Sunday, October 28, 2018

பறவை மனிதன் சலீம் அலி

சலீம் அலி (1896-1987)


இந்தியாவின்  பறவை மனிதன் என்று அழைக்கப் பட்ட பெருமைக்கு உரியவர் சலீம் அலி. ஆதாரப் பூர்வமான் பறவைகளின் புள்ளி விவரத்தை பதிவு செய்த முதல் பறவையியல் விஞ்ஞானி இவர்.

சித்தப்பா அம்ருதீன் கொடுத்த துப்பாக்கியால் ("ஏர் கன்") ஒரு குருவியை சுடுகிறான் பத்து வயது சிறுவன் சலீம்  அடி பட்டு விழுந்த பறவையின் கழுத்து ஏன் மஞ்சளாக  இருக்கிறது என்று கேட்க அவர் அதை பற்றி தெரியவில்லை என்று சொல்லி W.S. மில்லார்டிடம் அழைத்து சென்று அறிமுகப் படுத்தினார். சிறுவனின் ஆர்வத்தை கண்டு வியந்த அவர் பாம்பே நேச்சுரல் கிஸ்டரி சொஸைட்டியின் (BNHS) ஹானரரி செக்ரட்டரி.

பின்னாளில் உயர் கல்வியில் விலங்கியல் பாடத்தை படித்து அதே சொஸைட்டியில் வருபவர்களுக்கு ஆர்வமுடன் பறவைகளை பற்றி விளக்கி சொல்லும் வேலை (அப்போது வயது 20) நிதி பற்றா குறையை காரணம் காட்டி அந்த வேலையும் பறி போனது.

கால சூழல் அவரை கிக்கிம் கிராமத்துக்கு விரட்டியது திருமணமான சலீம் பறவைகள் நிறைந்த அந்த கிராமத்தில் பெரும்பாலான நேரத்தை பறவை ஆராச்சியிலே செலவிட்டார்.  பறவை ஆய்வுக்காக பல இடங்களுக்கும் பயணமானார்.  துக்கணாங்குருவியை பற்றிய ஆய்வு கட்டுரை (1930) அவரை பறவை யியல் நிபுணராக்கியது.

இந்தியா சுதந்திர பெற்றதன் பின்பு, 100 ஆண்டு பழமை பெற்ற BNHSநிதி  நெருக்கடி காரணமாக மூடப்படும் சூழல் ஏற்பட்டது.  நேருவிடம் நிதி உதவி கேட்டு பெற்று மூடப்படுவதில்இருந்து  காப்பாற்றினார்.

1941 ல் "இந்திய பறவைகள்" [The Book of Indian Birds] என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அப் புத்தகம் நன்றாக விற்பனையும் ஆனது. பின்னாளில் டிலான் ரிப்ளே என்பவருடன் இணைந்து 10 வால்யூம்கள் கொண்ட புத்தகம் [Handbook of the Birds of India and Pakistan 1948 ] இந்திய பாகிஸ்தான் வாழிடப் பறவைகள் பெரிய அளவில் பேசப்பட்ட புத்தகம். இது  பறவைகள் பற்றிய விரிவான தகவல் புத்தகம்.  வீழ்ந்த குருவி  [ “The Fall of Sparrow”]  பறவைகளுடனான நேசத்தை பற்றி பேசும் புத்தகம்.

சலீம் அலி பறவை ஆராய்சியாளர் மட்டுமல்ல இயற்கையின் பாது காவலர். அவருக்கு கிடைத்த இண்டர்நேசனல் பரிசுத் தொகை (Golden Ark) 5 லட்சத்தை பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டிக்கு வழங்கினார்.  இந்திய அரசு அவருக்கு பத்மபூசன் விருது (1983)கொடுத்து பெருமைப் படுத்தியது.

அவர் ஆரம்பித்த பறவை ஆய்வு நிறுவனம்  SACON Salim Ali National Parkஇந்தியாவின் பல பகுதிகளில் செயல் பட்டு வருகின்றன [Port Blair, Mayabunder, (Andaman and Nicobar Islands); Singtam (Sikkim); Bharatpur (Rajasthan); Hyderabad (Andhra Pradesh); Upper Bhavani (The Nilgiris); Kukkal (Kodaikannal in TN) and Silent Valley National Park (Kerala)]

91ஆவது வயதில், பறவை நேசனின் உயிர் இவ்வுலகில் இருந்து  பறந்து விட்டது.


* * * * * * * * * * * * * * *  * *

இந்தியா சுமார் 1200 வகையான பறவை இனங்களின் தாயகமாக இருக்கின்றது. இது உலக அளவில் 12 % என்று சொல்லலாம். வட கிழக்கு இந்தியாவில் (சீன எல்லை)




கண்டறியப் பட்ட பாடும் பறவையான  ஜூத்ரா   சலீமலி ( "Himalayan Forest Thrush Zoothera salimalii")  2016 ல் பறவை இனங்களில் ஒன்றாக சேர்க்கப் பட்டது. 97 வகையான பறவையினங்கள் அழிவின் நிலையில் இருப்பதாகவும், அதில் 17 வகையான பறவை இனங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனவாம். இன்னும் பாதுகாக்கப் படவேண்டியவைகளின் பட்டியல் நீள் கிறது.

தற்போது இந்திய சினிமாவில் கலக்கி கொண்டு இருக்கும் 2.0  திரைபடத்தின் பிரதான கதாபாத்திரமான பக்‌ஷி ராஜான் சலீம் அலியின் பாத்திர படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது

பறவைகள் பல விதம் அதை  பற்றி அறிந்து கொள்ளுவோம்  வாருங்கள் இங்கே  <கிளிக்> செய்யுங்கள்  


பறவைகள் பல விதம்

No comments:

Post a Comment

welcome ur comment,