Sunday, September 3, 2017

'அபூஆஸியா' எழுதிய தஜ்ஜால் மஸீஹ் @ அந்தி கிறிஸ்து @ அசுவத்தம்மா மற்றும் இல்லுமினாட்டீகள் : 1

● தஜ்ஜால் மஸீஹ் @ அந்தி கிறிஸ்து @ அசுவத்தம்மா மற்றும்  இல்லுமினாட்டீகள் பற்றி தமிழகத்தின்  மூத்த  எழுத்தாளர்  'அபூஆஸியா' அவர்கள்  எழுதிய  (ஒரு ஆய்வின்) முழுமையான  கட்டுரை.
**************
ஏக இறைவனின் திருப்பெயரால்....
***************
நாம் வாழும் இந்த பூமி ஒரு நாள் அழிக்கப்படும் அதற்கு பின் இந்த பூமியில் வாழ்ந்து மாண்டவர்கள் எழுப்பப்படும். நீதி விசாரணை நடத்தப்படும் சொர்க்கம், நரகம் எனும் நிரந்தர வாழ்வு வழங்கப்படும் என்பதெல்லாம் ஆன்மீக நம்பிக்கை.

நீதி விசாரணையின்போது இருவிதமான கேள்வியே முக்கியமானதாக இருக்கும்.

1 )  இறைவனுக்கு கட்டுப்பட்டவர் யார்?

2 ) ஷைத்தானுக்கு கட்டுப்பட்டவர் யார் ?

இந்த பிரபஞ்சமும், அதிலுள்ள பூமியும், அதில் வாழும் மனிதர்களும் மற்றும் ஜீவராசிகளும் இறைவனால் படைக்கப்பட்டவையே என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இறைவனால் படைக்கப்பட்ட
ஷைத்தானுக்கு கட்டுப்பட்ட மனிதன் இந்த பூமி வாழ்க்கையில் சகலவித செளபாக்கியங்களோடு வாழ்கிறான்.

புத்திசாலி மனிதர்கள் பலர் ( ! ) ,தான் வணங்குவது ஷைத்தான் என்று தெரிந்து வணங்குகிறார்கள்.

இங்கு நான் சைத்தானை கடவுளாக கருதி, அறியாமையில் வணங்குபவர்களை கூறவில்லை.

மிகத்தெளிவாக தான் வணங்கும் ஷைத்தான் இறைவனுக்கு எதிரானவன் என்று தெரிந்தும்,

இந்த உலக வாழ்க்கையில் சைத்தானை வணங்கினால் அவன் மூலம் தனக்கு,

● பணபலமும்,
● ஆயுத பலமும்,
●அதிகார பலமும்

கிடைக்கும். அதனைக் கொண்டு இந்த உலகையே ஆளலாம் என்று கருதி அதன்படி இந்த பூமியை பல நூறு ஆண்டுகள் ஆண்டும் கொண்டிருக்கிறார்கள் ஒரு கூட்டத்தினர்.

அவர்களிடமிருக்கும் பொருளாதார பலமும், அதிகாரபலமும், ஆன்மீக பலமும், மிக மிக வலுவானது.

அவர்கள் தாயகம் பாபிலோன் பின் எகிப்து ஆகும். அங்கு பலம் பொருந்திய சக்தியாக அதிகார சக்தியாக இருந்தார்கள். அதற்கு பின் ரோமை அடைந்தார்கள்.

அங்கும் பலம் பொருந்திய அதிகார சக்தியாக இருந்தார்கள்.

பின் இங்கிலாந்து தேம்ஸ் ஆற்றங்கரையில் குடியேறினார்கள். அங்கிருந்து உலகில் மிகப்பெரும் சாம்ராஜ்ஜியத்தையே   ஏற்படுத்தி ஆண்டார்கள்.

இன்றும் ஆண்டு கொண்டேயிருக்கிறார்கள். இப்போது இவர்களின் ஆட்சியின் தன்மை உலகில் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தையும் ஆளும் வல்லமைக்கு
வந்துவிட்டது.

சைத்தான்களின் தலைவன்  (லூசிஃபர்) இப்லீசை வணங்கும் இவர்களுக்கு, ஜின்கள் எனப்படும் ஆவிகளிலுள்ள சைத்தான்கள் நண்பனாக,
ஆசானாக, கணவனாக, மனைவியாக, பிள்ளையாக, உறுதுணையாக இருந்து இவர்களின் வல்லமையை வலுவேற்றிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த உலகையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். இன்றைய ரகசிய தலைமை போல் ஏதும் இல்லாமல் பகிரங்க தலைவனை,

●அந்தி கிறிஸ்துவை
●அசுவத்தம்மாவை ?
●தஜ்ஜாலை ?

