அழிந்தால் கூட அதை நாம் அறிய 8 min 24 sec ஆகும்....

இதன் மூலமா ஒளியின் வேகத்தைவிட வேகமாக பயணித்தால் இறந்த காலத்திற்குதான் செல்ல முடியும்(அறிய முடியும்), எதிர் காலத்திற்கு அல்ல. எனக்கு time travel மூலம் எதிர் காலத்திற்கு செல்வோம் என நம்பிக்கை இல்லை. சிலர் parallel universe எனும் கோட்பாட்டின் படி இரண்டும் சாத்தியம் என்கிறார்கள். negative velocity ல பயனிச்சா எதிர் காலத்திற்கு செல்லுதல் சாத்தியமாகலாம்.”...

///one dimension -னில் மட்டும் கால பின்னோக்கி செல்லுதல் சாத்தியம். /// இதில் இரண்டு விதமான கொள்கைகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்…...

ஒன்று… உலக இயக்கம் ஒரே தொடராக நடந்து கொண்டிருக்கிறது… இதன் அடிப்படையில் பார்த்தால், எதிர்காலத்திலிருந்து வருபவர்களால் (???) இறந்த காலத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றத்தினால்… உலக இயக்கத்தின் தொடர்ச்சி மாற்றமடையும்....
அதாவது… உங்களை எதிர்காலத்திலிருந்து வந்தவர் கொன்று விட்டால்… உங்கள் மூலமாக எதிர்காலத்தில் உருவாகி இருக்கக்கூடிய ( பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்…) அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமாம். இந்த கொள்கையில்.

எவ்வாறு அந்த மாற்றம் நிகழும் என்பதற்கு தெளிவான விளக்கமில்லை… அதாவது, ஒருவரை இறந்த காலத்தில் கொன்றால்… நிகழ்காலத்தில் அவருடன் தொடர்புடைய நிகழ்வுகள் திடீரென அழியுமா/ மறையுமா? எனும் கேள்விக்கு சிறந்த விளக்கமில்லை. :(...

சூரியனிலிருக்கும் ஒளி எம்மை வந்து சேர 8 நிமிடம் எடுக்கின்றது. எப்பவோ நடந்த நட்சத்திர வெடிப்பு தற்போது தான் தெரிகிறது. அதே போலத்தான்… இந்த பிரபஞ்சம் தோன்றிய போது ஏற்பட்ட பெரு வெடிப்பினையும் தற்போதும் பார்க்கலாம்… இது 14.5 (??) பில்லியன்ஸ் ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டது. இதை நாம் படம் பிடிக்க முடியாது… ஏன் என்றால் நம்மிடம் வேகமில்லை… :(...

விஞ்ஞானிகள்… மனிதனின் அடுத்த பரிணாமம் பற்றி எதிர்வு கூறியுள்ளார்கள்…
அதில் ஒன்று…
அதிகமாக மூளையை பயன்படுத்தும் பகுதியை சார்ந்த மக்களின் தலை பெரிதாக பரிணாமமடையும் எனவும்… இயந்திரங்கள் மனிதன் செய்ய வேண்டிய பல வேலைகளை எதிர்காலத்தில் செய்யும் என்பதால்… மனிதனுடைய உடல் வலு தற்போது தேவைப்படும் அளவுக்கு தேவைப்படாது. எனவே, உடல் சிறுத்துவிடும். ( தொந்தி வயிறு இப்போது அதிகரித்து வருகிறது… பேந்து எப்படி உடல் சிறுக்கும் என்று டவுட் வரலாம்… இது இப்போது உடனே ஏற்படப்போகும் மாற்றமில்லை…

சில வேளை எதிர்காலத்தில்…
இ ப்போது, விண்வெளி வீரர்கள் பாவித்துவரும்… சத்து மாத்திரைகள், சாதாரணபாவணைக்கு வந்தால், தேவையில்லாத தொந்தி வர வாய்ப்பில்லை… ) இதற்கும்… ஏலியன்ஸிக்குமிடையிலான தொடர்பினை ஜோசித்து பாருங்கள்… ( அடுத்த பதிவில் தொடர்பினை எழுதுகிறேன்…)...

