Thursday, April 13, 2017

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்படக்கூடாதுஇது நல்லதா ?கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்படக்கூடாதுஇது நல்லதா ?கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!


பறவைகளில் கழுகுகள் மிக சக்திவாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக்கூடியவை.அவற்றை வலிமை மற்றும் தைரியம்ஆகியவற்றின் சின்னமாகக்கருதுகின்றோம்.

ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகசசக்திகளும், வலிமையும், தைரியமும்பிறப்பிலேயே வருபவை அல்ல. அவைகழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக்கொள்ளப்படுபவை தான். குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக,பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள்பலவீனமாகவே இருக்கின்றன.அவை அப்படியே சுகமாகவும்,பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால்வலிமையாகவும், சுதந்திரமாகவும்மாறுவது சாத்தியமல்ல. எனவேகுஞ்சுகளாக இருக்கும் போது வேண்டியஉணவளித்து, பாதுகாப்பாகவைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள்பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறிவிடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும்படுக்கையினைக் கலைத்து சிறுகுச்சிகளின் கூர்மையான பகுதிகள்வெளிப்படும்படி செய்து கூட்டைசொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்துவிடுகின்றது.பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்துஇருக்கும் இடத்தை விட்டுச் செல்லத்தூண்டுகின்றது.தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாதகழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரைவந்து நிற்கின்றது.

அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின்வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும்உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்துமலைத்து நிற்கின்றது.அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப்பயணிக்க தைரியமற்று பலவீனமாகநிற்கின்றது.அது ஒவ்வொரு குஞ்சும் தன்வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒருமுக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையேதீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயேபாதுகாப்பாகத் தங்கி விடமுடிவெடுக்கலாம்.ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும்பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடியஇடமல்ல. சுயமாகப் பறப்பதும்இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப்பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவைஅறியும்.அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில்என்ன செய்வதென்று அறியாமல் வெளியேஎட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும்அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக்குஞ்சின் உணர்வுகளை லட்சியம்செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்துவெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில்கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப்பறக்க முயற்சி செய்கின்றது.முதல் முறையிலேயே கற்று விடும்கலையல்ல அது.குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்கமுடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும்நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன்குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சுமீண்டும் தாயின் பிடியில் பத்திரமாகஇருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன்குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப்பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக்கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டுவிடுகிறது.மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப்பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக்குஞ்சு உள்ளாகிறது.இப்படியே குஞ்சை வெளியே தள்ளிவிடுவதும், காப்பாற்றுவதுமாகப் பலமுறை நடக்கும்இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின்சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்றுவெளியில் பறக்கும் கலையையும்விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக்கொள்கிறது. அது சுதந்திரமாக,ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப்பறக்க ஆரம்பிக்கிறது.கழுகுக் குஞ்சு முதல் முறையாககூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின்பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கிநிற்கும்அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனைமுன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்தசுதந்திரத்தையும், ஆனந்தத்தையும்,தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சுதன் வாழ்நாளில் என்றென்றைக்கும்கண்டிருக்க முடியாது.பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினைவிட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளியபோது அது ஒருவிதக் கொடூரச்செயலாகத் தோன்றினாலும்பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும்யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப்பேருதவி என்பதை மறுக்க முடியாதுஒவ்வொரு புதிய சூழ்நிலையும்யாருக்கும் ஒருவித பதட்டத்தையும்,பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால்அந்தக் காரணத்திற்காகவே அந்தசூழ்நிலைகளையும், அனுபவத்தையும்மறுப்பது வாழ்வின் பொருளையேமறுப்பது போலத் தான்.கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான்அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம்.ஆனால் கப்பலை உருவாக்குவது அதைதுறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல.கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்திவைப்பதில் இல்லை.கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல,மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில்முதல் முதலில் தள்ளப்பட்டதைஎண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என்குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப்பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக்கொள்வேன்" என்று நினைக்குமானால்அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவேகூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகுசெய்ததாக சரித்திரம் இல்லைஅந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பலபெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்டகஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது"என்று சொல்லக்கூடிய பெற்றோர்களைஇன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில்கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போதுபெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொருகுழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம்இருந்ததில்லை. அதற்கான அவசியம்இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.ஆனால் இந்தக் காலத்தில் ஓரிருகுழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில்பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிகநல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்பதில் குறியாகஇருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால்தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள்குழந்தைகள் படக்கூடாது என்றுநினைக்கும் போது பாசமிகுதியால்அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின்பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத்தவறி விடுகிறார்கள்.அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம்செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும்நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும்என்று சொல்லவில்லை. வசதிகளும்,வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக்காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத்தான் இருக்கும்.இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின்பலனை பிள்ளைகளுக்கு அளிப்பதுஅவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களைபிள்ளைகள் படத் தேவையில்லைதான்.ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பானஅனுபவமும் என் பிள்ளை படக்கூடாது'என்று நினைப்பது அந்தப் பிள்ளையின்உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும்செயலே ஆகும்.வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சிலகசப்பான அனுபவங்களும் மனிதனுக்குஅவசியமானவையே.அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும்போது தான் அவன் வலிமை அடைகிறான்.அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப்பெற்றோர் நினைப்பது அவனுக்குவாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.சில கஷ்டங்கள் பிள்ளைகள்படும் போதுபெற்றோர்களுக்கு மனம் வருத்தமாகஇருக்கலாம்.ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பதுவாழ்க்கை அல்ல,வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல.

by
வாட்ஸாப் இருந்து வந்தவை