Friday, November 14, 2014

மெட்ராஸ் ஐ - க்கு சித்த மருந்து

மெட்ராஸ் ஐ நோய் காரணம் முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இதற்கு மெட்ராஸ் ஐ னு பெயர் வச்சிட்டாங்க. 1918-ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக இருப்பது ‘அடிநோ’ வைரஸ் எனும் கிருமி என கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டது.

இந்த மெட்ராஸ் ஐ பல வழிகளில் பரவக்கூடியது. பேக்டீரியா மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, வைரஸ் மூலம் பரவும் மெட்ராஸ் ஐ, அலர்ஜி மூலம் பரவும் மெட்ராஸ் ஐ இன்னும் பல வழிகள் இருக்கு.
மெட்ராஸ் ஐ பெரும்பாலும் இரண்டு முதல் ஐந்து நாட்களில் தானாகவே எதுவும் செய்யாமலும் குணமாகிவிடும். இதற்கென பெரிய சிகிச்சைகள் எதுவும் தேவை இல்லை.
கருப்பு கண்ணாடி போடுவதால் பிறருக்கு பரவாது என்பது தவறு . கண்ணாடி போடுவதால் அதிகபடியான சூரிய வெளிச்சம் மூலம் வரும் எரிச்சலை மட்டுமே தடுக்க மூடியும் .
ஒருவர் பயன்படுத்திய கண்ணாடியை மற்றவர் பயன் படுத்த கூடாது. கண்களை கசக்க கூடாது .

தும்மல் , இருமல் மூலமும் இந்த வைரஸ் பரவும் , எனவே வாயில் துணி வைத்து இருமவும் .
கண்களை குளிர்ந்த நீரில் அடிக்கடி கழுவவும் ,ஆதற்கு முன்பு கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவவும் .
நேருக்கு நேர் பார்த்தால் வராது . ஆனால் எதிர்ப்பு சக்தி குறைவனவர்களுக்கும் , குழந்தைகளுக்கும் அருகில் வந்தாலே மூச்சு காற்று மூலம் தொற்று ஏற்படும்.
இதற்கு சித்த மருத்துவத்தில் என்ன இருக்கு?
நந்தியாவட்டை பூ சுமார் 10 எண்ணிக்கை எடுத்து கண்ணை மூடிக்கொண்டு இமை மீது வைத்து கட்டி இரவில் படுத்து விட வேண்டும் ஒரே நாள் போதும் காலையில் பார்த்தல் மெட்ராஸ் ஐ போய்விட்டு இருக்கும்.
மற்றொரு மூலிகை
நேத்திர பூண்டு என்றும் நேத்திர மூலிகை என்றும் அழைக்க படுகிறது. இந்த இலைகளை பறித்து தண்ணீரில் அலம்பி துணியால் ஈரத்தை துடைத்து விட்டு சன்னமாக கத்தரித்து ஒரு செப்பு (செம்பு )பாத்திரத்தில் போட்டு மூலிகை முங்கும் அளவுக்கு சுத்தமான நல்லெண்ணெய் ஊற்றி வெயிலில் ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வைக்கவும்.இதற்கு சூரிய புடம் என்று பெயர். வெயில் காலங்களில் மூலிகை பறித்து சூரிய புடமிட்டால் எண்ணெய் நிறம் மாறிவிடும். சுத்தனமான காடா துணியில் வடிகட்ட இலைகள் மேலே நின்று எண்ணை மட்டும் கீழே இறங்கி விடும்.
இதை உபயோகிக்கும் முறை : இந்த எண்ணெயைக் கண்கள் ஒவ்வொன்றிலும்,2,3,சொட்டுக்கள் காலை ,மாலை இருவேளைகள் விட்டுக்கொண்டு வர ஆரம்ப கண் படலம் குணமாகும் .கண்களில் உண்டான 96 நோய்களும் குணமாகும்.கண் படலம் வந்த பிறகுதான் போட வேண்டுமென்பதில்லை.எல்லா வயதினருக்கும் உபயோகிக்கலாம்.கண் படலம் வராமல் தடுக்கும்.
இதை மெட்ராஸ் ஐ க்கு பயன் படுத்த ஓரிரு நாளில் குணம் தெரியும்.
அடுத்து மற்றொரு முறை ஒரு சுத்தி செய்த படிகாரம் ஒரு கிராம் 200 மிலி தண்ணீரில் நன்றாக கரையும் வரை கலக்கி விடவும். அப்படி படிகாரம் கலங்கிய தண்ணீரை 2,3,சொட்டுக்கள் காலை ,மாலை இருவேளைகள் விட்டுக்கொண்டு வர ஆரம்ப கண் படலம் குணமாகும். இந்த மெட்ராஸ் ஐ அப்படியே ஒரே நாளில் ஓடிவிடும்.

மூலிகை நன்றாக உள்ளது மெட்ராஸ் ஐ வந்த பிறகு சரி செய்யலாம். வராமல் இருக்க என்ன செய்வது ?
மேற்சொன்ன சொன்ன வழிகளை பயன் படுத்தி முன் எச்சரிக்கையுடன் இருக்கலாம் அல்லது மருந்துகளை முதலிலேயே கண்களில் விட்டு கொள்ளலாம் பக்க விளைவுகள் ஏதும் இல்லை.
மற்றொரு எளிய வழி வெறும் பஞ்சை தண்ணீரில் நினைத்து இரவில் கண்கள் மேல் கட்டிக்கொண்டு படுத்துவிட வேண்டியது தான். இது மெட்ராஸ் ஐ வராமல் இருக்க தடுக்கும் வழி
மேலும் பயணிப்போம் . . .

No comments:

Post a Comment

welcome ur comment,