Wednesday, August 27, 2014

ஏலியன்ஸ் 02 - காலப்பயணமும் தியரி ஒஃப் ரிலேட்டிவிடியும்.

ஏலியன்ஸ் 02 - காலப்பயணமும் தியரி ஒஃப் ரிலேட்டிவிடியும்...

PART -1

ஏலின்ஸ் முதல் பாகம் படிக்க இங்கே <<கிளிக்>> செயுங்கள்

போன பதிவில் 4ம் பரிமாணமாக கருதப்படும் காலம் தொடர்பாக பார்க்கையில்… அப்பரிமாணத்தை அறிமுகப்படுத்திய ஐன்ஸ்டைனின் தியரி ஒஃப் ரிலேட்டிவிடி தொடர்பான சில கருத்துக்களையும் எழுதியிருந்தேன். —————————————————————————–
முக்கியமாக, கூறியிருந்தேன்… ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது… நாம் இறந்தகாலத்துக்குதான் செல்ல முடியுமென… ஆனால், நண்பர் ஒருவர் … இல்லை எதிர்காலத்துக்குதான் செல்ல முடியுமென தனது கருத்தை கூறியிருந்தார். (நிரூபிக்க பட்ட உண்மை என கூறியிருந்தார்… ) நான் நெட்டில் அது சம்பந்தமாக (மேலோட்டமாக) தேடிய வரையில்… அப்படி எதுவுமே நிரூபிக்க படவில்லை.

ஆனால், காலம் மாறுபடும் என்பது நிரூபிக்க பட்டுள்ளது (time travel theory). ஒரே முறையில் செய்யப்பட்ட இரு கடிகாரங்களை ஒப்பிட்டு நிரூபிக்கப்பட்டது. அதாவது,
ஒரே மாதிரியான இரு கடிகாரங்களில்

 ( பொறிமுறைக்கடிகாரமல்ல) ஒன்றை, ஒரு விண்கலமொன்றினுள்ளும் இன்னொன்றை ஆய்வு கூடத்திலும் வைத்து… விண்கலத்தை பூமியை வேகமாக ( ஒளியின் வேகத்துடன் ஒப்பிடுகையில் மிக குறைவானதே…) சுற்ற செய்த போது… பல சுற்றுக்களின் பின்னர், மணிக்கூட்டின் வாசிப்பில் ஒரு சிறு வித்தியாசம் இருந்தது. இது தான் தற்சமையம் பெளதீக ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.

இங்கு போட்டுள்ள படங்கள்… நெட்டில் தியரி ஒஃப் ரிலேட்டிவிடி பற்றி தேடிய போது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக பட்ட படங்கள்… இதில் படம் மூலமாகவே அடிப்படை தியரி விளக்கப்பட்டுள்ளது.(!?)...

















—————————————————————————–
போன பதிவில் கூறிய… மனிதனால், விண்வெளியை நோக்கி விடப்பட்ட சவால் இது தான்…....

—————————————————————————–




—————————————————————————– 
இன்றைய மனிதனின் உருவம்… பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னான மனித உருவிலிருந்து வேறுபட்டது என்பது அனைவருக்கும் தெரியும். தொல்பொருள் ஆய்வாலர்களால் கண்டெடுக்கப்பட்ட பழைய எலும்புக்கூடுகளை பார்க்கு போது… வாய் பகுதி நீண்டதாகவும்… கீழ்த்தாடை தடித்ததாகவும்… கைகள் நீண்டதாகவும்… காணப்பட்டுள்ளது. காரணம், அன்றைய சூழ்னிலையில் அவ் மனிதன் வேட்டையாட மட்டுமே தெரிந்து இருந்தான். எனவே, வேட்டையாடுவதற்கு ஏற்றவாறு நீண்டகைகளும்… உணவை ( பச்சை) சிரமமின்றி உண்பதற்கு ஏற்றவாறு நீண்ட தாடையும் இருக்கின்றன.... 


பின்னர், காலம் செல்ல செல்ல மனிதன் அறிவை பயன் படுத்தி உணவை பதப்படுத்தி உண்ண தொடங்கியதும்… அந்த நீண்ட வலுவான தாடைகளின் அவசியம் அற்றுப்போனது. அதேபோல், வேட்டையாடுவதிலிருந்து பயிச்செய்கைக்கு மாறிய போது… கையின் பாவணையும் கணிசமான அளவுக்கு குறைந்து இருந்தமையால்… அதனது நீளமும் சற்று குறைந்தது. 

ஹீ…ஹீ… என்ன சம்பந்தமில்லாமல் இருக்குதே என்று நினைக்க வேணாம். சம்பந்தத்தோடதான் எழுதி இருக்கேன். என்ன சம்பந்தம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்…... 

முன்றாம் பாகம் படிக்க இங்கே  <<கிளிக்>> செய்யவும்....

No comments:

Post a Comment

welcome ur comment,