இனி நாம்… ஏலியன்ஸ் சம்பந்தமானதை பார்ப்போம்… ஏலியன்ஸ் தொடர்பான பிரலமான சம்பவங்களை முதலில் பார்ப்போம்…

( சம்பவங்களில் சம்பந்த பட்டவர்களின் பெயர்கள் நினைவில்லை…

அமெரிக்காவில்… ஏதோ ஒரு பிரதேசத்தில்… ஒரு கன்னிப்பெண்னின் நடவடிக்கையில் மாற்றமேற்படவே… அவளது பெற்றோர், அவளை டொக்டரிடம் அழைத்துச்சென்றார்கள். அவளை பரிசோதித்த டொக்டர்ஸ் அவள் கர்ப்பம் அடைந்து இருப்பதை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், அப் பெண்ணோ அதனை அடியோடு மறுத்தால்… மேலும்… பெண்ணின் நடத்தையிலும் சில மாற்றங்கள் தென்படவே… டொக்டர்கள் அவளை ஹிப்னாடிஸத்துக்கு உட்படுத்த முடிவெடுத்தார்கள்.... 

ஹிப்னாடிஸத்தின் போது… அப்பெண் சொன்ன விடையங்கள் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது…. அவள் சொன்னதன் சுருக்கம் இது தான்…. 

ஒரு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் தனியாக வீட்டிலிருந்த போது… ஜன்னலடியில் ஏதோ சத்தம் கேட்பதாக உணராவே, ஜன்னலோரமாக சென்று பார்த்தேன். அங்கு சில குள்ளமான…ஒல்லியான…. பெரிய தலையுடைய மனிதரை ஒத்த உருவங்கள்… வீட்டை நோக்கு வந்துகொண்டிருந்தது. நான் வீட்டை தாள்பால் போட்டு விட்டு… உள்ளேயே இருந்தேன்… அவர்கள், கதவை திறக்காமலே உள்ளே வந்து… என்னை நோக்கி ஏதோ செய்துவிட்டு… என்னை அவர்கள் வந்த வாகனத்துக்குள் அழைத்து சென்றார்கள். பின்னர்…. எனது உடலில் ஏதேதோ சோதனை நடத்தினார்கள். இறுதியில்… நான் எங்கு இருந்தேனோ அங்கேயே இருந்தேன்…. இது தான் அப்பபெண் சொன்னது…. உடனெ இத்தகவல்… யு.ஃப்.ஓ இக்கு அறிவிக்கப்பட்டு பதுவு செய்யப்பட்டது. 6,7 மாதங்களில்… இன்னொரு பெருமதிர்ச்சி ஏற்பட்டது… அது என்ன என்பதையும்…மேலும் சில சம்பவங்களையும்… அடுத்த பதிவில் பார்ப்போம்… :)...

PART -4
நான்காம் பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள் ...

Wednesday, August 27, 2014

ஏலியன்ஸ் 01 – 4D யும் தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் (theory or relativity)

ஏலியன்ஸ் 01 –  4D யும் தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் (theory or relativity)

ஏலியன்ஸ் என்கிற வேற்றுகிரகவாசிகளை பற்றிய இந்த தொடரை எழுதிய சகோதரர் சந்திரன் பிரபு அவர்களுக்கு ரஹ்மான்ஃபாயட் தளம் சார்பாக மிக்க நன்றி. இத்தொடர் வரும் வேற்றுகிரகவாசிகளை பற்றிய சம்பவங்களை, நீங்களே சிந்தித்துகொள்ங்கள், பகர்வது மட்டுமே என் வேலை, உங்கள் சகோதரன் ரஹ்மான்./....

அன்றும் இன்றும் ஒரு மர்மமாகவும் பரவலாகப்பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு விடையம் “ஏலியன்ஸ் ‘aliens) ” எனும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றியதாகும். அவ் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய முழு ஆய்வாக அமைய இருக்கிறது இந்தப்பதிவு. ஏலியன்ஸ் பற்றி பார்க்க முதல் பரிமாணம் பற்றிப்பார்த்தாக வேண்டும்.


பரிமாணம்(dimensions) எனும் போதே… ஐன்ஸ்டைன் (einstein) எனும் மாமேதையையின் “தியரி ஒஃப் றிலேட்டிவிடி ( theory or relativity) ” தொடர்பாக பார்க்க வேண்டியது முக்கியமானதாகும். எனினும்… அதற்கு முன்னர் பரிமாணம் என்பது தொடர்பாக சின்னதொரு அறிமுகத்தை பார்க்கலாம்.

தற்சமயம்…. நீளம், அகலம், உயரம் என்பனவே 3 பரிமாணங்களாக கொள்ளப்படுகிறது. அதாவது… 6 அறிவு படைத்த மனிதனால் உணரத்தக்கதாக உள்ள பரிமாணங்கள் இவையே. (இவற்றை விட காலம் ( டைம்) எனும் நான்காவது பரிமாணம் தியரி ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.) 


