Tuesday, September 24, 2019

ஓடாதிருக்கும் எஸ்கலேட்டரில் ஏற தடுமாறுவது ஏன்?

ஓடாதிருக்கும் எஸ்கலேட்டரில் ஏற தடுமாறுவது ஏன்?

வெகு ஜனங்கள் நின்று போய்விடும் நகரும் படிகட்டுகளில் (எஸ்கலேட்டர்) ஏறுவதற்கு தடுமாறுவதை பார்க்கிறோம்.

அதே போல புதிதாக அதில் ஏறுவதற்கு பெண்கள் உள்ளூர பயப் படவும் செய்கிறார்கள். (முக்கியமாக சேலை அணிந்திருப்பவர்கள்). குழந்தைகள் இதை பழகிக் கொண்டால் அதில் போய் வருவதையே கொண்டாட்டமாக உணர்கிறார்கள்.

நாலஞ்சு தடவை அதில் ஏறி இறங்கி பழகி விட்டால் மூளை அதன் இயக்கத்தை அனுமானித்து விடுகிறது பதிவும் செய்து வைக்கிறது.

சரி ஓடிக் கொண்டு இருக்கும் எஸ்கலேட்டர் நின்றிருக்கிறது அதில் மேலே ஏற முயற்சிக்கிறீர்கள் தடுமாற்றம் ஏற்படுகிறது ஏன்?

காதுக்குள் இருக்கும் நுண்ணிய நரம்பு முடிச்சு எதிர் பாராத உடல் தகவமைப்பை மூளைக்கு உணர்த்தும் வேலையை செய்கிறது.  நின்றிருக்கும் எஸ்கலேட்டர் என்பதை அதில் ஏறி முடிக்கும் வரை பல தடவைகள் மூளை சூழ்நிலையை கால்களுக்கும் உடல் இயக்கத்திற்கும் உணர்த்திக்கொண்டே இருக்கும்.  (ஸ்டீல் படிகள், வடிவமைப்பு இப்படி). இதன் காரணமாகவே சாதாரணமாக படிகளில் ஏறுவதற்கும் நகரும் படியில் ஏறிச் செல்வதற்கும் தடுமாற்றம் ஏற்படுகிறது.  இதை உள்ளுணர்வு தடுமாற்றம் (ஆங்கிலத்தில் "Broken escalator phenomenon" ) என்று சொல்லலாம்.

இங்கிலாந்து இம்பீரியல் காலேஜில் 2004ல் இது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப் பட்டதில் (ஓட ஓட நிறுத்தி) சுமார் 20 யோசனைகளுக்குப் பிறகே சாதாரணமாக மூளை இது இயங்காத "படி" நிற்காமல் நடக்கலாம் என்பதை உணர்த்துவதாக அறியப்பட்டது.

இந்த தடுமாற்றம் யாவருக்கும் பொதுவானதே.

மெடிட்டேரியன் கடல்கொள்ளப் பட்ட புராதன எகிப்திய நகரம்


மெடிட்டேரியன் கடல்கொள்ளப் பட்ட புராதன எகிப்திய நகரின் இடிபாடுகள் அகழ்வாறாய்ச்சியாளர்களால் கிளரப்பட்டன.  மண்மூடி போயிருந்த ஹெரசெலியன் (Heracleion) புராதன எகிப்திய துறைமுகப் பகுதியில் சிலைகளும்தங்க 
தகடுகளும் கண்டுபிடிக்கபபட்டன.

பிரெஞ்சு கடலடி ஆராய்சியாளரான டாக்டர்ப்ரெங் கோடியோ(Dr.Franck Goddio, European Institute) மற்றும் அவரது குழுவினர் 2000 ல்  நடத்திய ஆய்வில்  கடலின் அடி மட்டத்தின் கீழாக 30 அடியில் அபெளகிர் குடா (அலெக்ஸாண்டிரியாபகுதியில் சிலைகள் புதைந்திருப்பது கண்டறியப் பட்டது.

அதை தொடர்ந்து கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப் பட்ட ஆய்வின் பின் கிடைத்த தகவல்கள்இந்த இடமானது (Thonis-Heracleion)  உலக அளவிய துறைமுகம் மட்டுமல்லமத சம்பந்தமான முக்கிய பகுதியாகவும் 
இது இருந்திருக்க வேண்டும் என்பது உறுதி படுத்தப் பட்டது.
                                                              tks to Huffworldpost
கண்டெடுக்கப் பட்ட பொருட்கள் : 
64 உடைந்த  கப்பல் களின் பகுதிகள், 700 நங்கூரங்கள்தங்க காசுகள்பிரம்மாண்ட கல்வெட்டுகள்(எகிப்திய மற்றும் கிரேக்கஇவை  உலக வணிக மையம் என்பதற்கான ஆதாரங்கள்.

