Friday, January 8, 2016

சித்தர்கள் கண்ணாடி..

சித்தர்கள் கண்ணாடி..



நூலினைக் கொண்டு கண்ணாடியை அறுக்கும் ஜாலம் பற்றி பார்ப்போம். இந்தத் தகவல் போகர் அருளிய "போகர் ஜாலவித்தை" எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல். அந்தப் பாடல் பின்வருமாறு...

கனத்தநல்ல கண்ணாடி யறுப்பதற்கு
கண்மணியே ரவையுமல்ல கல்லுமல்ல
வனத்தினிலே இருக்குமுடுக் கிலைதானப்பா
வண்மையா யதினுடைய ரசத்தைவாங்கி
இனத்துடனே வெள்ளை வுண்டை நூலைவாங்கி
இண்டான ரசத்தினிலே தோய்த்துர்த்தி
கனத்துடனே சனங்களுக்கு காட்டி நூலாம்
கண்ணாடி தனையறுக்கத் துண்டாய்ப்போமே.

முடுக்கி இலையின் சாற்றினை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதில் வெள்ளை உண்டை நூலை நன்கு ஊறவைத்து, நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்த நூலைக் கொண்டு கண்ணாடி அல்லது கண்ணாடி புட்டியை அறுத்தால் இரண்டு துண்டுகளாகி விடும் என்கிறார் போகர்.
 

திருமூலர் கூறுகிறார்.

எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வார் இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே”.

எட்டாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்தாலும், ஜோதியாக இருப்பவனைக் கண்ணால் காண முடியாது. அதே சமயம் நம்மை நாம் அறிந்து கொண்டால் மட்டுமே நம்முள் ஜோதி வடிவமாக இருக்கும் பரம்பொருளைக் காண முடியும். எப்படிக் கண்ணாடியில் தோன்றும் பிம்பத்தைக் கண்ணாடி வேறு, பிம்பம் வேறு என்று பிரிக்க முடியாதோ, அதுபோன்று நம்முள்ளே இரண்டறக் கலந்திருக்கும் ஒளி வடிவான பரம்பொருளை நம்மிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்று திருமூலர் கூறுகிறார்.


சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை.. 


காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். 
*எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. 
*மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், 
*முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய், 
*எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். 
*எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும். 
*எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது. 

பாலாவின் பார்வையில் கண்ணாடிப் பயிற்சி

ஆன்மீக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகச் சிறந்த தவ முறைகளில் ஒன்று கண்ணாடிப் பயிற்சி முறை

இத்தகைய கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில்பல்வேறு தரப்பட்ட மக்களால்பல்வேறுவடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறதுவருகிறது.

கண்ணாடிப் பயிற்சி முறை ஒரு மிகச்  சிறந்த தவமுறைகண்ணாடிப் பயிற்சியை ஒருவர் தொடர்ந்து செய்துவந்தால் 

அவருக்கு கீழ்க்கண்ட நிலைகள் ஏற்படுகிறது.,............

1.ஆன்மா விழித்துக் கொள்கிறது

2.ஆன்மா உடலிலிருந்து தனியாகப் பிரிந்து தனித்து இயங்கும் தன்மையைப் பெறுகிறது

3.ஜீவாத்மா , பரமாத்மாவுடன் இணைவதற்கான திறவுகோலைப் பெறுகிறது

மேலும் ஜீவாத்மா பரமாத்வுடன் இணைவதற்கான  ஒரு பாலமாக கண்ணாடிப் பயிற்சி முறை இருக்கிறது

கண்ணாடிப் பயிற்சி முறையை சுருக்கமாக ஞானத்திற்கான திறவுகோல் என்று சொல்லலாம்.

சூட்சுமமாக சொல்ல வேண்டுமென்றால் ஆன்மா ஒளி சூட்சும சரிரத்தில் ஏற்றி வைக்கப் படுகிறது

இதனை இன்னும் சூட்சுமமாக கீழ்க்கண்டவாறு சொல்லலாம்சூக்கும உடல் விழிப்புற்றுகரண உடல் ஜோதிமயமாகிறது

கடவுளை உண்மையாக அடைவதற்கான வாயில்களின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ,அதனை திறக்கும் திறவுகோலாக கண்ணாடிப் பயிற்சி முறை பயன்படுத்தப் பட்டு வருகிறது என்ற என்றஉண்மை பல பேருக்கு தெரிவதில்லை 
கண்ணாடிப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதற்கான வழிமுறைகளையும் பார்ப்போம்
  
கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

1.கண்ணாடிப் பயிற்சி செய்ய எடுத்துக் கொள்ளும் கண்ணாடி  ஒன்றே கால் அடி அகலம் இரண்டே கால் அடிஉயரம் இருக்க வேண்டும்

2.கண்ணாடியிலிருந்து ஒரு அடி அல்லது ஒன்றரை அடி தள்ளி அமர வேண்டும்

3.முழு உருவமும் தெரியும் படி அமர வேண்டும்

4.கண்ணாடிப் பயிற்சிக்கு பயன்படுத்தும் கண்ணாடியை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது மறைவாக ஒருதுணியால் மூடி மறைத்து வைத்து விட வேண்டும்

5.காப்பு மந்திரம் தெரிந்தவர்கள் காப்பு போடலாம் அல்லது உடல் கட்டு திக்கு கட்டு போன்ற கட்டுமந்திரங்களைச் சொல்லி விட்டு கண்ணாடிப் பயிற்சி செய்யலாம்

