Monday, September 17, 2012

முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா தகவல், மற்றும் [பேசும் படம் சில]

பேசும் படம் !!! 

முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா


மார்ச் 14 , நாளில் தான் முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரையரங்கில் 80 வருடங்களுக்கு முன் திரை இடப்பட்டது.  இந்தப் படம் தான் இந்திய திரை இசையின் முன்னோடி எனக் கூறலாம். ஆலம் ஆரா அர்தேசர் இராணி என்பவரால் இயக்கப்பட்டது, இது ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய ஒரு பார்சி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். 2  மணி நேரமும் 4  நிமிடங்களும்  ஓடக் கூடிய இந்த படத்தில் வித்தல், ஜுபைதா, L .V . பிரசாத் மற்றும் பிரித்திவி ராஜ் கபூர் நடித்துள்ளனர். 
 did
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்ப்பை பெற்றது, மேலும் வாசிர் முஹம்மது கான் பாடிய தே தே குதா கே நாம் பர் என்ற பாடல் இந்தியாவின் முதல் சூப்பர் ஹிட் பாடல் என்ற அந்தஸ்தையும் பெற்றது. ஒலிப்பதிவில் இரைச்சலை தவிர்ப்பதற்காக  இந்தப் படம் பெரும்பாலும் இரவிலேயே படமாக்கப்பட்டது, மைக்ரோ போன்களை காமெரா கோணத்தில் அமையாதபடி வைத்து ஒலிப்பதிவு செய்தனர்.  
இந்தப் படத்தின் பிரதி இப்போது இல்லை. கடைசி பிரதி 2003 புனேயின் திரைப்பட ஆவணக் காப்பகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தின் போது அழிந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முன் தகவல்   தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஆலம் ஆரா படத்தின் எந்தப் பிரதியும் தேசிய ஆவணக் காப்பகத்தில் இல்லை என்பதை தெரிவித்தது. இந்தியா முழுவதும் தேடும் பனி தொடங்கியது இருப்பினும் இதுவரை இந்தியாவின் முதல் பேசும் படத்தின் ஒரு பிரதியும் கிடைக்கப் பெறவில்லை.
இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா இந்திய வரலாற்றில் பேசாமல் தன் இருத்தலை நமக்கு உணர்த்துகிறது…

 

பேசும் படம் சில இங்கே...



city occupy forest, nature go to end.



 
அடுத்தவர்களின் பசியே உணருவோம் பசித்தவர்களுக்கு உணவு அளிப்போம்.




 


Photo: இதைப் படிங்க முதல்ல.. 1 கொசுவர்த்தி = 100 சிகரெட் ! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்த செய்தி சமூக இணையங்களில் உலாவரும் வாசகர்களுக்கு ஒரு பரிச்சயமான விடயமாக இருந்தாலும் நாம் இங்கு அதைப்பற்றிய ஒரு விரிவான கட்டுரையையே உங்களுக்கு தந்து இருக்கிறோம். ஒருமுறை வாசித்து பாருங்க..

சுத்தமில்லாத காற்றால் தன்னை நிறைத்துக்கொண்டு,அவதிப்படும் சுற்றுபுறத்திற்குள் சிக்கிகொண்டு அரோக்கியத்தை இழந்து வரும் நவீனமயமாகி
விட்ட நம்மை அதிர்ச்சியூட்ட இன்னுமொரு செய்தியை புதிய அராய்ச்சி வெளியிட்டுள்ளது.

கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமமான பாதிப்பை ஏற்படுத்துகின்றனவாம்....தொடர்ந்து படியுங்கள்...

சென்னையிலுள்ள தேசிய தொற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகளால் ஏற்படும் நோய்களை பற்றி ஆராய்ச்சி ஒன்றை நடத்தியது இதில் கொசுக்களை விரட்ட நாம் பயன்படுத்தும் சுருள்கள் வெளியிடும் புகையால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்ற ஆராய்ச்சியும் ஒன்று.

கொசுவை விரட்ட பெரும்பாலான (96 % )மக்களால் பயன்படுத்தப்படும் ,நாம் தூங்குகின்ற வேளையில் நம்முடனே குறைந்தது ஏழு மணிநேரமாவது இருக்கும் இந்த கொசுவர்த்திகள் வெளியிடும் புகை இவ்வளவு தீமைகளை பரிசளிக்க கூடியது என்று நாம் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம்.

ஆனால் அது வெளியிடும் புகை நூற்றுகணக்கான சிகரட்டுகள் வெளியிடும் புகையினால் வரும் பாதிப்பை தருகிறது என்று அந்த ஆராய்ச்சி தன் முடிவை சொல்லி நமக்கு அதிர்ச்சி தருகிறது.அதிலும் மலேசிய மற்றும் சீன கொசுவர்த்தி சுருள்களில் இருந்து வெளியாகும் புகை 134 சிகரெடுகளுக்கு சமமான தீங்கை தருகின்றனவாம்..!

கொசுவர்த்திகளில் என்ன உள்ளது?

நச்சு புகையை வெளியிடும் அளவிற்கு இந்த சுருள்களில் என்ன பொருட்கள் உள்ளன என்று நாம் இணையத்தை ஆராய்ந்த போது...

கொசுவர்த்தி தயாரிக்க தேவையான பொருட்கள்:

1.பைரத்ரின்(Pyrethrins)

2.மரத்தூள்

3.தேங்காய் ஓட்டு கரி

4.தூபப்பொடி (அல்லது ) சமித்து பிசின்) (joss powder).