சினிமாதுறையில் மோஷன் எனப்படும் அசைவுடன் கூடிய தொழில் நுட்பம்… 4ம் பரிமாணமாக கருதப்படுகிறது..

இவற்றை விட இன்னும் பல பரிமாணங்கள் இருக்கலாம்( இருக்கும் )…. என்பது விஞ்ஞானிகளின் கருத்து. ஆனால், எமது அறிவினாலோ… அல்லது எமது தோற்றத்தாளோ அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்பதே… உண்மை. சரி… நாம் எம்மால் உணர முடியாத பரிமாணங்களை விடுத்து. 


தியரி றீதியிலாவது ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் எனும் பரிமாணத்தை
 ( ஐன்ஸ்டைனால் வெளியிடப்பட்டது.) பற்றி முதலில் பார்ப்போம்.

( காலம் தொடர்பாக விளக்குவது கடிணமானதாக உள்ளது...  தெளிவாக விளக்க தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டம் மூலம் விளக்கவும். பிளீஸ்…)... 
ஒரு மனிதன் ஒரே தூரத்தை நடந்து கடப்பதுக்கும்… காரில் கடப்பதுக்கும்… ரெயினில் கடப்பதுக்கும் வித்தியாசமுள்ளது. நடப்பதை காட்டிலும் ரெயினில் பயணிக்கும் போது நேரம் மிச்ச படுத்தபடுகிறது. நடக்க 1 மணி நேரம் எனின்… ரெயினில் 5 ஓ 10 ஓ நிமிடம்தான் எடுக்கிறது. 


எனவே, இரு இடங்களுக்கிடையே தூரம் வித்தியாசபட வில்லை. காலம் வித்தியாசப்படிகிறது. இதை ஐன்ஸ்டைன் சிம்பிலாகவும்… சுவாரஷ்யமாகவும் கூறியுள்ளார்.

அதாவது… ஒரு காதலன் தனது காதலிக்காக வெயிட் பண்ணும் போது… 1 நிமிடம் என்பது மிகப்பெரிய காலப்பகுதியாக தோன்றுகிறது. அதே, காதலி வந்ததும்… அந்த 1 நிமிடம் ஒரு மிக சிறிய விரைவாக கடந்துவிடும் பகுதியாக தோன்றுகிறது. ( இதை தான் நமது கவிஞர்களும் திரைப்பட பாடல்களில் அடிக்கடி பயன்படுத்துவார்கள்… உன்னை காணாத நொடி யுகம் என்றும்… கண்டா யுகம் நொடி என்றும் ஓவர் பில்டப் கொடுப்பாங்க…).

( இதற்குமேல் என்னால் விளக்க முடியவில்லை… 


சரி… இனி தியரி ஒஃப் ரிலேட்டி விட்டியில் ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் என்பதை எனக்கு விளங்கிய (???) வகையில் சொல்ல ரைபண்ணுறன். தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டி... 

—————————————————————————————– 


அதாவது ஒளியின் வேகத்தில் (3*10^8 மீட்டர்/ செக்கன் அல்லது 3 ம் 8 சைபரும் ) எம்மால் பயணிக்க கூடியதாக இருந்தால்… எம்மால் இறந்த காலத்துக்கு செல்ல முடியும். அதாவது… தற்போது 2010 ஆம் ஆண்டு எனின்… நாம் ஒளியின் வேகத்தில் பயணிப்போமானால்… 2000… 1990… அப்படியே எமது இறந்த காலத்துக்கு செல்லலாம். இது நான் விளங்கி கொண்டது மட்டுமே.... 

(இதே தியரியில் மறை வேகம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அது என்ன வென்றே விளங்கல… விளங்கினவங்க சொல்லித்தாங்க…) ஆனால்… என்னை பொறுத்த வரையில்… ஒளியின் வேகத்தில் (சரியாக) பயணிக்கும் போது எம்மால் பின்னோக்கி செல்ல முடியாது. ஆனால், எமக்கு காலம் ஓடும் வேகம் 0 ஆக இருக்கும். அதாவது… வெளியுலகத்தாருக்கு… காலம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது. 2010 இல் நாம் ஒளியின் வேகத்தில் புறப்பட்டோம் எனின். 10 வருடத்தின் பின்னரும் நாம் அதே 2010 இல் தான் இருப்போம். 