6.இதை அதிகாலை 03. 00 மணிமுதல் 08.00 மணி வரை செய்யலாம் அதிகாலை 03.00 முதல் 05.00 வரைசெய்வது உத்தமம்

கண்ணாடிப் பயிற்சி முறை உலகின் பல்வேறு நாடுகளில் பலவித நிலைகளில் செய்யப்பட்டு வருகிறது அதில்ஒரு சில  கண்ணாடிப் பயிற்சி முறைகளைப் பார்ப்போம்

கண்ணாடிப் பயிற்சி முறை 1
1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப் பார்த்துச் 
செய்ய வேண்டும்

2.பிறகு இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்

3.பிறகு நம் முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்

4.பிறகு கண்களை  மூடி உள்ளே பார்க்க வேண்டும்

5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்


கண்ணாடிப் பயிற்சி முறை 2


1.முதலில் இரண்டு கண்களையும் பார்க்க வேண்டும்

2.பிறகு நெற்றிக் கண்ணைப் பார்க்க வேண்டும்

3.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்

4.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்

கண்ணாடிப் பயிற்சி முறை 3

1.முதலில் நமது உடலில் வலது கண்ணைப்  பார்த்துச் செய்ய வேண்டும்

2.பிறகு தொண்டையைப் பார்க்க வேண்டும்

3.பிறகு முழு உருவத்தையும் பார்க்க வேண்டும்

4.பிறகு கண்ணை மூடி உள்ளே பார்க்க வேண்டும்

5.மேற்கண்ட வரிசைப் படி மூன்று அல்லது நான்கு முறை செய்ய வேண்டும்

இவற்றில் எந்த முறை சரி என்று உணர்ந்து அதை பயன்படுத்தி வந்தால் ஞானத்தின் திறவுகோல் நமக்குகிடைக்கும்.

கண்ணாடிப் பயிற்சியுடன் மந்திரம்

கண்ணாடிப் பயிற்சி செய்து வந்தால் வசிய சக்தி உண்டாகும்  இது கண்ணாடிப் பயிற்சியின் ஒரு பலன் தானேதவிர அதுவே முழு பலனும் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்

கண்ணாடிப் பயிற்சி செய்பவர்கள் கண்ணாடிப் பயிற்சியுடன் சேர்த்து எதை வசியப்படுத்த வேண்டும் என்றுநினைக்கிறோமோ அதற்குரிய வசிய மந்திரத்தை அறிந்து அதை உச்சாடணம் செய்ய வேண்டும்

கண்ணாடிப் பயிற்சியையும் வசிய மந்திரத்தையும் தொடர்ந்து செய்வதின் மூலம் வசியத்தை பெற முடியும்ஜக வசியம் முக வசியம் ராஜ வசியம் போன்ற பல்வேறு வசியங்களையும் பெற வேண்டுமானால் சர்வ சித்திதனாஉறர்ஸன சங்கல்பம் என்ற ஒரு மந்திரம் இருக்கிறது அந்த மந்திரத்தை உச்சாடணம் செய்து கண்ணாடிப்பயிற்சியையும் தொடர்ந்து செய்து வர சர்வலோகமும் வசியமாகும்


இங்கே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ,

சர்வ சித்தி தனாஉறர்ஸன சங்கல்பம் என்பது மந்திரம் ;

கண்ணாடி என்பது யந்திரம் ;

தந்திரம் என்ன என்பது தெரியவரும்போது தான் கண்ணாடிப் பயிற்சியின் சூட்சும வியம் நமக்குத் தெரிந்துவிடும்.

கண்ணாடிப் பயிற்சியுடன் போட்டோ

கண்ணாடிப் பயிற்சியுடன் கீழ்க்கண்ட முறையையும் செய்து வந்தால் பலன் தெரியும்

நம் போட்டோ ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும் அது தெளிவாகவும் முகம் முழுவதும் தெரியும்படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்

கண்ணாடிப் பயிற்சியை முடித்தவுடன் எடுத்துக் கொண்ட நம் போட்டோவின் வலது கண்ணை சிறிது நேரம்பார்த்து விட்டு வைத்து விட வேண்டும்

தொடர்ச்சியாக இதை செய்து வர வேண்டும் இந்த போட்டோவை வேறு யாரும் பார்க்காதவாறு மறைவாகவைத்திருக்க வேண்டும் 

எந்த செயல் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த செயலை வலது கண்ணைப் பார்த்து சொல்லிவிட்டு போட்டோவை வைத்து விட வேண்டும் 

இதே முறையில் தொடர்ந்து செய்து வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும் எண்ணிய காரியம்முடிந்தவுடன் அடுத்து நடக்க வேண்டிய செயலை நினைத்துக் கொண்டு போட்டோவைப் பார்க்க வேண்டும்

கண்ணாடிப் பயிற்சி செய்வதின் மூலம் பெறப்படும் பலன்கள் எல்லாம் குறைவேகண்ணாடிப் பயிற்சிஎளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாத கணக்கிலடங்காத அரிய பொக்கிங்களை தன்னுள் அடக்கிவைத்திருக்கிறது அதன் திறவுகோல் மறைத்து வைக்கப் பட்டிருக்கிறது திறவுகோலை கண்டுபிடியுங்கள்அரிய பொக்கிங்கள் உங்களுக்கு கிடைக்கும்
 

No comments:

Post a Comment

welcome ur comment,