இவை தவிர 16 அடி உயர சிலைகள் கோவில் இருந்திருக்கும் என கருதப் படும் பகுதியில் இருந்துசுண்ணாம்பு படிமமாக மாறிப் போன பதப்படுத்தப் பட்ட (மம்மிகளை  போலவிலங்குகள் .
அலாவுதினுடைய அற்புத விளக்கோ ?



எழுத்துக்கள் பொறிப்பட்ட தங்க தகடு



இதேபோல தமிழக கரைப் பகுதிகளிலும் கடல் கொள்ளப்பட்ட சங்ககால நகரமும் சிலைகளும் ,பொற்காசுகளும்இந்திய கடல் ஆராய்சியாளர்களால் கைப் பற்றப் படும் என நம்புகிறேன் (ஹையோ..சே.. பகல் கனவு !)


Friday, September 13, 2019

நாம் பயன்படுத்தும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து ஆச்சரியமான, அதிகம் தெரியாத, சுவாரசியமான விஷயங்கள்.

நாம் பயன்படுத்தும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து ஆச்சரியமான, அதிகம் தெரியாத, சுவாரசியமான விஷயங்கள்.

 ஒரு ரூபாய் காசு பார்த்திருப்பீர்கள். ஒரு ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு ரூபாய் நோட்டை அச்சடிப்பதற்கான செலவு அதிகமாக இருந்ததால் 1994 நவம்பர் மாதத்தோடு, ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தியிருந்தது.



 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரூபாய் நோட்டு சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த நேரத்தில் நாம் பயன்படுத்தும் நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து ஆச்சரியமான, அதிகம் தெரியாத, சுவாரசியமான விஷயங்களைப் பார்ப்போமா:
நாம் நினைப்பதற்கு மாறாக ரூபாய் நோட்டுகள் காகிதத்தால் ஆனவை அல்ல. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் பருத்தி, பருத்திக் கழிவால் உருவாக்கப்படுகின்றன.



   இந்தியாவில் 18-ம் நூற்றாண்டில் காகித ரூபாய் புழக்கத்தில் இருந்தது. அப்போது இந்துஸ்தான் வங்கி, வங்காள வங்கி, பம்பாய் வங்கி, சென்னை வங்கி ஆகிய நான்கு தனியார் வங்கிகள் காகித ரூபாய்களை அச்சிட்டு வெளியிட்டுவந்தன. 1861-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு மட்டுமே காகித ரூபாய்களை வெளியிடலாம் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டு தனியார் காகித ரூபாய்கள் தடை செய்யப்பட்டன.



  நாட்டின் அதிகாரபூர்வ முதல் காகித ரூபாயை மத்திய ரிசர்வ் வங்கி 1938-ம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்டது. அந்த 5 ரூபாயில் பிரிட்டன் மன்னர் நான்காம் ஜார்ஜின் படம் இடம்பெற்றிருந்தது.



  மத்திய ரிசர்வ் வங்கி இதுவரை அச்சிட்டதிலேயே அதிகபட்ச மதிப்புகொண்டது 10,000 ரூபாய் நோட்டு. அது 1938, 1954-ம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டது. ஆனால், இடையில் 1946, 1978-ம் ஆண்டுகளில் இவை மதிப்பற்றவையாக அறிவிக்கப்பட்டன. 1934-ல் இயற்றப்பட்ட ரிசர்வ் வங்கிச் சட்டத்தின்படி 10,000 ரூபாய்க்கு மேல் காகித ரூபாய் நோட்டை அச்சிட முடியாது.




 மக்களின் பொதுப் புழக்கத்துக்காக 500 ரூபாய் நோட்டு 1987-ம் ஆண்டும், 1000 ரூபாய் நோட்டு 2000-ம் ஆண்டும் வெளியிடப்பட்டன.






1957-ல்தான் இந்திய நாணயங்கள் 100 பைசாக்களைக் கொண்ட ஒரு ரூபாய் என மாற்றப்பட்டது. அதற்கு முன் 16 அணாக்கள்தான் ஒரு ரூபாய். ஒரு அணா என்பது 4 பைசாக்களுக்குச் சமம்.



  75, 150, 1000 ரூபாயிலும் நாணயங்கள் இருக்கின்றன தெரியுமா? 2010-ம் ஆண்டில் பல்வேறு நினைவு நாட்களைக் கொண்டாட மேற்கண்ட மதிப்புகளில் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இவை பொதுப் பயன்பாட்டுக்கானவை அல்ல.


ரிசர்வ் வங்கியின் 75-வது ஆண்டு விழா, ரவீந்திரநாத் தாகூரின் 150-வது ஆண்டு விழா, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் 1000-வது ஆண்டு விழாக்களை கொண்டாடும் வகையில் இந்த நாணயங்கள் வெளியாயின. நாணயம் சேகரிப்பவர்கள், நாணயச் சாலைகளுக்கு விண்ணப்பித்து இவற்றை வாங்கிக்கொள்ள முடியும்.