உலகின் அரசனாக்க வேண்டும். அவனை இந்த உலகம் ஆண்டவனாக ஏற்க வேண்டும்   என்னும் குறிக்கோளின் அடிப்படையில் செயலாற்றிக்
 கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தங்களுக்குத் தாங்களே வைத்துக்கொண்ட பெயர் "இல்லுமினாட்டி".

இந்த இல்லுமினாட்டிகள் இவ்வுலக அரசனாக தஜ்ஜாலை ஏற்க துணியும் காலகட்டம் இவ்வுலகின் இறுதிநாளின் ஆரம்ப கட்டம் ஆகும்.

தஜ்ஜாலின் வரவே உலக இறுதி நாளின் அடையாளம்.

இவ்வுலகின் இறுதி நாள் ஏற்படுவதற்கு முன் இருவகையான அடையாளங்களை நபி(ஸல்)
முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.
********************

முதல் வகை சிறிய அடையாளங்கள் எல்லாமே நடைபெற்றுக்கொண்டும் நடைபெற்றும் விட்டன.

பெரிய அடையாளங்கள்   10 வகையை குறிப்பிட்டுள்ளார்கள்.
_____________

அதில் முதலாவது தஜ்ஜாலின் வருகையாகும்.

இந்த தஜ்ஜாலின் வருகையை இல்லுமினாட்டிகள் ஆவலாக எதிர்பார்க்கின்றார்கள்

ஆனால் நபி(ஸல்) அவர்களும், அவர்களுக்கு முந்தைய எல்லா தூதர்களும் வேதனைப்பட்டுக்
 கொண்டேயிருந்தார்கள் காரணம் தஜ்ஜால் மனிதர்களை கொல்லும் கொலை காரன் இல்லை.

ஒவ்வொரு மனிதனின் ஈமானையும் ( இறை நம்பிக்கையையும்) கொள்ளையடிக்கும் அரக்கன் என்பதற்காக ஆகும்.

● அந்த தஜ்ஜால் எப்போது வருவான்?
● எப்படி வருவான்?
● எப்படி வழிகெடுப்பான் ?
● எப்படி அழிவான் ?

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் :
******************
மிகப்பெரும்பான்மை முஸ்லிம்கள் வாழும் நாடுகளான சிரியாவையும் துருக்கியையும் இல்லுமினாட்டி  (அமெரிக்க) படைகள் கைப்பற்றி ஆட்சி செய்வார்களாயின் தஜ்ஜால் வரும் நாட்களை எண்ணிக்கொண்டே இருக்க வேண்டும் என நபி(ஸல்) கூறுகின்றார்கள்.

சிரியாவை (அஃமாக் (அ) தாபிக்) (அமெரிக்க இல்லுமினாட்டி) ரோம் படைகள் தம் ஆட்சியின் கீழ் வைத்திருக்கும். அரபு குலத்திலிருந்து பனுதமீம் கூட்டத்தினரான முஸ்லிம் படையினர் மதினாவிலிருந்து புறப்பட்டு சிரியாவை கைப்பற்ற செல்வார்கள்.

இப்புவியில் உள்ள  மற்றவர்களை விட இந்த மதீனா பனுதமீம் படையினர் சிறந்தவர்களாக இருப்பார்கள். பனுதமீம் படையினரைப் பார்த்து  (இல்லுமினாட்டி அமெரிக்க) ரோம் படையினர் கூறுவார்கள்:

" எங்களில் சிலரை சிறைபிடித்து அடிமையாக்கி வைத்திருக்கும் இவர்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் நீங்கள்   தலையிடாதீர்கள்!"என்பார்கள்.

அதற்கு முஸ்லிம் படையினர் கூறுவார்கள் :
*************************

"உங்கள் வழிகெட்ட பேச்சை கேட்டு எங்களுக்குள் பிரிவினை பேசமாட்டோம்!"

என்று கூறி (இல்லுமினாட்டி) ரோம் படையை எதிர்த்து போர் புரிவார்கள். முஸ்லிம் படையில்,

மூன்றில் ஒரு பகுதியினர் ஓடிவிடுவார்கள்.

மற்றொரு பகுதியினர் போரில் வீரமரணம் அடைவார்கள்.

மூன்றாம் பகுதியினர் வெற்றி பெறுவர்.

இந்த வெற்றி வீரர்கள் அடுத்து துருக்கியின் மீது படையயடுத்து அங்கு ஆளும் (இல்லுமினாட்டி) ரோம் படைகளை வீழ்த்தி இஸ்தான்புல்லை கைப்பற்றுவார்கள்.

அந்நிலையில் ஒரு செய்திவரும்:
****************
"மதீனாவாசிகளே! உங்கள் மனைவி மக்களிடத்தில்
தஜ்ஜால் வந்துவிட்டான்" என்பதாகும்.