ஆனால்… மற்றவர்கள் 2020 இக்கு போயிருப்பார்கள். ( ஸபா… நினைக்கவே கண்னக்கட்டுது… என்னன்டு தான் அந்த மனுசன் ஜோசிச்சுதோ…)


ஆனால்… நாம் ஒளியின் வேகத்தை தான்டி… ( 3*10^8 ஐ மிஞ்சி) பயணிக்கும் போது… நாம் இறந்த காலத்துக்கு போவது சாத்தியம்… 2010 இல் வெளிக்கிட்டோமானால்… 2009 இக்கோ… 1800 இக்கோ நாம் போகலாம்… அது நாம் ஒளியின் வேகத்தை விட எவளவு அதிகமான வேகத்தில் பயணிக்கிறோமோ என்பதை பொறுத்தது. 10 வருடகாலப்பகுதியிலோ அல்லது சில மணிப்பொழுதிலோ நாம் இறந்த காலத்திற்கு போகலாம்… ஆனால் நாம் பயணிக்கும் வேகம் தான் முக்கியமானது.... 

நாம்… தற்சமையம் மக்ஸிமம் 70,220 மீட்டர்/ செக்கன் ஐயே அடைந்துள்ளோம் இதுவும் இறுதிவேகம் தான்… சராசரிவேகமல்ல. ( Helios 2). இது கூட மனிதன் பயணிக்க உகந்ததல்ல… சாதாரணமாக மனிதனுக்கு உகந்ததாக 900 கிலோமீட்டர்/ ஹவர் தான் தற்சமையம் உள்ளது என நினைக்கின்றேன். (Airbus A380.). ஆகவே… எமது வாழ்னாளில் நாம் பின்னோக்கி பயணிப்பது சாத்தியமே இல்லை.

( பேந்து ஏன் இதை எழுதுராய்… என சிலர் கேட்பார்கள்… ஹி… ஹீ…. நான் இந்த தியரியை வைத்து தான் எல்லாத்தையும் சொல்ல ரைபண்ண போறன். அதுக்கு தான் இதை சொன்னன். ஆனால், எழுதுறதுல ஒரு இடத்துலயும் பொய் என்றோ… லொஜிக் இல்லாமல் இருக்கு என்றோ நீங்கள் நினைக்கும்படி எழுத மாட்டன்… )..

சரி… இன்னும் நான் சொன்ன தலைப்புகளினுள் புகவில்லை…
www.rahmanfayed.blogspot.in

அதால… முதலாவதாக… ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் சம்பந்தமாக ஆராய்வோம் (???)… இந்த பிரபஞ்சத்தில் எம்மை தவிர வேறு உயிரினங்கள் இல்லை… பூமியில் மட்டும் தான் உயிரினம் வசிக்கிறது…. என நாம் நினைப்பது .சின்னப்பிள்ளைதனமானது. 

இந்த மிக பிரமாண்டமான பிரபஞ்சம் இக்குணூண்டு அளவுள்ள எமக்காக (பூமிக்காக) மட்டும்தான் படைக்க (???) பட்டது என நினைப்பது எவளவு முட்டாள் தனமானது. ஆகவே… எம்மை தவிர வேற்று கலக்ஸிகளிலும்… நட்சத்திர குடும்பங்களிலும்… உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழும்.... 
http://rahmanfayed.blogspot.in/2014/08/blog-post_89.html

இங்கு சிலருக்கு ஒரு கேள்வி எள‌லாம்… எமது விஞ்ஞானிகள் பிரபஞ்சத்துக்கு ஒரு சமிக்ஞை (சிக்னல்) அனுப்பினார்களே… அதுக்கு ஏன் பதில்… அல்லது ரியாக்ஷன் வரல… என்ற கேள்வி எலலாம். ஆனால்… அங்கு தான் ஒரு பெரிய சிக்கலே இருக்கிறது… வேற்று கிரக வாசிகளும் எம்மை போன்றே அதே 3 பரிமாணங்களை கொண்டு இருப்பின் மட்டுமே… அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியும். அடுத்து அவர்களின் தொடர்பாடல் முறை நமது கருவிகளால் உணரப்பட வேண்டுமே!!! 

எனவே, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்பது பொய்… 

ஆனால்… 

நாம் கூறிக்கொண்டு இருக்கும்… ஏலியன்ஸ் யார்… வேற்று கிரக வாசிகள்தானா??? அல்லது…...  நாம்  தானா ???

பதில் இரண்டாம் பக்கத்தை  <<கிளிக்>> செய்து  பார்க்கவும் ...

பார்ட் - 2.

ஏலியன்ஸ் 02 - காலப்பயணமும் தியரி ஒஃப் ரிலேட்டிவிடியும்.

