Saturday, August 23, 2014

அம்பலமாகியுள்ள ஏரியா 51 இரகசியங்கள் –2

அம்பலமாகியுள்ள  ஏரியா 51 இரகசியங்கள்  – 2

இதே தலைப்பிலான முதல் பாகத்தை படித்து விட்டு இதனை படிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். முதல் பாகத்தை படிக்காதவர்கள் <<இங்கே>> சுட்டவும்...

அமெரிக்காவின் இரகசிய உளவு விமானமொன்றின் தயாரிப்பு தொடர்பிலும் அதன் பரிசோதனை தொடர்பிலுமே குறித்த Area 51 பகுதியானது அமெரிக்க அரசினால் 1955 ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டிருந்தது. இதன்பின் CIA, விமானப்படை அதிஉயர் தொழில்நுட்பம் கொண்ட வேவுபார்க்கும் விமானம் ஒன்றை உருவாக்க Lockheed என்கின்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து Area 51 பகுதியில் விமான கட்டுமான பணிகளை ஆரம்பித்தது.
U – 2 
U-2 programme என இத்திட்டம் அழைக்கப்பட்டிருந்ததுடன் தனித்துவமிக்க வகையில்உளவு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய U-2 என்கின்ற உளவு விமானத்தினைத்தயாரித்து பரிசோதிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறித்தவிமானமானது பனிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் சோவியத் யூனியன்மீதான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படத்து.


U-2 உளவு விமானத்தினைப் பொறுத்த வரையில் குறித்த விமானமானது அதிக உயரத்தில் பறக்கக் கூடியதாக இருப்பதுவே அதன் தனித்துவமிக்க சிறப்பம்சமாகும். குறித்த விமானமானது கிட்டத்தட்ட 60,000 அடிகளுக்கும் மேல் பறக்கக் கூடியது என்பதுடன் இவ்விமானத்தின் பறப்புக்களே பறக்கும் தட்டு குறித்த சந்தேகங்களைத் தோற்றுவித்தன என தற்போது தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது, 1957 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த விமானம் பரிசோதிக்கப்பட்டபோது U-2 விமானத்தின் தொழிநுட்பமானது அக்காலகட்டத்தில் கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு ஒரு பாரிய தொழிநுட்பமாகக் காணப்பட்டது. இதனால் இவ்வாறான தொழிநுட்பத்தினைக் கொண்டமைந்த விடயங்கள் அக்காலகட்டத்தில் உலகத்தில் இருந்திருக்கவே முடியாது என்கின்ற எண்ணம் மக்கள் மத்தியில் காணப்பட்டிருந்தது.

அத்துடன், குறித்த விமானமானது மிகவும் உயரத்தில் பறக்கும் போது அதுசாதாரண கண்களுக்குப் பெரும்பாலும் புலப்படமாட்டாது ஆயினும், குறிப்பிட்டஒரு உயரத்தில் பொதுமக்கள் U-2 வினைக் காணும் போது அது இனங்காணப்படமுடியாத ஒரு பொருள் (Unidentified Flying Object – UFO) பறப்பது போன்றதோற்றத்தினை அக்காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. மேலும், குறித்த விமானத்தின்பரிசோதனையானது பெரும்பாலும் மாலை நேரத்திலேயேமேற்கொள்ளப்படுவதனால், குறித்த நேரத்தில் விமானத்தின் மீது சூரியனின் ஒளிபட்டுத் தெறிக்கின்ற பிரகாசத்தினை அப்போதைய மக்கள் பறக்கும் தட்டு எனநம்பியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு பிற்பட்டகாலப்பகுதிகளில் OXCART, D-21 & F-117 எனும் உளவு விமானங்களும் Area 51 பகுதியில் பரிசோதிக்கப்பட்டமை பறக்கும் தட்டு தொடர்பான சந்தேகங்களுக்குதீனி போடுவதாக அமைந்தது.
OXCART





D 21




F – 117

இவ்வாறு வெளிவந்த வதந்திகளை அமெரிக்க அரசாங்கம் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது காரணம் இவ் அதி நவீன உளவு விமானங்கள் சோவியத் உடனான பனிப் போரில் அமெரிக்காவிற்கு தலை சிறந்த ஆயுதமாக விளங்கியது.இப்படி ஓரு ஆயுதம் இருப்பதையே வெளி உலகிற்கு குறிப்பாக சோவியத்திஇற்குகாட்டி கொள்ள விரும்பவில்லை. அகவே பறக்கும் தட்டுக்கள் சம்பந்தமானவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அதை ஒரு திசை திருப்பும் கருவியாகபாவித்து Area 51 பகுதியில் உண்மையான இரகசிய நடவடிக்கைகளை தொடர்ந்துமுன்னெடுத்தது CIA. மேலும் பறக்கும் தட்டுக்கள் மற்றும் வேற்றுக்கிரகவாசிகள்தொடர்பிலான சில பொய்யான தகவல்களை அவ்வப்போது திட்டமிட்டுவெளியிட்டு பொதுமக்களை ஒரு குழப்பமான நிலையில்  வைத்திருப்பதற்கானமுயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில், இவ்வளவு காலத்தின் பின்னர் இவ்வாறான ஒரு ஆவணத்தினை வெளியிட்டு இதுதான் Area 51இல் நடந்தது என்று சொல்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் எதனை உலகத்திற்கு வெளிப்படுத்த விரும்புகின்றது என்று தெரியவில்லை. அத்துடன் அண்மையில் பறக்கும் தட்டு தொடர்பில் விசாரணை செய்யும் பிரித்தானிய பிரிவு மூடபட்டது CIA இன் பிந்திய அறிகைய உறுதி செய்வதாகவே உள்ளது. ஆக மொத்தத்தில் பறக்கும் தட்டு என்று வதந்தியை உருவாக்கி முழு உலகையும் முட்டாளாக்கி உள்ளது CIA.

Area 51 இன் பல ஆராய்ச்சி நடவடிக்கைகள் பெரும்பாலும் நிலத்திற்கு அடியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதனால், உண்மையில் அங்கு என்ன நடந்தது?, மற்றும் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளியுலகத்தினருக்குத் தெரியவாய்ப்பில்லை. அத்துடன், உலகின் ஏனைய நாடுகளைப் பொறுத்தவரையில்  1950 காலப்பகுதிகளில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத பரிசோதனைகளை வெற்றிகரமாக அமெரிக்கா முன்னெடுத்திருக்கின்றது என்பது தற்போது உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதால், தற்போதைய காலகட்டத்தில் எம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்ட எவ்வளவோ விடயங்கள் அமெரிக்காவினால் வெற்றிகரமாகப் கண்டு பிடிக்கப்பட்டு பின் மறைக்கப்பட்டு இருக்கும் என்பதும் மறுக்க முடியாத ஒரு விடயமாகும், காலதத்தின் கைகளிலேயே இதற்கான விடை மறைந்துள்ளது.

வேற்றுகிரகவாசிகள் பற்றிய சில கட்டுரைகள் 




No comments:

Post a Comment

welcome ur comment,