Friday, August 2, 2019

திப்பு சுல்தான் அணிந்த “ராம்” மோதிரம், மத வெறியர்களுக்கு சமர்ப்பணம்

திப்பு சுல்தான் அணிந்த “ராம்” மோதிரம்!

திப்பு சுல்தானின் மோதிரம் ஒன்று 2014 மே 22-ம் தேதி லண்டனில் உள்ள கிறிஸ்டி என்ற ஒரு தனியார் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு வந்தது,


அந்த மோதிரம் 1,45,000 யூரோவுக்கு ஏலம் போனது, இன்றைய இந்தியா மதிப்பில்  1.11 கோடி ரூபாய் மதிப்புல் ஏலம் போனது,

அந்த மோதிரத்தில் அப்படி என்ன சிறப்பு என்று தானே கேட்டுகிறர்கள்?

இரு மதங்களை பின்பற்றும் மதவெறியர்களுக்கு எதிரான மோதிரமே அது

ஆம் 

இந்துமதவெறியர்கள் திப்புவை அவதூறு செய்து வரலாற்றின் பக்கங்களிலிருந்து அவரது பணிகளை அழிக்க இன்றும் முயன்று வருகிறார்கள். அந்த அவதூறுக்கு இந்த மோதிரமே ஒரு பதிலை வைத்திருக்கிறது. 41.2 கிராம் எடையுள்ள அந்த மோதிரத்தில் இந்து கடவுளான ராமனின் பெயர் தேவநாகரி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இசுலாமிய மன்னன் எப்படி “ராம்” பெயர் தாங்கிய மோதிரத்தை அணிந்தான் என்று இந்துமதவெறியர்கள் மட்டுமின்றி, இசுலாமிய மதவாதிகளும் கோபம் அடையலாம்.



இஸ்லாமிய ஆண்களுக்கு தங்கம் அணிவது தவிர்க்கப்பட்டது, அப்படி இருக்க திப்பு சுல்தான் தங்கம் மோதிரம் அணிவது மட்டும் அல்லாமல், இம்மோதிரத்தில் ராம் என்கிற இந்து மத கடவுள் முத்திரை இருந்த்து என விவாதம் செய்யவும் தயங்கமாட்டார்கள்,



ஆனால் உண்மை அவரது இறுதி போர்களத்தில் மரணித்து கடந்து உடலில் இருந்த கரங்களில் இருந்து எடுக்கப்பட்ட மோதிரமே அது.


அம்மோதிரத்தை திப்பு சுல்தானுக்கு பரிசாக அளித்தவர் சிருங்கேரி சங்கராச்சாரியார், அவருக்கு திப்பு சுல்தானுக்கு இடையான நட்பிற்கான சாட்சி, அவர்களது இருவருக்கும் இடையான பந்தம் குரு சிஷ்யன் போன்று இருந்தது...

1792ம் ஆண்டு கடித்தில் திப்பு சுல்தானுக்கு தங்க ஆணிகலன்களை திப்புவிற்கு பரிசு அளித்தை பற்றி கடிதங்கள் மூலமே அறியலாம்,

திப்பு சுல்தானும் சிருங்கேரி சச்சிதானந்த சாமிகளும் அவர்கள் உறவை பற்றி மேலும் அறிய இங்கே  <<<கிளிக்>>> செய்வும்  


மைசூர் சமஸ்தானத்தில் முதல் தேவாலயம் எழுப்ப இலவச நிலம் கொடுத்தும் திப்பு சுல்தான் தான்..

அவரது ஆட்சி அதிகாரம் தீர்மானிக்கும் சக்தியாக இருந்த்து இந்து மத்தை சேர்ந்த திவான் பூர்ணியா இருந்தார்,

திப்பு சுல்தான் மறைவிற்கு ஆங்கிலேயர் அதிகாரம் சென்ற பின், மைசூர் அரசை வழி நடத்தி சென்றவரும் இவரே,

(இவர் தான் திப்பு சுல்தானை காட்டி கொடுத்தாக ஒரு அவப்பெயரும் உண்டு)

1799 மே 4-ம் தேதி நான்காவது மைசூர் போரில் திப்பு போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். அப்போது ஆட்சியளராக இருந்த ஆர்தர் வெல்லெஸ்லி இம்மோதிரத்தைக் கைப்பற்றினார். பிறகு அவர்களது குடும்பத்தில் இருந்து இன்னொரு யுத்த பிரபுவான ஃபிட்ஸ்ராய் சோமர்செட் என்பவரிடம் திருமணப் பரிசாக மோதிரம் கை மாறியது. அவர்களது வழித் தோன்றல்கள் இதனை ஏலத்திற்கு கொடுத்துள்ளனர். இந்தியா இந்த ஏலத்தில் பங்கெடுத்து மோதிரத்தை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று பலர் குரல் கொடுத்தனர், இந்தியா அரசு ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை , 



அம்மோதிரத்தை பெயர் கூறிப்பிட விரும்பாத ஒருவர், அதன் அடக்கவிலையை விட பத்து மடங்கு அதிகம் கொடுத்து வாங்கிவிட்டார் என ஏலம் நிறுவனம் அறிவித்தது (பெயர் கூறிப்பிட விரும்பாதவர் இந்தியராக இருந்தால் மகிழ்ச்சி),



உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு இந்திய மன்னன் மதநல்லிக்கனத்திற்கு எடுத்துகாட்டாக பயண்படுத்திய ஓரு மோதிரம் கூட நம்மவர்களால்(இந்தியர்களால்) வாங்கமுடியவில்லை என்கிற வருத்ததுடன்


ரஹ்மான்ஃபாயட்./...

திப்பு சுல்தான் பற்றி முழு வரலாறு அறிய இங்கே <<<கிளிக்>>> செய்யவும்  

No comments:

Post a Comment

welcome ur comment,