  
2011-ம் ஆண்டு நாணயச் சட்டத்தின்படி 1000 ரூபாய் வரையிலான மதிப்பில் நாணயங்களை வெளியிடலாம்.


  ஒவ்வொரு ரூபாய் நோட்டின் இடது கைப் பக்கத்தில் தூக்கலாகச் செதுக்கப்பட்ட ஏதாவது ஒரு வடிவம் இருக்கும். ஆயிரம் ரூபாயில் வைரம், 500 ரூபாயில் வட்டம், 100 ரூபாயில் முக்கோணம், ரூ. 50-ல் சதுரம், ரூ. 20-ல் செவ்வகம், ரூ. 10-ல் எந்த வடிவமும் இருக்காது. இந்த வடிவங்களைத் தடவிப் பார்த்தே பார்வையற்றவர்கள் ரூபாயின் மதிப்பை அறிகிறார்கள்.




    நாசிக் (மகாராஷ்டிரம்), தேவாஸ் (மத்திய பிரதேசம்), மைசூர் (கர்நாடகம்), சல்பானி (மேற்கு வங்கம்) ஆகிய நான்கு இடங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சிடும் அச்சகங்கள் உள்ளன.
DEWAS
மும்பை, நொய்டா, கொல்கத்தா, ஹைதராபாத்தில் உள்ள நாணயச் சாலைகளில் நாணயங்கள் உருவாக்கப்படுகின்றன.எந்த நாணயச் சாலையில் நாணயம் உருவாக்கப்படுகிறது என்பதற்கு அடையாளமாக நாணயத்தில் ஆண்டுக்குக் கீழே டெல்லி என்றால் புள்ளி, மும்பை என்றால் வைரம், ஹைதராபாத் என்றால் நட்சத்திரம், கொல்கத்தா என்றால் எந்த அடையாளமும் இன்றி இருக்கும்.
   

நாடு விடுதலை பெற்று பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது, பிரிட்டிஷ் இந்திய ரூபாய் நோட்டுகளின் மீது பாகிஸ்தான் என்று முத்திரையிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது. 1948-ல்தான் புதிய ரூபாய் நோட்டுகள், நாணயங்களை பாகிஸ்தான் வெளியிட்டது.


பயன்படுத்த முடியாத பழைய ரூபாய் நோட்டுகள் என்ன செய்யப்படுகின்றன என்று தெரியுமா? பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்துப் புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி சேகரித்து, அவற்றைத் துண்டு துண்டாக்கி, பந்தைப் போல மாற்றி, தேநீர்க் குவளை மூடிகள், பேப்பர் வெயிட், பேனா ஸ்டாண்ட், கீ செயின் போன்றவை செய்யப் பயன்படுத்துகிறது.



டெமோன்டேஷன்

நவம்பர் 8, 2016 ல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரவு 8:15 மணி அளவில் இந்தியாவின் 500, 1000 ரூபாய் தாள்கள் இனி செல்லாது என அறிவித்தார், கறுப்பு பணம் ஊழலை அழிப்பதற்கான நடவடிக்கை என அறிவித்தார்,(தற்போது இந்தியாவில் எந்த கறுப்பு பணமும் இல்லை {இந்தியா பணம் எல்லாம் கலர் பணமாக மாறிவிட்டது}, ஊழலும் {ஊழல் ஆளும் கட்சிக்கு மட்டும் செய்யலாம்} என்றாகிவிட்டது..


நவம்பர் 8 அரம்பித்த புதிய இந்தியா அன்றைய ஒரே நாளில் தங்கம் விலை பவுண் 40,000 ரூபாய் வரை உயர்ந்த்து, வங்கிகளில் வரிசையில் காத்து இருந்து பல இந்தியர்கள் உயிர் இழந்த்து வேறு கதை.

இரண்டாயிரம் ரூபாய் மைக்கிரோ சீப் இருப்பதால் பணத்தை பதுங்க முடியாது என்று பாஐக தலைவர் கூறியது கூறிப்பிடக்கது இது உண்மையா என்று சோதிக்க ஏழை குடிமகன் இரண்டாயிரம் தாளை கிளத்து காசை இழந்து சீப் இல்லாமல் தவித்து வேறு கதை..

டிமானிடேசன் ல் இனி கறுப்பு பணம் சேர்த்த அரசியல்வாதிகளும், பணக்கார்ர்களும் நடுதெருவில் நிற்பார்கள் என கூறிய சாமனியன் அன்று (2016 நவம்பரில. ஏடிஏம்ல் நின்றான், இன்று நடுதெருவில் வேலை இல்லாமல் நிற்கிறான்)
புதிய இந்தியா உருவான பின்பு, இந்திய ரூபாய் வண்ணமிக்க கலழ. பணமாக மாற்றி சாதித்தார் நரேந்திர மோடி


10 INR

20 INR

50 INR

100 INR

200 INR
500 INR

2000INR
நன்றி 
ரஹ்மான்பாயெட்