Tuesday, August 18, 2015

குண்டாறு – அமைதியான சுற்றுலாத் தலம்

குண்டாறு – அமைதியான சுற்றுலாத் தலம்





 செங்கோட்டையில் இடதுபுறம்
ஐந்துகல் தொலைவில்
குண்டாறு அணை...!
சொந்த வாகனங்கள் அதோடு நிறுத்தம்!


அருகே அழகான பெரிய அணை 


அழகான சோலை வனமாக காட்சி 
அளிக்கும் ரம்மியமான அணையை  விட்டு 
வேறு பாதையில் சென்றால்     
   
மலை மேல் கரடுமுரடான பாதையில்
ஜீப் கார் பயணம்..!

பசுமையான சோலை வனதில்  
அற்புதமான  ட்ரக்கிங் அனுபவம்.

செல்லும் பாதையில் சிரிய காட்டாறு 
கண்ணாடி  போன்ற பளபளவேன்ற நீர்,  

       

முதல் அருவி அரசு அருவி..இலவசக் குளியல்!
அதுவரை நடந்தும் வரலாம்..பெண்களும் கூட!


அதற்கு மேலாக பாதையில்
ஆடி உலுக்கிச் சென்றால்..
அரைமணி நேரம் இரண்டுகல் தூரம்
அடுத்து அடுத்து இரண்டு அருவிகள்..
ஆர்ப்பாட்டமில்லா அருவிகள்..
ஏகாந்தமாக..
ஒரு சமயத்தில் ஒரு குழு மட்டுமே!
கொண்டாடத் தடை ஏதுமில்லை!

மலையில் இருக்கும் எஸ்டேட்களுக்கு சொந்தமானவை..!
கூட்டத்தைக் குறைக்க வேண்டி
அனுமதியும் வெகுமதியும் தேவை!
வண்டிக்கும் குளியலுக்கும்
இரண்டாயிரம் வரை தேவை..!
ஒரு குழுவிற்கு..!
சுமார் எட்டுநபர் வரை!
அல்லது ஒரு வாகனத்தில் வருபவர்க்கு!


பிரதான அருவிக் குளியல் அளவு
இல்லை எனினும்
பிரமிப்பூட்டும் அனுபவம் நிச்சயம்..!

முடிந்தால் சென்று வாருங்கள்..!
குழுவாகச் செல்வது நல்லது..!


குற்றாலம் சென்றால் மறக்காமல் செல்லுங்க 
 குண்டாறுக்கு  

No comments:

Post a Comment

welcome ur comment,