 இதை கேட்ட மதீனாவாசிகள் நாட்டுக்கு
திரும்புவார்கள். தஜ்ஜால் வந்துவிட்டான் எனும் செய்தி பொய் செய்தியாக இருக்கும். பிறகு
அவர்கள் சிரியாவிற்கு செல்வார்கள். (முஸ்லிம்)

முஸ்லிம் படையினர் சிரியாவிலிருக்கும்போது தஜ்ஜால் வெளிப்பட்டு உலகையே வலம் வருவான். தனது 40 நாள் பயணத்தில் இறுதியில் மதீனா எல்லையிலுள்ள   பமிரிகனாத் உவர் நிலத்தில் தன் விசுவாசிகளுடன் வந்து நிற்பான். (அஹ்மத்)

தஜ்ஜாலை கண்ட ஒரு முஸ்லிம்,

" நீ முன்னறிவிப்பு செய்யப்பட்ட வழிகேடன்
தஜ்ஜால்!"என்பார்.

தஜ்ஜாலோ அந்த முஸ்லிமைக் கொன்று பின் உயிர் கொடுத்து எழுப்பி தன் அற்புத சக்தியை 'அவன் விசுவாசிகளுக்கு' உறுதிபடுத்துவான்.

 தஜ்ஜாலை மதீனாவிற்குள் நுழைய விடாமல் வானவர்கள் தடுத்து சிரியா பக்கம் திருப்பி விடுவார்கள். சிரியாவிலுள்ள பனுதமீம் கூட்டத்தை எதிர்கொள்ள தஜ்ஜால் சிரியாவிற்குள் நுழைவான்.

இந்நிலையில் ஈஸா(அலை)
(இயேசு கிறிஸ்து அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக!)
அவர்களை இறைவன் பூமிக்கு அனுப்புவான்.

சிரியா நாட்டின் தலை நகர் 'டமாஸ்கஸ்' நகரிலுள்ள கிழக்கு பக்கமுள்ள பள்ளிவாசலின் வெள்ளை மினராவின் அருகில் ஈஸா(அலை) (இயேசு கிறிஸ்து அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக!) இறங்குவார்கள்.

குங்குமப்பூ நிறத்தில் ஆடை அணிந்தவராக இரு வானவர்களின் இறக்கைகளில் கை வைத்தவராக ஈஸா(அலை) இறங்குவார்கள்.

பள்ளிவாசலில் பனுதமீம் கூட்டத்தினர்களும் அவர்களோடு மஹ்தி(அலை) அவர்களும்
தொழுகைக்குத் தயாராக இருப்பார்கள்.

மஹ்தி  (அலை) அவர்களும்   ஈஸா  (அலை)
அவர்களும் ஒருவரை ஒருவர் அறிந்து, பனுதமீம் கூட்டமும் இணைந்து மகிழ்ச்சியில்
திளைப்பார்கள்.

ஈஸா(அலை) அவர்களை தொழுகைக்காக இமாமத் செய்யும்படி மஹ்தி(அலை) அவர்கள் கேட்டுக்கொள்வார்கள்.

 ஈஸா(அலை) (இயேசு கிறிஸ்து) அவர்களோ மஹ்தி
(அலை) அவர்களையே இமாமத் செய்ய சொல்லி பின் நின்று தொழுவார்கள்.

தொழுகை முடிந்ததும் பள்ளிவாசலின் வாயிலைத்திறக்க ஈஸா(அலை) இயேசு கிறிஸ்து அவர்கள்   கட்டளையிடுவார்கள்.

வாயில் திறக்கப்பட்டதும் தஜ்ஜால் தன் விசுவாசிகளுடனும், 70 ஆயிரம்  (இல்லுமினாட்டி) படையினருடன் பனுதமீம் கூட்டத்தினரை எதிர்கொள்ள நின்று கொண்டிருப்பான்.

ஈஸா(அலை)/ இயேசு கிறிஸ்து  அவர்களை எதிர்பார்க்காத தஜ்ஜால் ஈயம் உருகுவது போல் உருகி
அங்கிருந்து ஓடுவான்.

அவன் படைகளும் சிதறி ஓடும். தஜ்ஜால் அஃபிக் பள்ளத்தாக்கு வழியாக (இஸ்ரேல் டெல்லவிக்கு அருகிலுள்ள) லூத் எனும் ஊரில் ஒளிந்து கொள்வான்.

(சிரியா,இஸ்ரேல் எல்லைப்பகுதியிலுள்ள தென்மேற்கு திசையிலான நீண்ட
மலைப்பாதை பகுதிக்கு அஃபிக் பள்ளத்தாக்கு என்று பெயர்.) (இப்னுமாஜா).