ஏலியன்ஸ் 02 - காலப்பயணமும் தியரி ஒஃப் ரிலேட்டிவிடியும்...

PART -1

ஏலின்ஸ் முதல் பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள்

போன பதிவில் 4ம் பரிமாணமாக கருதப்படும் காலம் தொடர்பாக பார்க்கையில்… அப்பரிமாணத்தை அறிமுகப்படுத்திய ஐன்ஸ்டைனின் தியரி ஒஃப் ரிலேட்டிவிடி தொடர்பான சில கருத்துக்களையும் எழுதியிருந்தேன். —————————————————————————–
முக்கியமாக, கூறியிருந்தேன்… ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது… நாம் இறந்தகாலத்துக்குதான் செல்ல முடியுமென… ஆனால், நண்பர் ஒருவர் … இல்லை எதிர்காலத்துக்குதான் செல்ல முடியுமென தனது கருத்தை கூறியிருந்தார். (நிரூபிக்க பட்ட உண்மை என கூறியிருந்தார்… ) நான் நெட்டில் அது சம்பந்தமாக (மேலோட்டமாக) தேடிய வரையில்… அப்படி எதுவுமே நிரூபிக்க படவில்லை.

ஆனால், காலம் மாறுபடும் என்பது நிரூபிக்க பட்டுள்ளது (time travel theory). ஒரே முறையில் செய்யப்பட்ட இரு கடிகாரங்களை ஒப்பிட்டு நிரூபிக்கப்பட்டது. அதாவது,
ஒரே மாதிரியான இரு கடிகாரங்களில்

 ( பொறிமுறைக்கடிகாரமல்ல) ஒன்றை, ஒரு விண்கலமொன்றினுள்ளும் இன்னொன்றை ஆய்வு கூடத்திலும் வைத்து… விண்கலத்தை பூமியை வேகமாக ( ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக குறைவானதே…) சுற்ற செய்த போது… பல சுற்றுக்களின் பின்னர், மணிக்கூட்டின் வாசிப்பில் ஒரு சிறு வித்தியாசம் இருந்தது. இது தான் தற்சமையம் பெளதீக ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

இங்கு போட்டுள்ள படங்கள்… நெட்டில் தியரி ஒஃப் ரிலேட்டிவிடி பற்றி தேடிய போது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக பட்ட படங்கள்… இதில் படம் மூலமாகவே அடிப்படை தியரி விளக்கப்பட்டுள்ளது.(!?)...

















—————————————————————————–
போன பதிவில் கூறிய… மனிதனால், விண்வெளியை நோக்கி விடப்பட்ட சவால் இது தான்…....

—————————————————————————–




—————————————————————————– 
இன்றைய மனிதனின் உருவம்… பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னான மனித உருவிலிருந்து வேறுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும். தொல்பொருள் ஆய்வாலர்களால் கண்டெடுக்கப்பட்ட பழைய எலும்புக்கூடுகளை பார்க்கு போது… வாய் பகுதி நீண்டதாகவும்… கீழ்த்தாடை தடித்ததாகவும்… கைகள் நீண்டதாகவும்… காணப்பட்டுள்ளது. காரணம், அன்றைய சூழ்னிலையில் அவ் மனிதன் வேட்டையாட மட்டுமே தெரிந்து இருந்தான். எனவே, வேட்டையாடுவதற்கு ஏற்றவாறு நீண்டகைகளும்… உணவை ( பச்சை) சிரமமின்றி உண்பதற்கு ஏற்றவாறு நீண்ட தாடையும் இருக்கின்றன.... 


பின்னர், காலம் செல்ல செல்ல மனிதன் அறிவை பயன் படுத்தி உணவை பதப்படுத்தி உண்ண தொடங்கியதும்… அந்த நீண்ட வலுவான தாடைகளின் அவசியம் அற்றுப்போனது. அதேபோல், வேட்டையாடுவதிலிருந்து பயிச்செய்கைக்கு மாறிய போது… கையின் பாவணையும் கணிசமான அளவுக்கு குறைந்து இருந்தமையால்… அதனது நீளமும் சற்று குறைந்தது. 

ஹீ…ஹீ… என்ன சம்பந்தமில்லாமல் இருக்குதே என்று நினைக்க வேணாம். சம்பந்தத்தோடதான் எழுதி இருக்கேன். என்ன சம்பந்தம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்…... 

முன்றாம் பாகம் படிக்க இங்கே  <<கிளிக்>> செய்யவும்....