5.கலப்பிகள் (Binders)

6.நைட்ரேட்கள் (Nitrates)மற்றும்

7.சேர்ப்பு பொருட்கள்(additives)

கொசுவர்த்தியின் மூலப்பொருட்களில் கொசுவை விரட்ட பயன்படும் முக்கிய பொருள் பைரத்ரின் எனும் ரசாயனம்.இது சாமந்திப்பூவிலிருந்து(chrysanthemum) பெறப்படுகிறது.இது தாவரங்களின் மூலம் கிடைக்கும் பொருள் தான் என்பதால் இதனால் மனித குலத்திற்கு தீமைகள் குறைவு தான்.ஆனால் இது மீனினங்கள் மற்றும் பூச்சியினங்களை செயலிழக்க செய்யும் தன்மை உடையது.

கொசுவை விரட்ட தேவையான இந்த பைரத்ரின் சாதாரணமாக புகையை வெளியிடும் அளவு எரியாது,எரிந்தாலும் நீண்ட நேரம் வராது,மேலும் எளிதில் சிதைவுறும் தன்மையுடையது.

இதை நீண்ட நேரம் புகைய வைக்க இதனுடன் சேர்க்கப்படும் மேலே குறிப்பிட்டிருக்கும்(மேலே குறிப்பிட்டுள்ள பட்டியலில் உள்ள முதல் மூன்று பொருட்களால் தீங்கில்லை ) மீதமுள்ள பொருட்கள் தான் தீங்கு விளைவிக்கின்றன.கொசுவர்த்தியில் 99% இவைகள் தான் உள்ளன மீதமுள்ள ஒரு சதவீதமே பைரத்ரின் !(ரசாயனங்களின் உதவியின்றி நீண்ட நேரம் பைரதிரின்-ஐ எரிய வைக்க ஏதாவது முறையிருந்தால் நன்றாக இருக்கும்.!)

கொசுவர்த்திகளில் நிகோடின் இல்லையே பின் இவை எப்படி சிகரெட்டுகளுடன் ஒப்பீடு செய்யப்படுகின்றன??

உண்மைதான் கொசுவர்த்திகளில் சிகரெட்டில் உள்ள நிகோடின் எனும் பொருள் கிடையாது..சிகரெட் தரும் தீமைகள் அத்தனையையும் சளைக்காமல் இந்த புகையும் தருகிறது.

கொசுவர்த்தி புகையில்....

1.பாலி அரோமடிக் ஹைட்ரோ கார்பன் (PHC)

2. ஃபார்மால்டிஹைடு(Formaldehyde)

3.அசிட்டாலிடைடு(acetaldehyde)

மற்றும் பென்சீன் ,தொலுவீன்

போன்ற பொருட்கள் உள்ளன இவை சிகரெட் புகையை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை...

இந்த புகை நுரையீரல்,கல்லீரல் போன்ற உடல் உள்ளுருப்புகளை பாதிக்கிறது

இதய நோய்களுக்கான வாய்ப்புகளையும் ,சர்க்கரை நோய்க்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.

ஆஸ்துமா,சுவாசக்கோளாறுகள்,புற்று நோய்க்கான காரணியாகவும் அமைகின்றன....

அம்மாடியோவ்...!

இயற்கை முறையில் கொசு விரட்டும் வழிமுறைகளை நோக்கி நாம் இனிமேலாவது நகருவோம்.. 
கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் கொசுவர்த்திகள் வெளியிடும் புகை 100 சிகரெட்கள் வெளியிடும் புகைக்கு சமமான பாதிப்பை ஏற்படுத்துகின்றனவாம்....

 
தண்ணிர் என்பது மனித வாழ்கைக்கு மிக முக்கியமானது. அப்படிபட்ட நீரை நாம் வீணவிரயம் செய்கிறோம், கோடை காலங்களில் தான் தண்ணிர் அருமை தெரியும்..

நாம்மால் முடிந்த அளவு நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம், மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்து, நிலத்தடி நீரை அதிகபடுத்துவோம்...


 


விவேகானந்தர்தான் சொன்னார்::::
பசு பாதுகாப்பு பிராச்சாரகர் ஒருவரிடம், “மனிதர்கள் பசியாலும், பட்டினியாலும் செத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவர்களின் உயிரைக் காப்பாற்ற ஒரு பிடி சோறுகூடத் தராமல் விலங்குகளையும், பறவைகளையும் காப்பாற்றுவதற்காக உணவை வாரி வாரித் தரும் சங்கங்களிடம் எனக்கு சிறிதுகூட அனுதாபம் கிடையாது. மனிதன் பட்டினியால் சாவதற்கு அவனது கருமங்கள் காரணம் என்று கரும நியதிக்கு நீ
ங்கள் வக்காலத்து வாங்குவதாக இருந்தால் இந்த உலகத்தில் எதற்காகவும் முயற்சி செய்வதோ, போராடுவதோ பயனற்ற வேலை. பசுக்களைக் காப்பாற்றும் உங்கள் வேலையும் அப்படிப்பட்டதுதான்” என்றார் விவேகானந்தர்.

இதைக் கேட்ட பசு பாதுகாப்பு பிராச்சாரகர் கொஞ்சம் வெட்கம் அடைந்தவராகத் தடுமாறினார். பிறகு சமாளித்துக் கொண்டு “நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், பசு நமது தாய் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றனவே” என்றார். சுவாமிஜி லேசாகச் சிரித்தபடி “ஆமாம். பசு நம் தாய்தான். எனக்குப் புரிகிறது. வேறு யாருதான் நம்மைப் போன்ற இவ்வளவு புத்திசாலிகளான பிள்ளைகளைப் பெற முடியும்” என்றார்.



 


thanks to 
களர்நிலம் [முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா தகவல்]

இன்று ஒரு தகவல் மற்றும்,
 சுவனப்ரியன் அண்ணா..


ur பிரதர் 

ரஹ்மான்FAYED./.....  

No comments:

Post a Comment

welcome ur comment,