ஈஸா  (அலை) / இயேசு கிறிஸ்து அவர்கள் தஜ்ஜாலை தேடி லுத் வருவார்கள். அங்கு அவனை ஈட்டியால் குத்தி படுகொலை செய்வார்கள். (அஹ்மது, திர்மிதி)

தஜ்ஜாலைக்கொன்றதன் மூலம் ரோமானிய யூத (இல்லுமினாட்டிகளின்) அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கபட்டு உலக முஸ்லிம்களின் கவலை அகற்றப்படும்  (முஸ்லிம்)

குறிப்பாக இதிலிருந்து விளங்கிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் :

1.தஜ்ஜால் உயிருடன் உள்ளான்.

2.துருக்கியும், சிரியாவும் இல்லுமினாட்டி அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டதும் தஜ்ஜால் வெளிப்படுவான்.

3.பூமியில் நாற்பது நாட்கள் தஜ்ஜால் சுற்றி வருவான்.

4.அவன் பயணம் பூமியிலுள்ள மக்களை வழிகெடுத்து தன்னை கடவுளாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்னும் சமாதான பயணமாக இருக்கும்.

5.அவன் தன்னை கடவுள் என்று கருதும் வகையில் அற்புதங்கள்  செய்வான்.

6.ஏற்பவர்கள் வளமாகவும், மறுப்பவர்கள் கைச்சேதமானவர்களாவும் ஆகும் அளவிற்கு அவன் செயல் இருக்கும்.

7.பொய் பித்தலாட்டம், நயவஞ்சகம், ஏமாற்றுதல் போன்ற காரியங்களால் உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்துவான்.

8.யார் மீதும் எந்த நாட்டின் மீதும் போர் தொடுப்பதில்லை. மதீனா எல்லையில் ஒரு முஸ்லிமைக் கொலை செய்வது மட்டுமே அவன் செய்யும் ஒரே கொலை.

9.உலகையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தன் அடிமை இல்லுமினாட்டிகளிடமிருந்து சிரியாவையும் துருக்கியையும் கைப்பற்றிய
முஸ்லிம் படையை எதிர்கொள்ள சிரியாவிற்குள் நுழைகிறான்.

10.சிரியாவில் ஈஸா(அலை) அவர்களை எதிர்பார்க்கவில்லை, ஈஸாவைக்
கண்டதும் இஸ்ரேலுக்குள் ஓடி ஒளிகிறான்.

11.ஈஸா(அலை) தஜ்ஜாலைத் துரத்திச் சென்று கொலை செய்கிறார்கள்.

12. தஜ்ஜாலை ஈஸா(அலை) எதிர்கொள்வதும் கொலை செய்வதும் உலகம் பாதிக்கும் விஷயமல்ல.

ஈஸாவும் மஹ்தியும் பனுதமீம் கூட்டமும் சார்ந்த விஷயம் ஆகும்.

உலக முஸ்லிம்கள் தஜ்ஜாலுக்கு எதிராக படைதிரட்ட வேண்டிய அவசியமுமில்லை.

போர் செய்ய வேண்டிய தேவையுமில்லை.

தஜ்ஜால் தன்னையன்றி எவரும் எவரையும் கொலை செய்யக்கூடாது என்று வாக்குறுதி வாங்கியுள்ளதாக ஹதீஸில் உள்ளது. (முஸ்லிம்)

ஆனால் பாதிப்பு எப்படி என்றால் தஜ்ஜாலின் 40 நாள் பயணத்தின் போது ஏற்படும் சோதனை ஈமானுக்கு ஆகும். இந்த சோதனைனைப் பற்றி தான் ஒவ்வொரு தூதரும் எச்சரிக்கை செய்தார்கள்.

ஒவ்வொரு தொழுகையிலும் நாம் அத்தஹியாத்தில்
************************

 “வ அஊது பிக மின்
ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்”

 “தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்து நான்
உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்”

என்று பிரார்த்திக்கிறோம். உலகிலுள்ள எல்லா முஸ்லிம்களையும் அவர்கள் எந்த
மூலையிலிருந்தாலும் அந்த தஜ்ஜால் குழப்பம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தஜ்ஜால் பூமியை சுற்றிவரும் 40 நாளில் பூமியில் கொலைகளோ, கொள்ளைகளோ, கற்பழிப்போ   அவன் செய்வதில்லை, மாறாக அவன் செய்யும் குழப்பம் ஒவ்வொரு முஸ்லிமுடைய ஈமானையும் சோதிக்கும்.

தஜ்ஜால் கூறினான் :
*********

தொடர்ந்து படிக்க <<இங்கே>> சுட்டவும்...

No comments:

Post a Comment

welcome ur comment,